court

img

கணவர் வாங்கும் சொத்தில் இல்லத்தரசிக்கும் சமபங்கு உரிமை

சென்னை, ஜூன் 24- குழந்தைகளை கவனிப்பது, குடும்  பத்தை நிர்வகிப்பது என விடுமுறையில்லா மல் இல்லத்தரசி பார்க்கும் வேலை, 24 மணி  நேர வேலை எனவும், அதை கணவனின் எட்டு மணி நேர உத்தியோகத் துடன் ஒப்பிட  முடியாது எனவும் சென்னை உயர் நீதி மன்றம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டில் வேலை பார்த்து அனுப்பி  வைத்த தொகையை பயன்படுத்தி வாங்கிய சொத்துக்களில் மனைவிக்கு உரிமை யில்லை எனக் கூறி கணவன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி  கிருஷ்ணன் ராமசாமி, கணவன் சம்பாதிப்ப தும், மனைவி குழந்தைகள் குடும்பத்தை கவனிப்பதும் பொதுவானது எனவும், குடும்பத்தை மனைவி கவனிப்பதால் தான்  கணவரால் தனது பணியை செய்ய முடி கிறது என்பதால், கணவனின் சம்பாத்தி யத்தில் வாங்கும் சொத்தில் இல்லத்தர சிக்கும் சமபங்கு பெற உரிமை உள்ளது எனத் தெரிவித்துள்ளார். குடும்பத்தையும், குழந்தைகளையும் கவனிப்பதன் மூலம், குடும்ப மருத்து வர் போல, 24 மணி நேரமும், விடுமுறை யில்லாமல் ஒரு இல்லத்தரசி மேற்கொள் ளும் பணியை, சம்பாத்தியத்திற்காக கண வன் பார்க்கும் எட்டு மணி நேர வேலை யுடன் ஒப்பிட முடியாது என்றும் நீதிபதி தனது உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளார். கணவனும், மனைவியும் குடும்ப வாக னத்தின் இரட்டை சக்கரங்கள் எனக் குறிப் பிட்ட நீதிபதி, கணவன் சம்பாத்தியம் மூலம்  தன் பங்கை வழங்குகிறார். இல்லத்தரசி யாக இருக்கக்கூடிய மனைவி குடும்பத்தை கவனித்து தன் பங்களிப்பை வழங்குகிறார். எனவே சொத்தில் மனைவிக்கும் உரிமை உள்ளது என நீதிபதி உத்தரவிட்டார். குடும்பத்தை கவனிக்கும் இல்லத்தரசி கள், நேரடியாகவோ, மறைமுகமாகவோ அளிக்கும் பங்களிப்பை அங்கீகரித்து எந்த  சட்டமும் இயற்றப்படவில்லை எனத் தெரி வித்த நீதிபதி, அந்த பங்களிப்பை நீதி மன்றம் அங்கீகரிப்பதற்கு எந்த சட்டமும்  தடை விதிக்கவில்லை என்றும் குறிப்பிட் டுள்ளார்.