பிரபல இந்தி இயக்குநர், நடிகர் அமீர்கான் பல அரிய திரைப்படங் களை உருவாக்கிக் கவனம் பெற்றவர். அவர் தற்போது தற்காலிகமாக நடிப்பிலிருந்து விலகி, ஓய்வெடுக்கப் போவதாகவும் அதன் பிறகு விரைவிலேயே புதிய படமொன்றைத் தயாரிக்கப்போவதாகவும் கூறியுள்ளார். நடிப்பிலிருந்து விலகியிருக்கிற காலத்தில் தனது குடும்பத்துடன், அம்மா மற்றும் குழந்தைகளுடன் நாட்களைக் கழிக்கப்போவ தாக அவர் கூறினார். அதனால் தனது அமீர்கான் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறு வனம் சார்பில் உருவாக இருக்கிற சாம்பி யன்ஸ் படத்தில் தான் நடிக்கப்போவதில்லை என்றார் அவர். தனக்கு பதிலாக யார் நடிக்கப்போகிறார் என்பதையும் கலைஞர் களைப் பார்த்துப் பேசிய பிறகுதான் கூற முடியும் என்று கூறியுள்ளார். ஹாலிவுட் க்ளாசிக் படமான ‘ஃபாரஸ்ட் கம்ப்’ படத்தின் அதிகாரப்பூர்வ இந்தி தழுவ லாக அமீர்கான் நடிப்பில் வெளியான படம் ‘லால் சிங் சத்தா’. கரீனா கபூர் நாயகியாக நடித்திருந்த இப்படம் பான் இந்தியா முறை யில் வெளியானது. ‘பாய்காட்’ ட்ரெண்டி ங்கால் படம் பெரிய அளவில் வசூலில் முன்னேறாமல் தேக்கமடைந்து நஷ்டத்தை சந்தித்தது. இதையடுத்து அமீர்கானின் அடுத்த படம் குறித்து ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அண்மையில் தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமீர்கான் தனது அடுத்த படத்தின் பெயர் ‘சாம்பியன்ஸ்’ என தெரி வித்தார்.
அவர் தான் நடிப்பார் என எதிர்பார்த்தி ருந்த நிலையில், தற்போது நடிப்பிலிருந்து தற்காலிகமாக விலகி இருக்கப்போவதாக அறிவித்துள்ளார். மேலும், ‘சாம்பியன்ஸ்’ படத்தை தனது அமீர்கான் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்க இருப்பதாக தெரிவித்துள் ளார். மேலும், படம் நடிப்பதிலிருந்து விலகி குடும்பத்துடன் இருக்க விரும்புவ தாக தெரிவித்துள் ளார். இதுதொடர் பாக நிகழ்ச்சி ஒன்றில்பேசியுள்ள அமீர்கான், ‘‘சாம்பியன்ஸ் அற்புதமான ஸ்கிரிப்ட். அழகான கதை. மனதைக்கவரும் அழகான படம் இது. ஆனால் நான் நடிப்பிலிருந்து சிறிது காலம் விலகியிருக்க விரும்புகிறேன். நான் என் குடும்பத்துடன் இருக்க விரும்புகிறேன், என் அம்மா மற்றும் என் குழந்தைகளுடன் இருக்க ஆசைப்படு கிறேன். நான் ‘சாம்பியன்ஸ்’ படத்தைத் தயாரிப்பேன். ஏனென்றால்நான் படத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன். நான் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் மற்ற எந்த நடிகர்கள் நடிக்க விரும்புகிறார்கள் என்பதை அறிய அவர்களை அணுகுவேன்’’ என தெரிவித்துள்ளார்.