articles

img

பாகிஸ்தானில் புறப்படும் பயங்கரவாதமும் இந்தியாவின் இராஜதந்திர முயற்சியும் - டாக்டர் ஜான் பிரிட்டாஸ் எம்.பி.,

பாகிஸ்தானில் புறப்படும் பயங்கரவாதமும் இந்தியாவின் இராஜதந்திர முயற்சியும்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக உலக நாடுகளிடம் இந்தியாவின் கவலைகளை தெரிவிக்க ஒன்றிய அரசால் அனுப்பி வைக்கப்பட்ட குழு ஒன்றில் இடம்பெற்றவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவைக் குழு தலைவர் டாக்டர் ஜான் பிரிட்டாஸ். அவர் தமது பயணம் குறித்து எழுதியுள்ள கட்டுரை.

பிரெஞ்சு சிந்தனையாளர் வால்டேர் பழைய பிரஷ்யாவைப் பற்றி ஒரு முக்கியமான கருத்தைச் சொன்னார்: “பெரும்பாலான நாடு களில் படைகள் உள்ளன. ஆனால் இங்கே ஒரு படைக்கு நாடு இருக்கிறது”. இந்த வார்த்தைகள் இன்று பாகிஸ்தானுக்கு மிகவும் பொருந்துகின்றன. இஸ்லாம் மதத்தின் அடிப்படையில் உருவாக் கப்பட்ட பாகிஸ்தான் ஜனநாயக வழியைத் தேர்ந்தெடுத் தாலும், அதன் உண்மையான அதிகாரம் இராணுவத்தின் கைகளில் இருப்பதை உலகம் விரைவில் கண்டது. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானின் இந்த ‘இராணுவ ஆட்சி’த் தன்மைதான் இந்தியா வெளி நாடுக ளில் முன்வைத்த முக்கிய விஷயங்களில் ஒன்று.

காங்கிரஸ் தவறவிட்ட வாய்ப்பு

எதிர்க்கட்சிகளின் முழு நம்பிக்கையுடன் இந்த இராஜீயரீதியான குழுக்களை அனுப்பியது சரியான முடிவு. இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சியாக, காங்கி ரஸ் மற்ற கட்சிகளுடன் இணைந்து அரசாங்கத்தின் முன் சில நிபந்தனைகள் வைக்கும் வாய்ப்பு இருந்தது. பிரதமர் நேரடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை யும், நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தையும் கூட்டிய பிறகு, நிபந்தனைகளின் அடிப்படையில் எதிர்க் கட்சிகள் பங்கேற்றிருந்தால், இந்த இராஜதந்திர நடவடிக்கை மேலும் வலுவாக இருந்திருக்கும். ஆனால் காங்கிரஸ் அத்தகைய ஒருங்கிணைப்பு க்குத் தயாராக இல்லை. அந்தக் கட்சியிலேயே கருத்து  வேறுபாடுகள் எழுந்தன. இரண்டு காங்கிரஸ் உறுப்பி னர்கள் தலைமையின் ஒப்புதல் இல்லாமலேயே, அர சாங்கத்துடன் செல்வதாக பகிரங்கமாகக் கூறினர். உள்நாட்டு அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இந்திய நாட்டின் நலன்களில் ஒற்றுமை காட்டுவதே பொருத்தமானது.

மக்களுக்குத் தெரிவிப்பது  ஏன் முக்கியம்?

நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக்களது வெளிநாட்டுப் பயணம் மற்றும் அங்கு ஆற்றிய பணி பற்றிய விவரங்கள் ஒன்றிய அரசுக்குத் தெரிவிக்கப் பட்டன. ஆனால் ஜனநாயகத்தில், மக்களுக்குத் தெரி விக்கப்படும்போதுதான் இந்த பணி நிறைவடைகிறது. நான் ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், இந்தோ னேசியா மற்றும் மலேசியாவுக்குச் சென்ற குழுவில் இருந்தேன். ஒவ்வொரு நாட்டிலும், பாரம்பரிய இராஜதந்திர முறைகளிலிருந்து வேறுபட்டு, பல்வேறு நிலைகளில் விவாதங்கள் நடந்தன. அந்தந்த நாட்டின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அறிவுஜீவிகள் மற்றும் கல்வி சமூ கத்தினர் அனைவரும் இந்த கருத்துப் பரிமாற்றத்தில் பங்கேற்றனர்.

மோடியின் ஒருபக்க  இராஜதந்திரத்தின் உண்மை

2014-இல் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு ஏற்றுக்கொண்ட- பின்பற்றுகிற இராஜதந்திர அணுகு முறைகளைப் புரிந்துகொள்ள இந்த பயணம் வாய்ப்பாக அமைந்தது. மோடி அரசாங்கம், பிரதமரை மட்டுமே மைய மாகக் கொண்ட ஒரு பரிமாண இராஜதந்திர அணுகு முறையை உருவாக்கியது. கட்டிப்பிடிப்புகளும் அர வணைப்புகளும் நிறைந்த காட்சிகளை வெளிச்சம் போட்டுக் காட்டி, ஊடகங்கள் இவை அனைத்தும் இந்தியா பெற்ற ஆழமான நட்புகள் என்ற தோற் றத்தை உருவாக்கின. ஆனால் இந்த காட்சிகளுக்கு அப்பால் உலக நாடுகளின் உண்மையான கருத்துகளைப் பற்றிய புரிதலை இந்தப் பயணம் அளித்தது.  

பாகிஸ்தான் அரசு  எதிர் பாகிஸ்தான் மக்கள்

விவாதங்களில் இந்திய அரசு சார்பில் வந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் நான் வலியுறுத்திய முக்கிய விஷயம்: பாகிஸ்தான் அரசாங்கத்தையும் அதன் மக்களையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும் என்பதுதான். பாகிஸ்தான் மக்கள் பயங்கரவாதத்திற்கு எதிரா னவர்கள். அவர்களும் பயங்கரவாதத்தால் பாதிக்கப் பட்டவர்கள். பயங்கரவாதத்திற்கு எல்லைகளோ நட்புக ளோ கிடையாது. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தா னின் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா முகமது ஆசிப்  அவர்களே முப்பது ஆண்டுகளாக பயங்கரவாதிகளு க்கு ஆதரவளித்து வருவதாக வெளிப்படையாகக் கூறி யுள்ளார். ஆப்கானிஸ்தானில் சோவியத் ஆதரவு அரசாங் கத்தை வெளியேற்ற, அமெரிக்கா தலிபான்களை உரு வாக்கியதும்; ஒசாமா பின்லேடனுடன் கைகோர்த்ததும் நமக்குத் தெரியும். பின்னர் அமெரிக்காவில் இரட்டை கோபுரங்களை அழித்ததும் அதே பின்லேடன்தான்.

வெளிநாடுகளின்  சந்தேகங்களும் கேள்விகளும்

பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலை நாம் கண்டிக்கும் அதே வேளையில், வெளிநாடுகளில் பல சந்தேகங்களும் கேள்விகளும் எழுப்பப்படுகின்றன: Hஉயர்மட்ட ஜனநாயக நாடான இந்தியா, பாகிஸ் தானுடனான பல பத்தாண்டு கால பிரச்சனைக ளைத் தீர்க்க இயலாமை, ஏன்? Hஅணுசக்தி நாடுகள் போரில் ஈடுபடும்போது உலக அமைதிக்கு ஏற்படும் சேதம். Hஇந்தியாவின் நிதி முதலீடுகளின் பாதுகாப்பு. Hபாகிஸ்தானுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் டொனால்டு டிரம்ப்பின் பங்கு என்ன? Hஇந்த மோதலில் இந்தியாவின் இராணுவ இழப்பு கள் என்ன? Hநமது நாட்டில், ‘உள்நாட்டு அமைதியின்மை’ உள்ள தாக பாகிஸ்தானின் பிரச்சாரம் நடக்கிறதே? Hஇந்திய ஊடகங்களின் போர் வெறி மற்றும் போலிச் செய்திகள்

போலிச் செய்திகளின் ஆபத்து

போலிச் செய்திகள் எவ்வளவு தூரம் சென்றுள்ளன என்பதற்கு நல்ல உதாரணம் உள்ளது. ஒரு கட்டத்தில், சில ஊடகங்கள் பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் கைது செய்யப்பட்டதாகவும், ஆட்சிக் கவிழ்ப்பு நடந்ததாகவும் செய்தி வெளியிட்டன. அது வைரல் ஆனது.

மற்றொரு போலி செய்தி: அசிம் முனீர் தன்னை பீல்டு மார்ஷலாக அறிவித்துக் கொண்டார் என்பது. ஆரோக்கியமான உரையாடலின் மத்தியிலும், இந்த நாடுகள் எழுப்பும் சந்தேகங்களை பாரபட்ச மின்றி பகுப்பாய்வு செய்ய முடியும். ஒன்று தெளிவாகி றது: பெரும்பாலான தூதரகங்கள் நமது விளக்கங்க ளுக்கு அப்பாற்பட்ட கருத்துக்களை முன்வைக்கும் போது அவற்றை முறியடிக்கும் பெரும் பொறுப்பை தூதுக்குழுக்கள் மேற்கொண்டிருந்தன.

 இது முதன்முறை அல்ல! விரிவான தூ

துக்குழுக்களை அனுப்புவதை மோடி கண்டுபிடித்த புதிய ராஜதந்திர உத்தி என்று நமது ஊடகங்கள் சித்தரிக்க முயற்சித்தன. ஆனால் இந்தியா பல பத்தாண்டுகளுக்கு முன்பே இத்தகைய குறிப்பிடத் தக்க ராஜதந்திர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. 1971-இல் இந்திரா காந்தி, தனது மிக வலிமையான அரசியல் எதிரியான ஜெயப்பிரகாஷ் நாராயணனை வெளிநாட்டு தலைநகரங்களுக்கு அனுப்பினார். அந்தப் பணி வங்கதேச நெருக்கடியைக் கருத்தில் கொண்டு செய்யப்பட்டது. நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது, எதிர்க் கட்சித் தலைவர் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையி லான ஒரு குழு ஜெனீவாவிற்கு அனுப்பப்பட்டது பல ருக்கு நினைவிருக்கும். பாகிஸ்தான் மோதலுக்குப் பிறகு மோடி செய்த பணி, அவரது பதினொரு ஆண்டுகால- தன்னிச்சை யான இராஜதந்திர அணுகுமுறையிலிருந்து விலகல் என்று கருதப்பட வேண்டும். மென்மையான  இராஜதந்திரத்தின் சரிவு வெளியுறவுக் கொள்கை இலக்குகளை அடைய ஒவ்வொரு நாட்டுக்கும் அதன் மென்மையான இராஜ தந்திரம் (Soft Power Diplomacy) உள்ளது. இதில் அடங்குபவை: Hஇராஜீயரீதியில் அல்லாத நட்பு குழுக்கள் Hகல்வி சமூகம் மற்றும் ஊடகங்களில் பரிமாற்றங்கள் Hகலாச்சாரக் கூட்டங்கள் மோடி பிரதமரான பிறகு, அவர் இத்தகைய தலையீட் டில் ஈடுபடவோ, மேற்கொள்ளவோ விரும்பவில்லை. அனைத்து இந்திய பிரதமர்களும் வெளிநாட்டுப் பய ணங்களின் போது ஊடகங்களைத் தங்களுடன் அழை த்துச் செல்வது வழக்கம். ஆனால் அந்தத் திட்டத்தை யும் மோடி முடிவுக்குக் கொண்டு வந்தார். இந்திய கலாச்சார உறவுகள் கவுன்சில் (ICCR) கடந்த காலங்களில் இந்தியாவின் கலாச்சார பன்முகத் தன்மையை உலகிற்கு வழங்குவதில் முக்கிய பங்கு வகித்த நிறுவனம். வாஷிங்டனில் ஐசிசிஆர் (ICCR)-க்கான கட்டடம் கட்டத் தொடங்கி 15 ஆண்டுகள் ஆகின் றன. அது இன்னும் நிறைவடையவில்லை. தனிமைப்படுத்தலைத்  தவிர்க்கும் முயற்சி பாகிஸ்தானுடனான மோதலில் இந்தியா தனிமைப் படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக அனைத்துக் கட்சிக் குழு வின் சுற்றுப்பயணமும் அமைந்தது. மோடி அவரது பதவிக் காலத்தில் தனது அனைத்து முட்டைகளையும் அமெரிக்காவின் கூடையில் தான் போட்டார். ஆனாலும், இந்த பிரச்சனையிலும் கூட இந்தியாவின் நலன்களைக் குறைமதிப்பிற்கு உட் படுத்தும் வகையில் தான் அமெரிக்கா செயல்பட்டது. பாகிஸ்தானுடன் போர் நிறுத்தத்திற்கு மத்தி யஸ்தம் செய்ததாக டொனால்டு டிரம்ப் கூறியது குறித்த கேள்வி நான் சென்ற அனைத்து நாடுகளிலும் எழுப் பப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதில், இந்திய அரசாங்கத்தின் விளக்கத்தை உலகம் முழுமையாக ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ளதா என்ற கேள்வி இன்னும் உள்ளது. டிரம்பின் கூற்று ஏன் வலுவாக மறுக்கப்படவில்லை என்ற கேள்வி, பலவீனமான மறுப்புக்கு அப்பால் இன்னும் வானில் மிதக்கிறது. உலகின் நம்பிக்கையை  வெல்ல வேண்டும்! இந்த இராஜதந்திர பயணம் இந்தியாவின் வெளியுற வுக் கொள்கையின் வலிமைகளையும் பலவீனங்களை யும் தெளிவாக எடுத்துக் காட்டியது. உண்மையான ஜனநாயக மதிப்புகளுடன், பன்முக இராஜதந்திரத் தின் மூலம், உலக நாடுகளின் நம்பிக்கையை வெல்ல  வேண்டும். ஊடக வெறியும் போலிச் செய்திகளும் நம் நாட்டின் நம்பகத்தன்மையை சேதப்படுத்துகின்றன. மக்களின் நலனுக்காக, அமைதிக்காக, உண்மையான ஜனநாயகத்திற்காக செயல்படுவதே நமது கடமை.காங்கிரஸ் தவறவிட்ட வாய்ப்பு எதிர்க்கட்சிகளின் முழு நம்பிக்கையுடன் இந்த இராஜீயரீதியான குழுக்களை அனுப்பியது சரியான முடிவு. இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சியாக, காங்கி ரஸ் மற்ற கட்சிகளுடன் இணைந்து அரசாங்கத்தின் முன் சில நிபந்தனைகள் வைக்கும் வாய்ப்பு இருந்தது. பிரதமர் நேரடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை யும், நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தையும் கூட்டிய பிறகு, நிபந்தனைகளின் அடிப்படையில் எதிர்க் கட்சிகள் பங்கேற்றிருந்தால், இந்த இராஜதந்திர நடவடிக்கை மேலும் வலுவாக இருந்திருக்கும். ஆனால் காங்கிரஸ் அத்தகைய ஒருங்கிணைப்பு க்குத் தயாராக இல்லை. அந்தக் கட்சியிலேயே கருத்து  வேறுபாடுகள் எழுந்தன. இரண்டு காங்கிரஸ் உறுப்பி னர்கள் தலைமையின் ஒப்புதல் இல்லாமலேயே, அர சாங்கத்துடன் செல்வதாக பகிரங்கமாகக் கூறினர். உள்நாட்டு அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இந்திய நாட்டின் நலன்களில் ஒற்றுமை காட்டுவதே பொருத்தமானது. மக்களுக்குத் தெரிவிப்பது  ஏன் முக்கியம்? நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக்களது வெளிநாட்டுப் பயணம் மற்றும் அங்கு ஆற்றிய பணி பற்றிய விவரங்கள் ஒன்றிய அரசுக்குத் தெரிவிக்கப் பட்டன. ஆனால் ஜனநாயகத்தில், மக்களுக்குத் தெரி விக்கப்படும்போதுதான் இந்த பணி நிறைவடைகிறது. நான் ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், இந்தோ னேசியா மற்றும் மலேசியாவுக்குச் சென்ற குழுவில் இருந்தேன். ஒவ்வொரு நாட்டிலும், பாரம்பரிய இராஜதந்திர முறைகளிலிருந்து வேறுபட்டு, பல்வேறு நிலைகளில் விவாதங்கள் நடந்தன. அந்தந்த நாட்டின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அறிவுஜீவிகள் மற்றும் கல்வி சமூ கத்தினர் அனைவரும் இந்த கருத்துப் பரிமாற்றத்தில் பங்கேற்றனர். மோடியின் ஒருபக்க  இராஜதந்திரத்தின் உண்மை 2014-இல் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு ஏற்றுக்கொண்ட- பின்பற்றுகிற இராஜதந்திர அணுகு முறைகளைப் புரிந்துகொள்ள இந்த பயணம் வாய்ப்பாக அமைந்தது. மோடி அரசாங்கம், பிரதமரை மட்டுமே மைய மாகக் கொண்ட ஒரு பரிமாண இராஜதந்திர அணுகு முறையை உருவாக்கியது. கட்டிப்பிடிப்புகளும் அர வணைப்புகளும் நிறைந்த காட்சிகளை வெளிச்சம் போட்டுக் காட்டி, ஊடகங்கள் இவை அனைத்தும் இந்தியா பெற்ற ஆழமான நட்புகள் என்ற தோற் றத்தை உருவாக்கின. ஆனால் இந்த காட்சிகளுக்கு அப்பால் உலக நாடுகளின் உண்மையான கருத்துகளைப் பற்றிய புரிதலை இந்தப் பயணம் அளித்தது.  பாகிஸ்தான் அரசு  எதிர் பாகிஸ்தான் மக்கள் விவாதங்களில் இந்திய அரசு சார்பில் வந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் நான் வலியுறுத்திய முக்கிய விஷயம்: பாகிஸ்தான் அரசாங்கத்தையும் அதன் மக்களையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும் என்பதுதான். பாகிஸ்தான் மக்கள் பயங்கரவாதத்திற்கு எதிரா னவர்கள். அவர்களும் பயங்கரவாதத்தால் பாதிக்கப் பட்டவர்கள். பயங்கரவாதத்திற்கு எல்லைகளோ நட்புக ளோ கிடையாது. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தா னின் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா முகமது ஆசிப்  அவர்களே முப்பது ஆண்டுகளாக பயங்கரவாதிகளு க்கு ஆதரவளித்து வருவதாக வெளிப்படையாகக் கூறி யுள்ளார். ஆப்கானிஸ்தானில் சோவியத் ஆதரவு அரசாங் கத்தை வெளியேற்ற, அமெரிக்கா தலிபான்களை உரு வாக்கியதும்; ஒசாமா பின்லேடனுடன் கைகோர்த்ததும் நமக்குத் தெரியும். பின்னர் அமெரிக்காவில் இரட்டை கோபுரங்களை அழித்ததும் அதே பின்லேடன்தான். வெளிநாடுகளின்  சந்தேகங்களும் கேள்விகளும் பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலை நாம் கண்டிக்கும் அதே வேளையில், வெளிநாடுகளில் பல சந்தேகங்களும் கேள்விகளும் எழுப்பப்படுகின்றன: Hஉயர்மட்ட ஜனநாயக நாடான இந்தியா, பாகிஸ் தானுடனான பல பத்தாண்டு கால பிரச்சனைக ளைத் தீர்க்க இயலாமை, ஏன்? Hஅணுசக்தி நாடுகள் போரில் ஈடுபடும்போது உலக அமைதிக்கு ஏற்படும் சேதம். Hஇந்தியாவின் நிதி முதலீடுகளின் பாதுகாப்பு. Hபாகிஸ்தானுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் டொனால்டு டிரம்ப்பின் பங்கு என்ன? Hஇந்த மோதலில் இந்தியாவின் இராணுவ இழப்பு கள் என்ன? Hநமது நாட்டில், ‘உள்நாட்டு அமைதியின்மை’ உள்ள தாக பாகிஸ்தானின் பிரச்சாரம் நடக்கிறதே? Hஇந்திய ஊடகங்களின் போர் வெறி மற்றும் போலிச் செய்திகள் போலிச் செய்திகளின் ஆபத்து போலிச் செய்திகள் எவ்வளவு தூரம் சென்றுள்ளன என்பதற்கு நல்ல உதாரணம் உள்ளது. ஒரு கட்டத்தில், சில ஊடகங்கள் பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் கைது செய்யப்பட்டதாகவும், ஆட்சிக் கவிழ்ப்பு நடந்ததாகவும் செய்தி வெளியிட்டன. அது வைரல் ஆனது. மற்றொரு போலி செய்தி: அசிம் முனீர் தன்னை பீல்டு மார்ஷலாக அறிவித்துக் கொண்டார் என்பது. ஆரோக்கியமான உரையாடலின் மத்தியிலும், இந்த நாடுகள் எழுப்பும் சந்தேகங்களை பாரபட்ச மின்றி பகுப்பாய்வு செய்ய முடியும். ஒன்று தெளிவாகி றது: பெரும்பாலான தூதரகங்கள் நமது விளக்கங்க ளுக்கு அப்பாற்பட்ட கருத்துக்களை முன்வைக்கும் போது அவற்றை முறியடிக்கும் பெரும் பொறுப்பை தூதுக்குழுக்கள் மேற்கொண்டிருந்தன.  இது முதன்முறை அல்ல! விரிவான தூதுக்குழுக்களை அனுப்புவதை மோடி கண்டுபிடித்த புதிய ராஜதந்திர உத்தி என்று நமது ஊடகங்கள் சித்தரிக்க முயற்சித்தன. ஆனால் இந்தியா பல பத்தாண்டுகளுக்கு முன்பே இத்தகைய குறிப்பிடத் தக்க ராஜதந்திர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. 1971-இல் இந்திரா காந்தி, தனது மிக வலிமையான அரசியல் எதிரியான ஜெயப்பிரகாஷ் நாராயணனை வெளிநாட்டு தலைநகரங்களுக்கு அனுப்பினார். அந்தப் பணி வங்கதேச நெருக்கடியைக் கருத்தில் கொண்டு செய்யப்பட்டது. நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது, எதிர்க் கட்சித் தலைவர் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையி லான ஒரு குழு ஜெனீவாவிற்கு அனுப்பப்பட்டது பல ருக்கு நினைவிருக்கும். பாகிஸ்தான் மோதலுக்குப் பிறகு மோடி செய்த பணி, அவரது பதினொரு ஆண்டுகால- தன்னிச்சை யான இராஜதந்திர அணுகுமுறையிலிருந்து விலகல் என்று கருதப்பட வேண்டும். மென்மையான  இராஜதந்திரத்தின் சரிவு வெளியுறவுக் கொள்கை இலக்குகளை அடைய ஒவ்வொரு நாட்டுக்கும் அதன் மென்மையான இராஜ தந்திரம் (Soft Power Diplomacy) உள்ளது. இதில் அடங்குபவை: Hஇராஜீயரீதியில் அல்லாத நட்பு குழுக்கள் Hகல்வி சமூகம் மற்றும் ஊடகங்களில் பரிமாற்றங்கள் Hகலாச்சாரக் கூட்டங்கள் மோடி பிரதமரான பிறகு, அவர் இத்தகைய தலையீட் டில் ஈடுபடவோ, மேற்கொள்ளவோ விரும்பவில்லை. அனைத்து இந்திய பிரதமர்களும் வெளிநாட்டுப் பய ணங்களின் போது ஊடகங்களைத் தங்களுடன் அழை த்துச் செல்வது வழக்கம். ஆனால் அந்தத் திட்டத்தை யும் மோடி முடிவுக்குக் கொண்டு வந்தார். இந்திய கலாச்சார உறவுகள் கவுன்சில் (ICCR) கடந்த காலங்களில் இந்தியாவின் கலாச்சார பன்முகத் தன்மையை உலகிற்கு வழங்குவதில் முக்கிய பங்கு வகித்த நிறுவனம். வாஷிங்டனில் ஐசிசிஆர் (ICCR)-க்கான கட்டடம் கட்டத் தொடங்கி 15 ஆண்டுகள் ஆகின் றன. அது இன்னும் நிறைவடையவில்லை. தனிமைப்படுத்தலைத்  தவிர்க்கும் முயற்சி பாகிஸ்தானுடனான மோதலில் இந்தியா தனிமைப் படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக அனைத்துக் கட்சிக் குழு வின் சுற்றுப்பயணமும் அமைந்தது. மோடி அவரது பதவிக் காலத்தில் தனது அனைத்து முட்டைகளையும் அமெரிக்காவின் கூடையில் தான் போட்டார். ஆனாலும், இந்த பிரச்சனையிலும் கூட இந்தியாவின் நலன்களைக் குறைமதிப்பிற்கு உட் படுத்தும் வகையில் தான் அமெரிக்கா செயல்பட்டது. பாகிஸ்தானுடன் போர் நிறுத்தத்திற்கு மத்தி யஸ்தம் செய்ததாக டொனால்டு டிரம்ப் கூறியது குறித்த கேள்வி நான் சென்ற அனைத்து நாடுகளிலும் எழுப் பப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதில், இந்திய அரசாங்கத்தின் விளக்கத்தை உலகம் முழுமையாக ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ளதா என்ற கேள்வி இன்னும் உள்ளது. டிரம்பின் கூற்று ஏன் வலுவாக மறுக்கப்படவில்லை என்ற கேள்வி, பலவீனமான மறுப்புக்கு அப்பால் இன்னும் வானில் மிதக்கிறது. உலகின் நம்பிக்கையை  வெல்ல வேண்டும்! இந்த இராஜதந்திர பயணம் இந்தியாவின் வெளியுற வுக் கொள்கையின் வலிமைகளையும் பலவீனங்களை யும் தெளிவாக எடுத்துக் காட்டியது. உண்மையான ஜனநாயக மதிப்புகளுடன், பன்முக இராஜதந்திரத் தின் மூலம், உலக நாடுகளின் நம்பிக்கையை வெல்ல  வேண்டும். ஊடக வெறியும் போலிச் செய்திகளும் நம் நாட்டின் நம்பகத்தன்மையை சேதப்படுத்துகின்றன. மக்களின் நலனுக்காக, அமைதிக்காக, உண்மையான ஜனநாயகத்திற்காக செயல்படுவதே நமது கடமை.