court

img

நீதிமன்றங்களில் காந்தி, திருவள்ளுவர் படங்கள் மட்டுமே வைக்கப்பட வேண்டும்

சென்னை, ஜூலை 23- தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நீதிமன்றங்களில் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவர் ஆகியோரின் உருவப்படங்களை மட்டுமே வைக்க வேண்டும் என சென்னை உயர் நீதி மன்றம் தெரிவித்துள்ளது. ஆலந்தூரில் புதிதாக கட்டப்பட்ட நீதிமன்ற வளாகத்தில் வைக்கப்பட்ட அம்பேத்கர் உருவப்படங்களை அகற்ற காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதி பதிக்கு சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. அம்பேத்கர் உருவப்படங்களை நீதி மன்றங்களில் வைக்க அனுமதி கோரி பல்வேறு வழக்கறிஞர் சங்கங்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் குறித்து ஏற்கனவே பிரச்சனையானது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி நடத்தப்பட்ட கூட்டத்தில், அனைத்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு இதன் சம்பந்தமான அனைத்து கோரிக்கைகளையும் நிராக ரித்தது. நீதிமன்றங்களில் தலைவர்களின் உருவப்படங்கள் வைத்தால் ஏற்படும் சட்டம் - ஒழுங்கு பிரச்சனைகளை கருத்தில் கொண்டு சிலைகள் வைக்கக் கூடாது என மார்ச் 11, 2010 அன்று நடந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.அதே போல் 2013 ஏப்ரல் 27ஆம் தேதி, அம்பேத் கர் உருவப்படத்தை அகற்ற ஆலந்தூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தை வற்புறுத்துமாறு காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட நீதிபதிக்கு அனைத்து நீதிபதி கள் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. மேலும் புதிதாக அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களிலும் அவரது படத்தை வைக்கக்கூடாது எனவும் தெரிவித்தது. மகாத்மா காந்தி, திருவள்ளுவர் உருவப்படங்கள் தவிர, வேறு எந்த தலைவரின் உருவப் படங்களையும் நீதிமன்ற வளாகத் திற்குள் வைக்கக்கூடாது எனவும் சமீபத்தில் அனைத்து நீதிபதிகள் அடங் கிய அமர்வு தெரிவித்திருந்தது. சென்னை உயர் நீதிமன்ற பதிவுத் துறையின் உத்தரவை மீறினால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் தகுந்த புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித் துள்ளது.