சென்னை,ஜூலை 22- அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து சென்னை திரும்பிய டி.ரா ஜேந்தர், ‘ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் பிரார்த்தனையால் பழைய தெம்போடு உணர்வோடு வந்திருக் கிறேன்’ எனத் தெரிவித்தார். திரைப்பட நடிகரும், இயக்கு நருமான டி.ராஜேந்தர் உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்ற நிலையில், மேல் சிகிச்சைக்காக கடந்த மாதம் 14ஆம் தேதி அமெரிக்கா சென்றார். ஒரு மாதத்திற்கும் மேலாக அமெரிக்காவில் சிகிச்சைப் பெற்ற டி.ராஜேந்தர் சிகிச்சை முடிந்து வெள்ளியன்று (ஜூலை 22)அதி காலை 4 மணிக்கு விமானம் மூலம் சென்னை திரும்பினார்.
சென்னை வந்த டி.ராஜேந்தர் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ‘ டி.ராஜேந்தர் என்று சொன்னால் தன்னம்பிக்கை என்பார் கள். ஆனால், நான் இந்த இடத்தில் நிற்பதற்கு என் மீது அன்பும் மனித நேயமும் வைத்த தமிழ்நாட்டு மக்க ளுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி. இவர்களுடைய பிரார்த்தனையின் பலன் தான் எனக்கு சிகிச்சை நல்ல விதத்தில் முடிந்து பழைய தெம் போடு உணர்வோடு தாய் மண்ணுக்கு வந்திருக்கிறேன்” என்றார். அமெரிக்காவில் உள்ள தமிழ்ச் சங்கத்தினர் மிகுந்த அன்பைக்காட்டி னார்கள். அமெரிக்கா செல்ல உறு துணையாக இருந்த தமிழ்நாடு முதலமைச்சருக்கும், உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றி’ எனக் கூறினார்.