court

img

புல்டோசர் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவு

புதுதில்லி, செப்.17- புல்டோசர் கொண்டு வீடுகளை இடிக்கும் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்ததோடு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
   உ.பி உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் சிறு, சிறு தவறுகளுக்காகக் கைதானவர்களின் வீடுகளை புல்டோசர் வைத்து இடிக்கும் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததோடு நடவடிக்கைக்கு முன் உரிய அனுமதி பெற வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
முறையாக அலங்கரிக்கப்படாத கட்டுமானங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது எனவும் நீதிபதிகள் விளக்கம் அளித்துள்ளனர். மேலும் இந்த வழக்கு அக்டோபர் 1ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.