சென்னை:
மருத்துவக் கல்லூரி இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளும் அதிமுக அரசு சட்டமன்ற தேர் தல் கூட்டணிக்காக பாஜகவிடம்தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுத்து விட்டது என்று திமுக தலைவர் கடுமையாக குற்றம் சாட்டி இருக்கிறார்.இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-“அகில இந்தியத் தொகுப் பிற்கு அளிக்கப்படும் மருத்துவம், பல் மருத்துவம், மருத்துவ மேற்படிப்புகளுக்கான இடங்களில், தமிழகத்தின் பிற்படுத்தப் பட்ட மாணவர்களுக்கு இந்த
ஆண்டே 50 சதவீதம் இடஒதுக் கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மாநில (அதி முக) அரசு, கமிட்டிக் கூட்டத்தில் முன் வைக்கவில்லை என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது”என்று வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சி யளிக்கிறது.
இந்த சம்பவம் இடஒதுக் கீட்டுக் கொள்கையில் அதிமுக அரசின் இரட்டை வேடத்தை - மத்திய பாஜக அரசுடன் “கூட் டணி” வைத்து நடத்தும் கபட நாடகத்தை மீண்டும் வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.“மருத்துவக் கல்வி இடங்களில் 50 சதவீத இட ஒதுக்கீட்டு உரிமை தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு உண்டு” என்று சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஜூலை 27 ஆம் தேதி வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை அளித்தது.அத்தீர்ப்பின் அடிப்படையில் மூன்று மாதங்களுக்குள் இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறைகள் பற்றி ஆராய ஒரு குழு அமைத்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப் பட்டிருந்தது.அதிமுக அரசும், “இந்த ஆண்டே இந்த இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்” என்று கூறி - “அடுத்த ஆண்டு முதல் இடஒதுக்கீடு வழங்கலாம்” என்ற சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.இந்நிலையில் மத்திய அரசு - மாநில அரசு - இந்திய மருத்துவக் கவுன்சில் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய கமிட்டி அமைக்கப்பட்டது.“இந்த ஆண்டே இடஒதுக்கீடுவேண்டும்” என்று கோரிக்கை வைத்து உச்ச நீதிமன்றத்திற்குப் போன அதிமுக அரசு - குட்கா வழக்கிற்குப் பயந்தோ அல்லது நெடுஞ்சாலைத்துறை ஊழல் வழக்கிற்கு அஞ்சியோ - அதற் கான மத்திய அரசின் கமிட்டிக் கூட்டத்தில் இந்த இடஒதுக்கீடு துரோகத்தைத் தமிழகத்தில் மருத்துவக் கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்குச் செய்திருக்கிறது.அதிமுக அரசு இனியும் காலதாமதம் செய்யாமல் - மாநில இடஒதுக்கீட்டு உரிமையை இழப்பதற்குத் துணை போகாமல் விரைந்து செயல்பட வேண்டும்.பாஜகவுடனான தேர்தல் கூட்டணிக்காக, எடப்பாடி அதிமுக எதையும் விட்டுக் கொடுக்கவும், பலி பீடம் ஏற்றவும் தயாராக இருக்கிறது என்பதைத் தமிழக மக்கள் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள்”.இவ்வாறு ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
வைகோ
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,”மருத்துவ கல்லூரிகளில் இதர பிற்படுத்தப் பட்டோருக்கு 50 சதவீத இடம்கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
கி. வீரமணி
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவதில் தயக்கம் ஏன்? பிற்படுத்தப்பட்டோர் உரிமையைப் ‘‘பந்தாடுவது’’ நியாயமல்ல - இவ்வாண்டே செயல்படுத்துவது மிகவும் அவசர, அவசியமாகும்” என்று தெரிவித்துள்ளார்.