ராமர் கோயில் கட்ட உத்தரவிட்ட நீதிபதிகளுக்கு மோடி அரசின் பம்பர் பரிசு
புதுதில்லி, பிப். 13 - உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ். அப்துல் நசீர் ஓய்வுபெற்ற 40 நாட்களுக் குள் ஒன்றிய பாஜக அரசால் ஆந்திரப் பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டிருப் பது, நாடு முழுவதும் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. “இதுபோன்ற நியமனங்கள் இந்திய நீதித்துறை மீதான மிகப்பெரிய கறை” என்றும், “நாட்டின் சுதந்திரமான நீதித் துறைக்கு அச்சுறுத்தல்” என்றும் காங்கி ரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சி கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அத்துடன், நீதிபதி எஸ். அப்துல் நசீர், தார்மீக அடிப்படையில் ஆளுநர் பதவி யை ஏற்கக் கூடாது; நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலி யுறுத்தியுள்ளன. ஆந்திரா, ஜார்க்கண்ட் உட்பட 13 மாநிலங்களுக்கான புதிய ஆளுநர் களை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஞாயிற்றுக்கிழமை நியமனம் செய் தார். இவர்களில் 7 பேர் இடமாற்றமும், 6 பேர் புதிதாகவும் நியமனம்செய்யப்பட்ட னர். அந்த வகையில், ஆந்திரப் பிரதேச மாநிலத்திற்கு, கடந்த ஜனவரி 4-ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெற்ற எஸ். அப்துல் நசீர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஓய்வுபெற்ற 40 நாட்களுக்குள்ளாகவே அவருக்கு ஆளுநர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்தான், அப்துல் நசீரின் இந்த நியமனம், “இந்திய நீதித்துறை வர லாற்றில் ஒரு கறை” என்று எதிர்க்கட்சி கள் கடும் விமர்சனம் வைத்துள்ளன. தற்போது, ஆந்திர ஆளுநராக நிய மிக்கப்பட்டுள்ள அப்துல் நசீர் 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி 17 அன்று உச்சநீதி மன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்று ஜனவரி 4, 2023 வரை 5 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் உச்ச நீதிமன்ற நீதி பதி பதவியில் இருந்துள்ளார். இந்தக் காலத்தில் 13 முக்கியமான வரலாற்றுத் தீர்ப்புகளை வழங்கிய அமர்விலும் அவர் இடம்பெற்றுள்ளார்.
இந்து கூட்டுக் குடும்ப சொத்தில், மகன்களைப் போன்று மகள்களுக்கும் பங்குண்டு என 2020-ஆம் ஆண்டு தீர்ப்பளித்த 3 நீதிபதிகள் அமர் வில் அப்துல் நசீரும் ஒரு நீதிபதியாக இடம்பெற்றிருந்தார். எம்.பி. எம்எல்ஏ-க்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளின் பேச்சுரிமைக்கு 19(2) பிரிவில் இல்லாத கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க முடி யாது என்று தீர்ப்பளித்த அமர்விலும் அப்துல் நசீர் இருந்தார். இதேபோல ‘முத்தலாக்’ தொடர்பான வழக்கில், தனி நபர் சட்டத்தில் உச்சநீதிமன்றம் தலை யிடக் கூடாது என அப்போதைய தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹருடன் இணைந்து தீர்ப்பு அளித்திருந்தார். நாடாளுமன்றத் தில் முத்தலாக் தடைச் சட்டம் இயற்றப் படும் வரை ஆறு மாதங்களுக்கு கைது நடைமுறையை நிறுத்தவும் பரிந்துரை செய்திருந்தார். எனினும், மற்ற 3 நீதிபதி கள் ‘முத்தலாக்’ பெண்களுக்கு எதிரான அப்பட்டமான பாகுபாடு என்றும் இந்த நடைமுறை அரசியலமைப்பிற்கு எதி ரானது என்று தீர்ப்பளித்ததால், பெரும் பான்மை அடிப்படையில் அதுவே இறுதித் தீர்ப்பாக அமைந்தது. ஆதார் விவகா ரத்தில் ‘தனிமனித ரகசியம்’ என்பது அடிப் படை உரிமை என கடந்த 2017-இல் தீர்ப்பு வழங்கிய 9 நீதிபதிகள் கொண்ட அரசிய லமைப்பு அமர்விலும் நசீர் இடம்பெற்றி ருந்தார். இவையெல்லாம் ஒருபுறம் இருந்தா லும், பாபர் மசூதி வழக்கு, பணமதிப்பு நீக்க வழக்குகளில் மோடி அரசுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கிய அமர்விலும் அப்துல் நசீர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பாபர் மசூதி வழக்கில், 2019 நவம்பர் 9 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி யது. பாபர் மசூதி காலி இடத்தில் கட்டப்பட வில்லை என்பது உறுதி செய்யப்படு கிறது. அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடம் முழுக்க முழுக்க தங்களதுதான் என இஸ்லாமிய அமைப்புகள் நிரூபிக்க வில்லை. எனவே, ராம் லல்லா அமைப் பின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், சன்னி வக்பு வாரியத்திற்கு மசூதி கட்டிக் கொள்ள அயோத்தியில் 5 ஏக்கர் நிலம் அரசு வழங்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அப்போது, பாபர் மசூதி வழக்கை விசாரித்த அமர்வில் இடம்பெற்றிருந்த ஒரே முஸ்லிம் நீதிபதி எஸ். அப்துல் நசீர் ஆவார். எனினும், சர்ச்சைக்குரிய நிலத்தை ராமர் கோயில் கட்டுவதற்காக இந்து அமைப்பிடம் வழங்க உத்தரவிட்டார்.
அதேபோல 2016-ஆம் ஆண்டு நரேந்திர மோடி அரசு கொண்டுவந்த பண மதிப்பு நீக்கத்திற்கு எதிரான வழக்கை விசாரித்த அமர்விலும் இடம்பெற்றிருந்த நீதிபதி எஸ். அப்துல் நசீர், ‘ஒன்றிய அரசின் நடவடிக்கை செல்லும்’ என தீர்ப்பை வழங்கியிருந்தார். அதுமட்டுமல்லாமல், உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியில் இருக்கும்போதே, 2021 டிசம்பரில், ஆர்எஸ்எஸ் வழக்கறி ஞர் பிரிவான ‘அகில பாரதிய ஆதிவக்த பரிஷத்’தின் 16-ஆவது தேசியக் கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். “இந்திய சட்ட அமைப்பின் காலனித்துவ நீக்கம்” என்ற சங்-பரிவாரின் அரசியல் தலைப்பில் அவர் உரையாற்றினார். இந்த பின்னணியிலேயே, முன்னாள் நீதிபதி எஸ். அப்துல் நசீர், ஓய்வு பெற்ற 40 நாட்களுக்குள், நரேந்திர மோடி அர சால் ஆந்திர மாநில ஆளுநராக நியமித்து கவுரவிக்கப்பட்டுள்ளார். அவரின் நிய மனத்திற்கு காங்கிரஸ், இடதுசாரிக் கட்சி கள் உட்பட பல்வேறு கட்சிகளின் தலை வர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். “நீதிபதி அப்துல் நசீரை ஆளுநராக நியமித்த ஒன்றிய அரசின் முடிவு நாட்டின் அரசியலமைப்பு விழுமியங் களுக்கு ஏற்புடையதல்ல. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. அவர் (நசீர்) வாய்ப்பை ஏற்க மறுக்க வேண்டும். நாடு தனது சட்ட அமைப்பின் மீது நம்பிக்கை இழக்கக் கூடாது. மோடி அரசின் இத்த கைய முடிவுகளால் இந்திய ஜன நாயகத்தின் மீது கறை படிந்துள்ளது” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஏ.ஏ. ரஹீம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“ஓய்வு பெறுவதற்கு முன்பு வழங்கப் படும் தீர்ப்புகள், ஓய்வுக்கு பின்னர் பெற இருக்கும் பதவிகளால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது” என்று பாஜகவைச் சேர்ந்த ஒன்றிய முன்னாள் அமைச்சர் அருண் ஜெட்லி, கடந்த 2012-ஆம் ஆண்டு பேசிய வீடியோவை காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்ட பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “கடந்த 3-4 ஆண்டுகளாக இதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன” என்றும் தெரிவித்துள்ளார். “இரண்டு மாத காலத்திற்குள் மற்றொரு உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மாநில ஆளுநராக நியமிக்கப் பட்டுள்ளார். பெரும்பான்மை அரசுக்குத் தான் யாரைப் பற்றியும் அக்கறை இல்லை. ஆனால், இதனை ஏற்றுக் கொள்ள உங்களுக்கு வெட்கமாக இல்லையா மைலார்ட்?” என்று திரிணா முல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா, அப்துல் நசீருக்கே நேரடியான காட்டமான கேள்வியை முன்வைத்துள் ளார். காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வியும், ஜெட்லி பேச்சை சுட்டிக்காட்டியுள்ளார். “தற் போது நம்மிடையே இல்லாத உங்களு டைய (பாஜக) பெரிய தலைவர்களில் ஒருவரான அருண் ஜெட்லி நாடாளு மன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பலமுறை, ‘ஓய்வுக்கு பிறகு பெற இருக்கும் வேலை மீதான ஆசை, ஓய்வுக்கு முந்தைய தீர்ப்பை பாதிக்கிறது. இது நீதித்துறையின் சுதந்திரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாகும்’ என கூறி யிருந்தார். அந்த வகையில் “நாங்கள் (எதிர்க்கட்சிகள்)தனிநபர்களைப் பற்றி பேசவில்லை… கொள்கை அடிப்படை யில், நாங்கள் அதை எதிர்க்கிறோம்… கொள்கை அடிப்படையில், இது ஒரு பெரிய கறை மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்திற்கு பெரும் அச்சுறுத்தல் என நாங்கள் நம்புகிறோம்” என்று தெரி வித்துள்ளார்.
1958 ஜனவரி 5-இல் பிறந்த நீதிபதி அப்துல் நசீர் 2003-இல் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2017-இல் உச்சநீதிமன்றத்திற்கு பதவி உயர்த்தப்பட்டார். பல மூத்த நீதிபதிகள் இருக்கும் நிலையில், நசீருக்கு மட்டும் பதவி உயர்வு வழங்கப்பட்டது. உச்சநீதி மன்ற அமர்வில், பன்முகத்தன்மையை உறுதி செய்வதற்கான நடவடிக்கை யாகவே சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த அப்துல் நசீர் நியமிக்கப்பட்டு உள்ள தாக, கொலீஜியம் நசீரின் பதவி உயர்வை நியாயப்படுத்தியது. அவர் பதவியேற்பதற்கு ஒரு நாள் முன்பு, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் சக மூத்த நீதிபதி எச்.ஜி. ரமேஷ், சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யாக நியமிக்கப்பட்டார். ஆனால், தன்னை விடுத்து, நசீரை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமித்ததால், சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவியை எச்.ஜி. ரமேஷ் நிராகரித்தார். “உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்வ தில் மதம் அல்லது சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்க இந்திய அரசிய லமைப்புச் சட்டத்தில் குறிப்பிடவில்லை” என்று நீதிபதி எச்.ஜி. ரமேஷ் அப்போதைய தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹருக்கு தனது அதிருப்தியை கடிதமாகவும் எழுதினார். எனினும், அப்துல் நசீர் சுமார் 6 ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வும் பெற்று விட்டார். அடுத்ததாக தற்போது அவருக்கே ஆளுநர் பதவியும் கிடைத்துள்ளது. இதற்கு “அயோத்தி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பைத் தவிர்த்து வேறு காரணம் என்னவாக இருக்க முடியும்?” என்று பல்வேறு தரப்பிலும் கேள்விகள் முன்னுக்கு வந்துள்ளன. ஏனெனில், அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய அமர்வில் இடம்பெற்றிருந்த 5 நீதிபதிகளில் இது வரை 3 நீதிபதிகளுக்கு, பதவி வழங்கப் பட்டுள்ளது.
அயோத்தி வழக்கு அமர்வில் இடம் பெற்றிருந்த உச்சநீதிமன்ற தலைமை நீதி பதி ரஞ்சன் கோகோய், மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிலை யில், மற்றொரு நீதிபதி அசோக் பூஷன் ஓய்வுபெற்ற நான்கு மாதங்களுக்குப் பிறகு, 2021-இல் தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவ ராக நியமிக்கப்பட்டார். தற்போது அப்துல் நசீர் ஆந்திர ஆளுநராக பதவியேற்க இருக்கிறார். ஏனைய 2 நீதிபதிகளில், ஒருவர் தற்போது தலைமை நீதிபதியாக இருக்கும் டி.ஒய். சந்திரசூட் ஆவார். மற்றொருவர் ஏற்கெனவே தலைமை நீதிபதி பதவியை வகித்து ஓய்வு பெற்ற எஸ்.ஏ. பாப்டே ஆவார். இதனிடையே, “முன்னாள் நீதிபதிகள் கடந்த காலங்களில் எண்ணற்ற முறை வெவ்வேறு பதவிகளுக்கு நியமிக்கப் பட்டுள்ளனர். நமது அரசியலமைப்புச் சட்டமும் ஓய்வுக்குப் பின் நீதிபதிகள் நியமனத்திற்கு எதிராக எதுவும் கூற வில்லை” என்று பாஜக மாநிலங்களவை உறுப்பினர் அனில் பலூனி சமாளித்துள்ளார்.