அண்மையில் வெளியாகி, ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்று ஓடிக்கொண்டிருக்கும் படமான ஹர்ஷவர்த்தன் இயக்கத்தில் உருவான “பதாய் தோ” - படத்தின் நாயகி நடிகை பூமி பட்நாகரின் வருத்தப் பதிவு இது. திரையுலகில் பாலின சமத்துவ மின்மை குறித்துதான் அவர் சொல்லியிருக்கிறார். திரைத்துறையில் ஆண் - பெண் ஏற்றத்தாழ்வுகளைக் கடைப் பிடிப்பது அதிகம் என்பது நீண்டகாலக்குற்றச்சாட்டுத்தான். “இது கொரோனா காலம் என்பதால் நடிகைகள் தங்களது சம்பளத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும்...” - என்று தன்னிடம் கோரிக்கை வைக்கப்படு கிற நிலையில்தான் பூமி பட்நாகர் தன் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். நடிகைகள் என்று வந்துவிட்டால் மட்டும்தான் இவர்களுக்குக் கொரோனா காலம் என்கிற நினை வெல்லாம் வருகிறது. எந்தத் தயாரிப்பாளரும் ஒரு ஆண் நடிகரிடம் சென்று, “உங்கள் சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும், இது கொரோனா காலம் என்பதை மறந்துவிடாதீர்கள்!” - என்று சொல்லி நான் பார்த்ததில்லை. இவ்வாறு ஒருபோதும் நடக்காது. ஆனால், நடிகைகளான எங்களிடம் மட்டும் இப்படி யெல்லாம் கோருவதை நான் கொடுமையான ஒன்றாகவே பார்க்கிறேன் என்று கூறியிருக்கிறார் அவர்.