cinema

img

பாவனா கூறுகிறார்: “சைபர் தாக்குதல் ஒரு தொழிலாகிவிட்டது...” - சோழ. நாகராஜன்

இணையதளம் மூலமாக பிறரை மிரட்டுவதும் அவர் புகழுக்குக் களங்கம் விளைவிப்பதும் இன்று தொழிலாகிவிட்டது என்று மனம் வருந்திக் கூறியிருக்கிறார் பிரபல நடிகை பாவனா.வேலைக்கு ஆட்களை அமர்த்தி இதைச் செய்கிறார்கள். இவரைத் தாக்கவேண்டும், அந்த சினிமாவை மோசமாக விமரிசிக்க வேண்டும் என்பது போன்றவற்றிற்காகவே பணத்தையும் செலவழிக்கிறார்கள்.  எனக்கு எதிராகவும் சைபர் தாக்குதல்கள் அதிகம் நடந்தன என்றும் அவர் கூறியுள்ளார். 5 வருடங்களுக்குப் பிறகு அவர் மீண்டும் மலையாளப் படத்தில் நடித்துள்ளார். என்றெ காக்காக்கொரு பிரேமண்டார்ந்நு என்பது அதன் பெயர். முன்பு மலையாள சினிமாவில் நடித்தபோதுதான் என்மீது இந்தத் தாக்குதல்கள் நடந்தன. நண்பர்கள்தான் என்னை இப்போது மறுபடியும் மலையாளப் படவுலகிற்கு அழைத்து வந்திருக்கிறார்கள் என்றார் அவர்.