போதையற்ற தமிழ்நாட்டை உருவாக்கக் கோரி ஒரு கோடி கையெழுத்து பெறும் பிரச்சார இயக்கத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தொடங்கியுள்ளது. சென்னையில் இவ்வியக்கத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டு, திரைக்கலைஞர் கமல்ஹாசன் கையெழுத்திட்டு, பிரச்சார பதாகையை வெளியிட்டார். சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.கார்த்திக், மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன், மாவட்டச் செய லாளர்கள் பா.சரவணத் தமிழன் (வடசென்னை), மணிகண்டன் (மத்திய சென்னை), தீ.சந்துரு (தென்சென்னை) ஆகியோர் உடன் உள்ளனர்.