cinema

img

அங்கே சொந்தமாகத் தீவு, இங்கே..?

மேலை நாடுகளில் ஒரு நூறு பாடல்களை எழுதினாலே அந்தக் கவிஞர் சுவாசிப்பதைத் தவிர வேறு எந்த வேலையும் சொந்தமாகச் செய்ய வேண்டியதில்லை. அதற்கு அவர்கள் பெறும் பணத்தால் பசிபிக் கடலோரத்தில் அவர்களால் ஒரு தீவையே சொந்தமாக வாங்கிவிட முடியும். 

நான் ஏழாயிரத்து ஐநூறு பாடல்களை எழுதிவிட்டேன். ஆனாலும், இன்னமும் இவர்கள் அனுப்பும் சில லட்சங்களுக்காகக் காத்திருக்கிறேன். இப்படித் தன் ஆதங்கத்தை
வெளிப்படுத்தியிருப்பது திரைப்பாடலாசிரியர் கவிப்பேரரசு வைரமுத்து. 

அண்மையில் இசையமைப்பாளர்கள் மற்றும் பாடலாசிரியர்களுக்கான காப்புரிமையைப் பெற்றுத்தருகிற அமைப்பான இந்தியன் பர்ஃபார்மிங் ரைட்ஸ் சொசைட்டியின் நிகழ்வு ஒன்றில் பங்கேற்றுப் பேசும்போதுதான் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்த அமைப்பு உருவாவதற்கு முன்பு ராயல்டி அல்ல, நாயர் டீ கூட எங்களுக்குக் கிடையாது என்றார். கலைஞர்கள் கற்பனாவாதிகள். பாவம் அவர்கள் சட்டம் அறியாதோர், உரிமை தெரியாதோர், தாய்ப்பாலுக்கும் நிலாப்பாலுக்கும் வேறுபாடு தெரியாதோர் என்றும் பேசினார்.