அரியலூர், மார்ச் 9 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம் புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. கிராம கல்விக்குழு உறுப்பினர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவி செந்தமிழ்ச்செல்வி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தலைமையாசிரியர் சாந்தி தலைமை வகித்தார். அறிவியல் பட்ட தாரி ஆசிரியர் இலா.செங்குட்டுவன் வரவேற் றார். ஊராட்சி மன்ற தலைவர் செந்தமிழ்ச் செல்வி பெண் குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தை திருமண தடுப்பு, பெண் கல்வி முக்கியத்துவம், பெண் குழந்தைகளுக்கான அரசின் நலத்திட்டங்கள் பற்றி விளக்கிக் கூறினார். ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பள்ளி குழந்தைகள் அனைவருக்கும் கீரிடம் சூட்டி கௌரவிக்கப் பட்டனர். பெண் குழந்தைகளுக்கான விழிப்பு ணர்வு கும்மியாட்டம், தன்னம்பிக்கை நடனம், பெண் குழந்தைகளின் பெருமைகளை விளக்கும் நாடகம் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கணித பட்டதாரி ஆசிரியர் கு. செல்லதுரை நன்றி கூறினார். ஜெயங்கொண்டம் நகராட்சியில் நகர்மன்ற தலைவர் சுமதி சிவகுமார் தலை மையில் உலக மகளிர் தின விழா கொண்டா டப்பட்டது. போக்குவரத்து காவல் ஆய்வாளர் சாஹிராபானு, நகராட்சி ஆணையர் சுபா ஷினி, பொறியாளர் சித்ரா, கவுன்சிலர்கள், நக ராட்சி அலுவலக பணியாளர்கள், நகராட்சி தூய்மை பணியாளர்கள் உட்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. அரியலூர் ஐஎன்டியுசி தொழிற்சங்கம் ஸ்ரீ.கல்யாணி, பப்ளிகேஷன்ஸ் டிரஸ்டு உழைக்கும் பெண்கள் அமைப்பு, ரீடு தொண்டு நிறுவனம் இணைந்து மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. மாதர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பாக்கியம், மாவட்டச் செயலா ளர் பி.பத்மாவதி, மாவட்டப் பொருளாளர் டி. அம்பிகா மற்றும் ஆண்டிமடம் கமிட்டி உறுப்பி னர் எஸ்.சாந்தினி உட்பட சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கும்பகோணம்
கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி யில் உலக மகளிர் நாள் விழா கொண்டாடப்பட் டது. விழாவில் வரலாற்றுத் துறை பேராசிரியர் என்.ஆர்.விஜி வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் க.துரையரசன் தலைமை உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக கும்பகோணம் வரு வாய் கோட்டாட்சியரும் கும்பகோணம் அரசி னர் கல்லூரியின் முன்னாள் மாணவியுமான லதா சிறப்புரையாற்றினார். சிலம்பம், நடனம், பேச்சுப்போட்டி உள்ளிட்ட போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் மற்றும் சிறப்பு விருந்தினர் சான்றிதழ் வழங்கினர்.
பாபநாசம்
விசா அறக்கட்டளை சார்பில் மகளிர் தின விழா மெலட்டூர் அருகே சாலியமங்கலத்தில் நடைபெற்றது. விழாவிற்கு சாலியமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் கனிமொழி தலைமை வகித்தார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பெண்களுக்கான பரிசுகளை குமிளக்குடி கிராம நிர்வாக அலுவலர் ஜனனி தேவி வழங்கினார். ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளி தலைமையாசிரியை ஜோஸ்லின் வான்மதி, விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருவாரூர்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் மாவட்ட வருவாய் அலுவலகத்தில் பணிபுரியும் மகளிர் மற்றும் ஊழியர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.மாவட்ட வருவாய் அலுவ லர் ப.சிதம்பரம் வாழ்த்து தெரிவித்தார்.