புதுதில்லி,மே.15- கர்னல் சோபியா குரேஷி குறித்து சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்த ம.பி அமைச்சரை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூரில் முக்கிய பங்காற்றிய இந்திய ராணுவ அதிகாரி சோபியா குறித்து அவரை 'பயங்கரவாதிகளின் சகோதரி' எனக் கூறிய பாஜக அமைச்சர் குன்வர் விஜய் ஷா மீது வழக்கு பதிவு செய்ய ம.பி உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து உத்தரவிட்டிருந்தது. அதன்பேரில் அவர்மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்ய கோரி விஜய் ஷா உச்சநீதிமன்றத்தில் அளித்த மனு மீதான விசாரணையில் “அமைச்சராக இருக்கும் ஒருவர் இவ்வாறு பொறுப்பற்ற முறையில் கருத்துக்களை தெரிவிக்கக்கூடாது” என பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய மறுத்து மாநில உயர்நீதிமன்றத்தையே அணுக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.