இராமநாதபுரம்,அக்.23- மாணவர்கள் படிப்பை தவிர தவறான வழிகளுக்கு இடம் அளிக்கக்கூடாது என்று இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். குழந்தை பாதுகாப்பு அழகு, மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட காவல் துறை, குழந்தைகள் பாது காப்பு மையம் ஆகியோர் இணைந்து பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரி யருக்கான குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்பு ணர்வு நிகழ்ச்சி அக்டோபர் 19 புதனன்று சுவாட்ஸ் மேல் நிலைப் பள்ளியில் நடை பெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தலை மையேற்று பாலியல் வன் கொடுமை மற்றும் குழந்தை களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாணவ, மாணவிகளிடம் வழங்கி உரையாற்றினார். ஆட்சியர் பேசுகையில், மாணவர்கள் போதைப் பொருளின் தீமைகளை கண்டிப்பாக தெரிந்து வைத் துக் கொள்ள வேண்டும். போதைப் பொருள்களின் தீமைகளை உணர்ந்து அதனை பயன்படுத்தக் கூடாது. போதை பொருட் கள் பயன்படுத்துவது குற் றம், மேலும் ஒருவரின் மன நிலையை கடுமையாக பாதிக்கும். பாலியல் எண்ணத்து டன் ஒரு குழந்தையிடம் பேசு வது, ஒருவரின் அனுமதி யின்றி தவறான முறையில் தொடுவது குற்றமாகும். இது போன்ற செயல்கள் நடந்தால் உங்களின் விருப்ப முள்ள ஆசிரியர்கள் அல்லது தலைமை தலைமை ஆசி ரியரிடம் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். மாண வர்கள் நன்றாக படித்து வாழ்வில் முன்னேற வேண் டும் என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பி.சத்தியநாரா யணன், மாவட்ட குழந்தை கள் நலக்குழு தலைவர் பி. காயத்திரி , சைல்டுலைன் இயக்குநர் எம்.பூமிநாதன், தலைமையாசிரியர் ஞான லேட் சொர்ணகுமாரி மற்றும் மாணவ, மாணவிகள்; உட் பட பலர் கலந்து கொண்ட னர்.