மதுரை, நவ. 18 - அரசுப் போக்குவரத்துக் கழக அனைத்து தற்காலிக ஓட்டுநர், நடத்து நர், தொழில்நுட்ப பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் ஊதியம் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் சங்கத்தின் (சிஐ டியு) மதுரைக் கோட்டப் பொதுச்செய லாளர் ஏ. கனகசுந்தர், உயர் நீதிமன்ற கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “மதுரை கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் 500 தற்கா லிக ஓட்டுநர், நடத்துநர்கள், தொழில் நுட்ப பணியாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தில் நிர்ணயம் செய்யப்பட் டுள்ள ஊதியத்தை விட குறைந்த ஊதி யம் வழங்கப்படுகிறது. இதனால் தற்காலிக ஓட்டுநர், நடத்துநர், தற்கா லிக பணியாளர்களுக்கு சட்டப்படி யான குறைந்தபட்ச ஊதியத்தை வழங்கவும், இதனை 1.4.2019 முதல் அமல்படுத்தவும் உத்தரவிட வேண் டும்” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு, நீதிபதி பட்டு தேவா னந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஏ. ராகுல் ஆஜராகி வாதிட்டார்.
இதையடுத்து, “அரசுப் போக்கு வரத்துக் கழகத்தில் குறைந்தபட்ச ஊதிய சட்டம் அமல்படுத்தாமல் இருப்பதை ஏற்க முடியாது” என்றும், “அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்கள் 31.12.2018-இல் அரசு பிறப்பித்துள்ள அரசாணை மற்றும் 18.3.2019-இல் ஏற்பட்ட உடன்படிக்கை அடிப்படை யில் குறைந்தபட்ச ஊதியம் பெறத் தகுதியானவர்கள்” என்று தீர்ப்பளித்த நீதிபதி பட்டு தேவானந்த், “மதுரை அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் அனைத்து தற்காலிக ஓட்டுநர்கள், நடத்துநர்கள், தொழில் நுட்பப் பணியாளர்களுக்கு, தொழி லாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அரசாணை மற்றும் 2019 உடன் படிக்கை அடிப்படையில் குறைந்த பட்ச ஊதியத்தையும் மற்றும் 1.4. 2019 முதல் ஊதிய நிலுவை தொகை யையும் எட்டு வாரத்தில் வழங்க வேண் டும்” என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.