districts

ஜெயங்கொண்டம் நகராட்சியில் நகர்மன்றத் தலைவர் பதவி விசிக-வுக்கு ஒதுக்கீடு

ஜெயங்கொண்டம், மார்ச் 4 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியின் தலைவர் வேட்பாளராக சுமதி  சிவகுமார் போட்டியிடுவார் என திமுக தலைமைக் கழக அனுமதியுடன் விடுதலை சிறுத்தை கட்சி தலைமை கழகம் அறி வித்துள்ளது.  ஜெயங்கொண்டம் நகராட்சியில் நகர்  மன்றத்தலைவர் பதவி விடுதலை சிறுத்தை கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், 10  ஆவது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற  சுமதி சிவகுமார் வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளார். இதில் சுமதியின் கணவர் சிவ குமார் கடந்த 2004 இல் விடுதலை சிறுத்தை கள் கட்சியின் நகர துணைச் செயலாளராக இருந்து பின்னர் நகர செயலாளராகவும் தற்போது மாவட்ட அமைப்பாளராகவும் பொறுப்பில் உள்ளார். சுமதி எம்ஏ பிஎட் ஆங்கில இலக்கியம் படித்துள்ளார். தனியார்  பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி தற்போது  வீட்டில் உள்ளார்.  அதேபோல், வரதராஜன்பேட்டை பேரூ ராட்சி தலைவர் பதவிக்கு வார்டு 1 இல் போட்டியிட்டு வெற்றி பெற்ற மார்கிரேட் அல்போன்சை வேட்பாளராக திமுக தலைமை அறிவித்துள்ளது. கடந்த 2016-ல் வார்டு உறுப்பினராக இருந்தவர். மார்கிரேட்டின் கணவர் அல்போன்ஸ் திமுக நகர செயலாளர்  ஆவார். துணைத் தலைவர் பதவியும் திமுக வில் ஒருவருக்கு வழங்கப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.