districts

img

பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காத நகராட்சி கழிவுநீர் வாய்க்காலை வெறும் கையால் சுத்தம் செய்யும் தூய்மைப் பணியாளர்கள்

அரியலூர், நவ.11 - அரியலூர் மாவட்டத்தின் பெரும்பா லான பகுதிகளில் இரவு முதலே மித மான மழை பெய்து வருகிறது. இந்நிலை யில் ஜெயங்கொண்டம் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் மழையினால் கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்படு வதை தடுக்கும் பணியில் தூய்மை பணி யாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.  மேலும் கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டால், அதனை சரி  செய்து மழைநீர் தேங்காமல்  நடவ டிக்கை எடுக்க நகராட்சி நிர்வாகத்தின் மூலம் தூய்மை பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலை யில் ஜெயங்கொண்டம் முக்கிய கடைவீதி 13-வது வார்டில் உள்ள கழிவு நீர் வாய்க்காலில் ஏற்பட்ட அடைப்பின் காரணமாக மழை நீருடன் கழிவு நீரும் சாலையில் சென்றது.  கழிவுநீர் வாய்க்காலை சுத்தம் செய்யும் பணியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அவர்களுக்கு தூய்மை பணிக் கான கையுறை, காலணி உள்ளிட்ட  எவ்விதமான பாதுகாப்பு உபகரணங் களும் வழங்கப்படாததால் வெறும் கை யால் சாக்கடையை சுத்தம் செய்வது,  வெறுங்காலுடன் சாக்கடையில் நடப் பது, சாக்கடை நீரை சுவாசிக்கும் அள விற்கு சாக்கடை கால்வாயில் குனிந்து  அடைப்புகளை எடுப்பது என ஆபத் தான முறையில் பணியாற்றுகின்றனர்.  பொதுமக்களை நோயிலிருந்து பாதுகாக்க பணியாற்றி வரும் தூய்மை  பணியாளர்களின் உயிரை பாதுகாக்க,  நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கை யும் எடுக்காதது மிகுந்த வேதனைக்குரி யது. எனவே தூய்மைப் பணியில் ஈடு படும் தொழிலாளர்களுக்கு, பாது காப்பு உபகரணங்கள் வழங்கி அவர்களையும் நோயிலிருந்து பாது காக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள்  தெரிவித்துள்ளனர்.