உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து
சென்னை.செப்.13- விநாயகர் ஊர்வலம் கொண்டாட்டங் களால் மக்களுக்கு என்ன பலன்? என்று கேள்வி எழுப்பிய உயர்நீதி மன்ற நீதிபதி, விநாயகரை வைத்து அரசியல் செய்கின்றனர் என்று கருத்து தெரிவித்துள்ளார். விநாயகர் சிலை வைப்பதற்கும், ஊர்வலத்துக்கும் அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில், இந்து மக்கள் கட்சி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், “விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் கவுந்தபாடியில் 22 இடங்களிலும், திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட 13 இடங்கள் மற்றும் கோவை மாவட்டம் சிறுமுகையில் 16 இடங்களி லும் சிலை வைத்து வழிபடவும், ஊர்வலங்களுக்கும் அனுமதி கோரி உள்ளூர் காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுக்கள் நிரா கரிக்கப்பட்டதற்கு எதிராகவும், விநா யகர் சிலை வைப்பதற்கும், ஊர்வ லத்துக்கும் அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பு புதன்கிழமை நடைபெற்றது. அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக் கறிஞர் தாமோதரன் கூறுகையில், தமிழக அரசு அரசாணை வெளியிட்டு அனைத்து அமைப்புகளும் சிலை வைக்க அனுமதிக்கப்படுகிறது. மேலும், அந்தந்த பகுதிகளில் சட்டம் -ஒழுங்கு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு சிலை வைப்பதற்கு அனு மதி கோரிய மனுக்கள் மீது உள்ளூர் காவல்துறையினர் அனுமதியளித்து வருகின்றனர். இந்த வழக்கை பொறுத்தவரை கடந்த ஆண்டு சிலை வைக்கப்பட்ட இடங்களில் இந்த ஆண்டும் சிலை வைக்க அனுமதி அளிக்கப்படும். ஈரோடு மாவட்டம் அன்னூரில் வசிக்கும் நபர் கோவை மாவட்டம் சிறுமுகையில் சிலை வைக்க அனுமதி கோரியுள்ளார், என்று தெரிவித்தார். மனு தள்ளுபடி இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், தமி ழக அரசின் அரசாணைக்கு மாறாக விநாயகர் சிலை வைப்பதற்கு அனு மதி கோரி மனுத்தாக்கல் செய்தால் அந்த மனு ஏற்கப்படாது எனக்கூறி மனுக்களை முடித்து வைத்தனர். மேலும், சிலைகளை வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்ல கடவுளே கேட்காத நிலையில், விநாயகர் சிலை ஊர்வல கொண்டாட்டங்களால் மக்க ளுக்கு என்ன பயன் என்று கேள்வி எழுப்பிய நீதிபதி ஆனந்த் வெங்க டேஷ், விநாயகரை வைத்து அரசியல் செய்யப்படுவதாக கூறினார். இவை அனைத்தும் தனது சொந்த கருத்து மட்டுமே என்று நீதிபதி குறிப்பிட்டார்.