காரைக்குடியில் இயங்கி வந்த ஏ.வி.எம். ஸ்டூடியோ புதிய பொலிவுடன் சென்னையில் உருவாகியிருந்தது. அதன் உரிமையாளர் மெய்யப்ப செட்டியார் தனது புதிய ஸ்டூடியோவில் முதல் தயாரிப்பைத் தொடங்கத் தயார்நிலையில் இருந் தார். ப.நீலகண்டன் எழுதிய கதை ஒன்றும் தயாராக இருந்தது. அதற்கு வாழ்க்கை என்று பெயரிடப் பட்டிருந்தது. பாடலாசிரியரும் நடிகருமான கே.டி.சந்தானத்தை வைத்து மெய்யப்ப செட்டியார் காரைக்குடியிலேயே அந்தக் கதை யின் சில காட்சிகளைப் படமாக்கி யிருந்தார். என்ன காரணத்தாலோ அதனை நிறுத்திவிட்டு டி.ஆர்.மகாலிங்கம் நடிப்பில் வேதாள உலகம் படத்தைத் தயாரிக்கத் தொடங்கிவிட்டார். எனவே, சென்னை யில் புதிய படப்பிடிப்பு நிலையத்தில் வாழ்க்கைக்குப் புதிய வாழ்க்கை கிடைத்தது. ஹாலிவுட் படமான பேச்சிலர் மதர் (1939) மற்றும் இந்தியில் வெளிவந்த குன்வாரா பாப் (1942) ஆகிய படங் களின் ஓரளவு தாக்கத்தால் உரு வானதுதான் இந்த வாழ்க்கை திரைப் படம். குடும்பச் சித்திரம் என்று அறியப்பட்டிருந்தது அது. காத லனால் ஏமாற்றப்பட்டு, அவனால் பிறந்த குழந்தையை அதன் தாய் கதாநாயகனின் காரில் விட்டுச் சென்றுவிடுகிறாள். இதனால் நாயகி யும் அவளது குடும்பமும் நாய கனை ஒழுக்க ரீதியாகத் தவறாகக் கருதுகிறார்கள். இதனால் உரு வாகும் குழப்பங்களும் பின்னர் உருவாகும் தெளிவுமே படத்தின் கதை யாக அமைந்தது.
குழந்தையின் பிரம்மச்சாரித் தகப்பனாக பழம்பெரும் நகைச் சுவை நடிகர் டி.ஆர்.ராமச்சந்திரன் நடித்தார். அவர்தான் படத்தின் நாயகன். அந்தப் பாத்திரத்தில் அவர் மிகச்சிறப்பாக நடித்திருந்தார். நாயகனின் பணக்கார, விசித்திர குணமுடைய தந்தையாக கே. சாரங்கபாணி நடித்தார். திருமண மாகாத, பிள்ளை பெறாத இளம் நாயகியாக முதலில் பண்டரிபாயை நடிக்கவைக்க முடிவு செய்தார் ஏ.வி.எம். நிறுவனர் மெய்யப்பன். ஹரிதாஸ் (1944) என்ற படத்தின் வெற்றி பண்டரிபாய்க்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது. ஐந்து வருடங்கள் ஒப்பந்தம் போட்டார் செட்டியார். வேதாள உலகத்தில் காளி வேடத்தில் ஒரு சிறிய பாத்தி ரத்தில் நடிக்க வைத்தார். பி.டி.சம்பந்தம் எஸ்.வி.சகஸ்ரநாமம் ஆகி யோர் கன்னடத்தைத் தாய்மொழி யாகக் கொண்ட பண்டரிபாய்க்கு வாழ்க்கைப் படத்திற்காக தமிழ்ப் பயிற்சியளிக்க நியமிக்கப்பட்டார்கள். ஆனால், அவருக்கு அவ்வளவு எளிதில் தமிழ் வசப்படவில்லை. படத்தில் டி.கே.எஸ். சகோதரர்கள் குழுவிலிருந்த எம்.எஸ்.திரௌபதி, சகஸ்ரநாமம் போன்றோரை நடிக்க வைத்தார். நாம் இருவர் படத்தின் போதே அவருடன் மெய்யப்ப செட்டியாருக்கு பிரச்சனை வந்தது. ஆனாலும் அந்தப் பாத்திரத்திற்கு அவர்தான் பொருத்தமானவர் என்றுணர்ந்தவர் அவரை நடிக்க அழைக்கத் தயங்கவில்லை. இருந்த போதிலும் ஒரு நாயகி கிடைத்த பாடில்லை.
மெய்யப்பனின் இணை இயக்குநரும் எடிட்டருமான எம்.வி. ராமன் ஒரு யோசனை சொன்னார். பரதக் கலையில் அறிமுகமாகியிருந்த வைஜெயந்திமாலா என்ற இளம் பெண்ணைப் பரிந்துரைத்தார் அவர். மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார் அவர். அவரது நாட்டியக்கலைக்காகவே கதையில் சில மாற்றங்களைச் செய்தார் மெய்யப்பன். மூன்று நடனக்காட்சிகள் படத்தில் வைக்கப்பட்டன. மகாகவி பாரதியின் பாரத சமுதாயம் பாடல் அடங்கிய நடனக் காட்சி அவற்றுள் ஒன்று. டி.கே.பட்டம்மாள் பாடிய பாடலும் அதில் அடங்கும். மற்ற பாடல்களை எம்.எல். வசந்த குமாரி பாடியிருந்தார். வைஜெயந்தி மாலாவின் நடிப்பினாலும் நடனக் காட்சிகளாலும் ரசிகர்கள் பெரிதும் ஈர்க்கப்பட்டார்கள். அதனைத் தொடர்ந்து வாழ்க்கை திரைப்படத் தினை இந்தியில் பஹார் என்ற பெயரில் தயாரித்தார் ஏ.வி.மெய்யப்ப செட்டியார். அதுதான் செட்டியாருக்கும் வைஜெயந்தி மாலாவுக்கும் முதல் இந்திப்படம். அதன் வெற்றியைத் தொடர்ந்து மிகப்பெரிய அகில இந்திய நட்சத்திர மானார்
வைஜெயந்திமாலா. லட்கி, நாகின், தேவதாஸ், கங்கா ஜம்னா, மதுமதி, நயா தௌர், பைகம் என்று பல படங்கள் தொடர்ந்து வந்தன. அந்த நாளில் நாட்டிய சகோதரிகள் லலிதா - பத்மினி மிகவும் பிரபலமாக இருந்தார்கள். வேதாள உலகம் படத்திலும் அவர்களின் நாட்டிய நாடகம் ஒரு சிறப்பம்சமாக இருந்தது. அதனால் வைஜெயந்தி மாலாவின் நடனக் காட்சியை சற்று சிரத்தையுடன் உருவாக்கினார்கள் வாழ்க்கை படக்குழுவினர். மூன்று மாதங்களில் படப்பிடிப்பை முடிப்பது என்று திட்டமிட்டிருந்தபடியே படம் நிறைவாக உருவாகியது. ஏ.வி.எம்.மின் திட்டமிடலைப் பற்றி பலரும் வியந்து பேசினார்கள். டிசம்பர் மாதம் 1949இல் வாழ்க்கை வெளியானது. ரசிகர்கள் கொண்டாடிய படங்களில் இதுவும் ஒன்று என்றானது. வைஜெயந்திமாலா என்ற புதிய நட்சத்திரத்தை அறிமுகம் செய்த படமாகவும் இசை, நடனம் போன்ற வற்றிற்காகவும் மக்கள் மனங்களில் நிலைபெற்றது வாழ்க்கை.