cinema

img

அதுவே என் பலம்

பிரபல முற்போக்குப் படைப்பாளியும் திரையுலகில் முத்திரை பதித்துவருபவருமான வேல ராமமூர்த்தியிடம் ஒரு பத்திரிகைப் பேட்டியில் கேட்கப்பட்ட கேள்வி இது: “எந்தக் கதாபாத்திரத்திலேயும் இயல்பாகப் பொருந்திடுறீங்களே, எப்படி?” அவரின் பதில்: “அதற்கு என் எழுத்துக்கள்தான் காரணம். என் படைப்பில் வரும் ஒவ்வொரு கேரக்டரையும் நானே வாழ்ந்துதான் எழுதியிருக்கிறேன். ஒரு கொலைகாரனாகக்கூட நானே இருந்திருப்பேன். அடிக்கிறவனாகவும் அடி வாங்குகிறவனாகவும் நானே இருந்திருக்கேன். அதனால் திரைக் கதாபாத்திரங்களுக்குள் ஊடுருவுறது எளிதாக இருக்கு. அதே நேரம் எழுத்தாள மனோநிலை எனக்குள்ளிருக்கிற நடிகனை இன்னும் மெருகூட்டுது. அதை என் பலமாக நினைக்கிறேன்!”