சுவிஸ் வங்கிகளில், 2024 ஆம் ஆண்டில் இந்தியர்களின் பணம் மூன்று மடங்கு அதிகரித்து ரூ.37,600 கோடியாக உயர்ந்துள்ளது என சுவிட்சர்லாந்து மத்திய வங்கி அறிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்து மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2024 ஆம் ஆண்டு சுவிஸ் வங்கியில் தனிநபர், கிளை நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவை மூலம் முதலீடு செய்த பணம் ஒரே ஆண்டில் மூன்று மடங்கு அதிகரித்து ரூ.37,600 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் பெரும்பாலான முதலீடு வங்கிகள், நிதி நிறுவனங்களின் கணக்குகளிலே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தனிநபர் முதலீட்டாளர்கள் வைத்திருக்கும் பணம், 11 சதவீதம் உயர்ந்து ரூ.3,675 கோடியாக உயர்ந்துள்ளது. 2021-ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்தியர்களின் முதலீடு அதிகரித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.