மனித குல வரலாற்றில் மகத் தான புரட்சியை உலகுக்கு பறை சாற்றிய அதே 1917 இல் தான் ஜானகி அம்மாவும் பிறந்தார். 8 வயதில் தாயை இழந்த ஜானகி பள்ளிக் கல்வியுடன் இசையின் அபூர்வ ஆறுதலை உணர்ந்து கொண் டார்/ தனது 12 வய தில் பழனியா பிள்ளை பாய்ஸ் கம்பெனி என்ற நாடக கம்பெனி யில் சேர்க்கப்பட்ட ஜானகி தனது கலை ஈடுபட்டாலும் இசை மேன்மையா லும் மிகக் குறுகிய காலத்தில் கலைஞ ராக பரிணமித்தார். நாயகி அந்தஸ்து பெற்று சிறந்த நாடக நடிகராக வலம் வந்தார் .நாடகத்தின் புகழின் உச்சிக்கே சென்ற ஜானகியின் நடிப்பு பொதுமக்க ளால் பெரிதும் வரவேற்பை பெற்றது. செல்வாக்கான அறிமுகமும் குரல் வள மும் கருத்துத்திடமும் அரசியல் மேடை யில் ஜானகிக்கு உரிய இடத்தைப் பெற்றுத் தந்தது. 1930 களின் இறுதியில் மதுரை யில் பிரபலமான காங்கிரஸ் தலைவராக ஜானகி விளங்கினார். பின்னர் சோசலிச கருத்துக்களின் பால் ஈர்க்கப்பட்டு காங்கி ரஸ் சோசலிஸ்ட் கட்சியிலும் அதைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளையிலும் அங்கம் வகித்து மதுரை மக்க ளின் போராட்டத்தளபதி ஆனார். தென் னிந்தியாவில் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முதல் பெண்மணி யாக ஜானகி அம்மா திகழ்ந்தார். தியாகி விஸ்வநாததாஸ் அவர் களோடு, சாதியை காரணம்காட்டி நாட கத்தில் இணைந்து நடிப்பதற்கு யாரும் முன்வராத வேளையில் சாதியத்தை தகர்த் தெறிந்து மதுரையில் விடுதலைக்கான வீர முழக்கமிட்டு, அவருடன் மேடை ஏறி நடித்து வந்தார். விஸ்வநாத தாஸும் ஜானகி அம்மாவும் மதுரை மட்டுமல்லா மல் பல்வேறு இடங்களில் நடிப்பு திறமை யால் மக்களை ஈர்த்தனர். மதுரைக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வருகை தந்த போது காவல்துறை யின்அடக்குமுறைக்கு பயந்து அவரை வரவேற்க யாரும் முன்வராத போது, கே.பி. ஜானகியம்மாள் துணிந்து நின்று நேதாஜியை ரயில் நிலையத்தில் வர வேற்று மதுரையினுடைய வீதிகளில் வலம் வந்தார். அப்படி ஒரு வீரப்பெண் மணி ஜானகி அம்மா. தேச விடுதலைக்குப் பின் குத்தகை விவசாயிகள் அனுபவிக்கும் கொடுமை களைப் போக்க கிராமப்புற ஆதிக்கச் சக்தி யினருக்கு எதிராக மதுரையின் பல்வேறு இடங்களில் நில மீட்பு போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தினார் .மதுரைக்கு அருகாமையில் இருக்கிற துவரிமான் கிராமத்தில் நிலமீட்பு போராட்டத்தை நடத்துகின்ற பொழுது காவல்துறையினர் போராடும் விவசாயிகளை , துப்பாக்கி யைக் கொண்டு மிரட்டிய பொழுது, ஜானகி அம்மாள் தான் கட்டியிருந்த புட வையை தர்ப்பாச்சியாக கட்டிக்கொண்டு ஏர் பிடித்து நில மீட்பு போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தினார் .காவல் துறை சுடுவதாக இருந்தால் என்னை சுட்டு விட்டு விவசாயிகளை சுடுங்கள் என்று துப்பாக்கி முனைக்கு எதிராக நின்று போராடி நிலத்தைப் பெற்றுக் கொடுத் தார். மதுரையில் அவரது கால்கள் படாத கிராமங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு நில மீட்பு போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தினார். மதுரை மாமன்ற உறுப்பினராக, மது ரையின் சட்டமன்ற உறுப்பினராக பணி யாற்றிய ஜானகி அம்மா, தனக்கென சொத்து சேர்க்காமல் தான் வைத்திருந்த நகைகளை விற்று சுதந்திரப் போராட்டக் காலத்திலும் கம்யூனிஸ்ட் கட்சி வளர்ச் சிக்கும் நன்கொடையாக கொடுத்த தோடு, தான் குடியிருந்த வீட்டையும் கம்யூ னிஸ்ட் கட்சிக்கு எழுதிக் கொடுத்த உன்ன தமான தலைவர். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை தமிழகத்தில் உருவாக்கிய ஸ்தாபகத் தலைவர்களில் இவரும் முக்கி யமானவர். திருவாரூரில் நடந்த முதல் மாநில மாநாட்டில் மாநிலத் தலைவராக தேர்வு செய்யப்பட்டு, ஜனநாயகம், சமத்து வம், பெண் விடுதலை என்ற உயர்ந்த கோஷத்தை முன்வைத்து மதுரையில், தமிழகத்தில் காவல்துறையின் தடியடி களை மீறி, அடக்குமுறைகளை மீறி மக்க ளுக்காக பல போராட்டங்கள் களம் கண்ட ஜானகி அம்மாவின் புகழ் நீடூழி வாழ்க. அவர் காட்டிய வழியில் தமிழகத்தில் 8 லட்சம் பெண்களை உறுப்பினராக சேர்த்து ஜானகி அம்மாவின் வாரிசுகள் இன்றைக்கும் பெண்களின் விடுதலைக் காக குரல் கொடுத்து வருகிறோம். -எஸ்.கே.பொன்னுத்தாய் மாநிலச் செயலாளர், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்