cinema

img

கதைதான் ஒரு படத்தின் நாயகன்

ஸ்ரீசரவணா ஃபிலிம்ஸ் சார்பில் பி.சதீஷ் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் தீர்க்கதரிசி. மோகன் - எல்.ஆர்.சுந்தரபாண்டி இருவரும் இயக்கியிருக்கிற இந்தப் படத்தில் சத்யராஜ், அஜ்மல், ஜெய்வந்த், துஷ்யந்த் முதலானோர் நடித்துள் ள்ளார்கள். இது ஒரு கமர்ஷியல் க்ரைம் திரில்லர் என்கிறார்கள் படக்குழுவினர்.  இதன் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் பங்கேற்றுப் பேசிய நடிகர் சத்யராஜ், “இதுபோன்ற சிறிய படங்களைச் செய்ய தயாரிப்பாளருக்கு நல்ல அனுபவம் வேண்டும். இதன் இயக்குநர்களும் வெற்றிகரமான இரட்டை இயக்குநர்களின் வரிசையில் இணைவார்கள் என்று நம்புகிறேன். இந்தப் படத்தின் கதை சிறப்பாக அமைந்துள்ளது. ஒரு திரைப்படத்தின் திரைக்கதைதான் அதன் கதாநாயகன். படத்தின் உள்ளடக்கம் சிறப்பாக இருந்தால் அந்தப் படம் வெற்றிபெறும்!” - என்றார்.