“பாலின சமத்துவம் இன்றைய சமூகச் சூழலில் அவசியமானது!” - என்று சொல்லியிருக்கிறார் நடிகர் மாதவன். அவர் நெட்ஃபிலிக்ஸ் தயாரித்த வெப்சீரியஸ் ஒன்றில் நடித்திருந்தார். விவாகரத்து பெற விரும்பும் கணவன் - மனைவி தங்களின் 12 வயது மகளுக்கு அதனைப் புரியவைக்கிற முயற்சிதான் அதன் கதை. பாலின சமத்துவம் குறித்தும் இதன் கதை பேசும். அதனை நினைவுகூர்கிற வாய்ப்பொன்றில்தான் மாதவன் அது பற்றிப் பேசியிருக்கிறார். மேலும் அவர் சொல்லியிருப்பது: “ஆண்கள் வளர்க்கப்படும் விதம் காரணமாகவே அவர்கள் அப்படியிருக்கிறார்கள். அவர்களைக் குறைசொல்லிப் பயனில்லை. இது ஆண்களுக்கான வேலை - இது பெண்களுக்கான வேலை என்றெல்லாம் பாகுபாடுகள் செய்யும் விதிகளைக் கைவிட வேண்டும். அந்தக் காலத்தில் அந்த பேதங்களையெல்லாம் யாரும் தவறாகக் கருதவில்லை. அப்போதும் பெண்களுக்கு அவை பொருத்தமாக இல்லை. ஆண்களைவிடவும் பெண்கள் உடல் ரீதியிலும் உள்ளத்தாலும் வலிமை மிக்கவர்களாக இருக்கிறார்கள். இதனை ஆண்கள் புரிந்துகொள்ள வேண்டும். எங்கள் வீட்டிலும் பாட்டி உள்பட வலிமையான பெண்கள் இருக்கிறார்கள். அவர்கள்தான் குடும்பத்தைத் தாங்கி நடத்திவருகிறார்கள். எனவே, ஆண்கள் இன்னும் தீவிரமாகப் பாலின சமத்துவம் பற்றி விவாதிக்க வேண்டும்.” பலே மாதவன்!