world

img

இந்திய மாணவர்கள் வெளியேற வான்வெளியை திறந்த ஈரான் அரசு

இந்திய மாணவர்கள் வெளியேற ஈரான் அரசு வான்வெளியை திறந்துள்ளது.

இஸ்ரேல்- ஈரான் இடையே போர் நடைபெற்றுவரும் நிலையில் ஈரான் அரசு வான்வெளியை மூடியது.

இந்நிலையில் ஈரானில் படித்து வந்த இந்திய மாணவர்கள் இந்தியா திரும்ப முடியாமல் தவித்து வந்தனர்.

இந்நிலையில், ஈரானில் இருந்து இந்திய மாணவர்கள் 1000 பேர் வெளியேறுவதற்காக ஈரான் அரசு வான்வெளியை திறந்துள்ளது.

ஈரானின் மிகப்பெரிய விமான நிறுவனமான மகான் ஏர்வேஸின் 3 விமானங்கள் மூலம் இந்தியர்கள் அழைத்து வரப்பட உள்ளனர்.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து கோம் நகரம் வழியாக மஸ்சாத் நகருக்கு மாணவர்கள் அழைத்து வரப்பட உள்ளனர்.

இஸ்ரேல் தாக்குதல் இல்லாத நகரமான மஸ்சாத் வழியாக இந்திய மாணவர்களை பாதுகாப்பாக அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இஸ்ரேல் உடனான போர் காரணமாக ஈரான் தனது வான்வெளியை மூடிய நிலையில் இந்தியாவின் கோரிக்கையை அடுத்து ஈரான் வான்வெளியை திறந்துள்ளது.

இஸ்ரேல்-ஈரானுக்கு இடையேயான போர் ஒரு வார காலமாக நடைபெற்று வரும் நிலையில், இந்திய மாணவர்களை அழைத்துவர தற்போது  ஒன்றிய அரசு  நடவடிக்கை எடுத்துள்ளது காலதாமதமானது என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.