court

img

370 ரத்து வழக்கில் சட்டப்பூர்வமான வாதங்கள் எங்கே?

ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 மற்றும்  35A ரத்து செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், மோடி அரசானது  நீதிமன்றத்தை, நாடாளுமன்றமாக மாற்றிவிட்டதாக ஜம்மு - காஷ்மீர் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

தொகுப்பு : அ.மாரிமுத்து

ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்துசெய்து குடியரசுத் தலைவர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை,  உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சய் கிஷண் கவுல், சஞ்சீவ் கண்ணா, பி.ஆர். கவாய் மற்றும் சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் நடைபெற்று வருகிறது. அரசியலமைப்புப் பிரிவு 370 தேவையா, இல்லையா? என்ற அரசியல் விவாதங்களுக்குள் செல்லப்போவதில்லை. மாறாக, ஜம்மு - காஷ்மீர் குடிமக்களின் அனுமதியின்றி 370 சட்டப்பிரிவை ரத்து செய்ய முடியுமா?; குடியரசுத் தலைவர் உத்த ரவு மூலம் 370 ரத்து செய்யப்பட்டதில் அரசியலமைப்புச் சட்டம் மீறப்பட்டிருக்கிறதா? என்ற கோணத்தில் மட்டுமே விசாரணை நடைபெறும் என முன்கூட்டியே அறிவித்து, அதன்படியே உச்ச நீதிமன்றம் விசாரணையை நடத்தி வருகிறது.

குடியரசுத் தலைவர் உத்தரவு செல்லுமா?செல்லாதா?

ஜம்மு-காஷ்மீர் வழக்கில் மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான கபில் சிபல், கோபால் சங்கர நாராயணன், கோபால் சுப்பிர மணியம், ராஜீவ் தவான், துஷ்யந்த் தவே,  சேகர் நாப்தே, தினேஷ் திவேதி உள்ளிட்ட  மூத்த வழக்கறிஞர்களும், 370-ஐ ரத்து செய்யும் குடியரசுத் தலைவர் உத்தரவின் செல்லுபடித் தன்மை குறித்து மட்டுமே, பல்வேறு சட்டப்பிரிவுகளை விளக்கி ஆழமான வாதங்களை வைத்தனர்.  அதைத் தொடர்ந்து, ஒன்றிய அரசுத் தரப்பில், அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கட ரமணி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர் ஆஜராகி வாதங்களை முன் வைத்து வருகின்றனர். ஆனால், இவர்கள் 370-ஐ ரத்து செய்யும் குடியரசுத் தலைவரின் அதிகாரம் குறித்தான சட்டப்பூர்வ வாதங் களை வைப்பதற்குப் பதில், அரசியல் காரணங்களை முன்வைத்து வருகின்றனர்.

அரசியல்  அடிப்படையிலான வாதம்

புதனன்று (ஆக. 30) நடைபெற்ற விசாரணையின்போது, ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு காஷ்மீரின் கல்வித் தரம் உயர்ந்து வருகிறது. தொழிலதிபர்கள் அங்கு பெருமளவில் முத லீடு செய்து வருகின்றனர். சுற்றுலா அபார வளர்ச்சி அடைந்து வருகிறது. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தேசிய மாநாடு, மக்கள் ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகள் எதிர்க்கின்றன. ஆனால் காஷ்மீர் மக்கள் முழு மனதோடு வரவேற்கின்றனர். வாழ்வு ரிமை, சொத்துரிமை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் கிடைத் திருப்பதால் காஷ்மீர் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு காஷ்மீரில் பொதுமக்கள், பாதுகாப்பு படை வீரர்களின் உயிரிழப்பு கணிசமாக குறைந்திருக்கிறது. கல்வீச்சு சம்பவங்கள், முழு அடைப்பு உள்ளிட்ட போராட்டங்கள் அரிதாகி வருகின்றன. இதன் காரணமாக காஷ்மீர் பகுதி வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது” என அரசியல் அடிப்படையிலான சமாளிப்புகளையே செய்தனர்.

யூனியன் பிரதேசமாக  நீடிக்க முடியாது

இவற்றை கேட்டுக்கொண்ட அதே நேரத்தில், “ஜம்மு - காஷ்மீரை நீண்ட நாட்களுக்கு யூனியன்பிரதேசமாக வைத்திருக்க முடியாது; தேர்தலை அடிப்படையாக கொண்ட ஜனநாயகம் இல்லாமல் இருப்பதையும் காலவரை யின்றி அனுமதிக்க முடியாது” என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திர சூட் தெரிவித்தார். மேலும், “ஜம்மு - காஷ் மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கு வது குறித்தும், தேர்தல் மூலமான ஜனநாய கத்தை கொண்டு வருவது குறித்தும், அரசிடம் ஆலோசித்து அறிக்கை அளிக்குமாறும்  தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் உத்தர விட்டார்.

‘தேர்தல் மட்டும் நடத்துவதற்கு தயார்’

அதன்படி, ஆகஸ்ட் 31 வியாழனன்று 13-ஆவது நாள் விசாரணையின் போது, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா  ஆஜராகி பதிலளித்தார். அப்போது, “ஜம்மு - காஷ்மீரில் எப்போது வேண்டுமானாலும் தேர்தலை நடத்த தயாராக உள்ளோம். தேர்தல் ஆணையம்தான் அதுபற்றி முடிவு செய்ய வேண்டும். வாக்காளர் பட்டியலைத் தயாரிக்கும் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன. இந்த பணி முடிவடைய ஒரு மாதம் அல்லது அதற்கு மேல் ஆகலாம். ஜம்மு - காஷ்மீர் தேர்தல் 3 கட்டங்களாக நடத்தப்படும். முதலில் பஞ்சாயத்து அளவிலும், அதை தொடர்ந்து நகராட்சி அளவிலும் பின்னர் சட்டசபை தேர்தலும் நடைபெறும். லடாக் மலை மேம்பாட்டு கவுன்சிலுக்கான தேர்தல், லே பகுதியில் முடிந்து விட்டது. கார்கில் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறும். ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து எப்போது தரப்படும் என காலவரையறை சொல்ல முடியாது. முழு மாநில அந்தஸ்து வழங்கப்படுவதற்கு முன்பாக ஜம்மு - காஷ்மீரை தயார்படுத்த வேண்டியுள்ளது. ஜம்மு - காஷ்மீர், லடாக் என யூனியன் பிரதேசங்களை உருவாக்கியது தற்காலிக நடவடிக்கைதான். 370-ஆவது பிரிவை நீக்கிய பிறகு 2018 உடன் ஒப்பிடும்போது தீவிரவாதம் தொடர்பான செயல்கள் 45.2 சதவிகிதம் குறைந்துள்ளது. ஊடுருவல் 90.2 சதவிகிதம் குறைந்துள்ளது” என்று துஷார் மேத்தா கூறினார்.

ஜம்மு - காஷ்மீர்  கட்சிகள் கண்டனம்

இந்தப் பின்னணியில், ஒன்றிய பாஜக அர சின் நிலைபாட்டை ஜம்மு - காஷ்மீர் எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் காலக்கெடு எதை யும் கூறமுடியாது என்று ஒன்றிய அரசு அளி த்துள்ள பதில் “ஏமாற்றம் அளிக்கிறது” என்று  ஜம்மு - காஷ்மீர் மக்கள் மாநாட்டு (JKPC) தலைவர் சஜ்ஜாத் லோன் தெரிவித்துள்ளார். 

வளர்ச்சி குறைந்தால் யூனியன் பிரதேசமா?

“இந்த அறிக்கை 2019-இல் நாடா ளுமன்றத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை போன்றே உள்ளது. அத்துடன் சட்டப் பூர்வமான வாதங்களுக்குப் பதில், பல அர சியல் வாதங்கள் நீதிமன்றத்தில் செய்யப் படுகின்றன. உதாரணமாக, வளர்ச்சி மற்றும் வேலையின்மை பற்றிய அரசாங்கத்தின் வாதங் களைக் கருத்தில் கொண்டால், இந்த இரண்டு குறிகாட்டிகளிலும் பின்தங்கியிருக்கும் இந்தியாவின் எந்த மாநிலமும் யூனியன் பிரதேசமாக மாற்றப்படும் என்று அர்த்தம் கொள்ளலாமா? இதுதான் இனிமேல் புதிய விதிமுறையாக இருக்கப் போகிறதா?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேர்தல் பிரச்சனையாக சுருக்க வேண்டாம்

ஜம்மு - காஷ்மீர் தேசிய மாநாட்டு (JKNC)  செய்தித் தொடர்பாளர் இம்ரான் நபி  தார், அளித்துள்ள பேட்டி ஒன்றில், “சொலி சிட்டர் ஜெனரலின் அறிக்கை, முக்கியப் பிரச்ச னையை, வெறுமனே தேர்தலுக்கான அழைப் பாக குறைத்து மதிப்பிட முயற்சிப்பதன் மூலம் கவனத்தை திசை திருப்பும் நோக்கம் கொண்டதாக உள்ளது” என்று விமர்சித்துள்ளார்.

பாஜக-வின் வாலாக மாறிய தேர்தல் ஆணையம்

உரிமைகளின் முக்கியப் பகுதிகள்தான் என்றாலும், தேர்தல்கள் மற்றும் மாநில அந்தஸ்து எங்களின் முன்னுரிமை அல்ல என்று மக்கள் ஜனநாயகக் கட்சி யின் (PDP) செய்தித் தொடர்பாளர் சுஹைல்  புகாரி கூறியுள்ளார். இந்திய தேர்தல் ஆணை யம், பாஜக-வின் நீட்சியாகவே இருந்து ள்ளதே தவிர, சுதந்திரமான அமைப்பு போல்  இல்லாமல் இருப்பதை நாங்கள் ஏற்கெனவே அறிந்துள்ளோம். அவர்கள் இப்போதும் என்ன செய்யப்போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றம் விரைவில் முடிவெடுக்கும் என்று தமது கட்சி நம்புவதாகவும் புஹாரி கூறியுள்ளார்.