court

img

இரு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை!

மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அலோக் ஆராதே மற்றும் பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விபுல் மனுபாய் பஞ்சோலி ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு வழங்க ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பேலா திரிவேதி மற்றும் சுதன்ஷு துலியா ஆகியோர் சமீபத்தில் ஓய்வு பெற்றதால், தற்போது 34 நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்றத்தில் இரண்டு காலியிடங்கள் உள்ளன. இதை தொடர்ந்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் இன்று நடைபெற்ற கூட்டத்தில் இரு நீதிபதிகளை பதவி உயர்வு செய்வதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன்படி, மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அலோக் ஆராதே மற்றும் பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விபுல் மனுபாய் பஞ்சோலி ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு வழங்க ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.