வாக்குரிமை பறிப்பு பாசிச சக்திகளின் அடுத்த ஆயுதம்
ஏழைகளிடமிருந்து கல்வியைப் பறிப்பது, வளர்ச்சி என்ற பெயரில் விவசாயிகளின் நிலங்க ளைப் பறிப்பது, காடுகளில் பல தலைமுறைக ளாக வாழும் மலைவாழ் மக்களின் வாழ்விடங்களைப் பறிப்பது, துறைமுகங்களின் விரிவாக்கம் என்ற பெய ரில் கடற்கரையில் வாழும் மீனவர்களின் உறைவிடங்க ளைப் பறிப்பது, பொதுத்துறை வங்கிகளின் சேமிப்பு நிதிகளை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கடன்களாக அள்ளிக்கொடுத்துவிட்டு பின்னர் தள்ளுபடி செய்வது, தேசத்தின் விலைமதிக்கமுடியாத இயற்கை வளங் களைப் பறித்து பன்னாட்டு கம்பெனிகள் வரைமுறை இல்லாமல் கொள்ளையடிக்க அனுமதிப்பது, பட்டியல் இன, பழங்குடி, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப் பட்ட, சிறுபான்மை இன மக்களுக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய அதிகார மையங்களில் இருந்து அவர்களை விலக்கி வைப்பது, மாநில அரசுகளின் உரி மைகளைப் பறித்து அவற்றை செயல்பட விடாமல் முடக்குவது என்று ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு வகையில் இந்திய ஜனநாயகத்தினைப் பலவீனமாக் கும் மோடி அரசும், ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினரும் தற்போது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிமடியி லேயே கைவைக்கத் துவங்கியுள்ளனர்.
ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு - அரசியல் சட்டத்திற்கு எதிரான சித்தாந்தம்
இந்த ஆண்டு 2025 ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றா ண்டு. ஜனநாயகம், சோஷலிசம், மதச்சார்பின்மை, தனிமனித அடிப்படை உரிமைகள் போன்ற நமது அரசி யல் அமைப்புச் சட்டத்தின் விழுமியங்களை அவர்கள் என்றும் ஏற்றுக்கொண்டதில்லை. அவை ஐரோப்பிய கலாச்சாரக் கூறுகள் என்றும், நம் மண்ணுக்கும் நமது கலாச்சாரத்திற்கும் அந்நியமானவை என்பதுதான் அவர்களது நிலைப்பாடு. மனுதர்மம் மட்டுமே நமது அரசியல் சட்டமாக இருக்கவேண்டும் என்பதே அவர்க ளது சித்தாந்தம். பெரும்பான்மையான இந்திய மக்கள் நமது அரசி யல் சட்டத்தை இழக்க விரும்பமாட்டார்கள் என்பதைப் புரிந்துகொண்ட அவர்கள் தங்களுடைய முயற்சியில் வெற்றி அடைய புதிய சூழ்ச்சிகளை மேற்கொள்கின்றனர்.
அரசியல் சட்ட நிறுவனங்களின் பாதுகாப்பு
இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கித் தந்த நமது பிதாமகர்கள் எதிர்காலத்தில் இப்படிப்பட்ட அச்சு றுத்தல்கள் ஏற்படக்கூடும் என்பதை எதிர்நோக்கியே, அரசியல் சட்டத்தை பாதுகாக்க அரசியல் சட்ட நிறுவ னங்களை உருவாக்கினர். நாடாளுமன்றம், சட்ட மன்றம், உச்சநீதி மன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்கள், வரையறுக்கப்பட்ட அரசு நிர்வாகம், தங்களுக்கு வழங் கப்பட்ட அதிகார வரம்புக்குள் சுதந்திரமாக செயல் படும் மாநில அரசுகள் என்ற பல நிறுவனங்களை கட்ட மைத்து அவற்றை செழுமைப்படுத்தியிருந்தனர்.
அனைவருக்கும் வாக்குரிமை - சுதந்திரத்தின் மிகப்பெரும் கொடை
நாடாளுமன்ற ஜனநாயகத்தின் ஊற்றுக்கண் “நேர்மையான, சுதந்திரமான தேர்தல்” என்பதில் தெளி வாக இருந்த நமது முன்னோர்கள் அதற்கான தேர்தல் ஆணையத்தினை உருவாக்கினர். அரசியல் சட்டத் தின் பிரிவு 324 தேர்தல்களை நடத்துவதற்கும், வாக்கா ளர் பட்டியல்களை தயார் செய்வதற்குமான முழுமை யான அதிகாரத்தை தேர்தல் ஆணையத்திற்கு வழங்கி யுள்ளது. 18 வயது நிறைவடைந்த இந்திய குடிமக்கள் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமையினை ‘பிரிவு 326’ உறுதிசெய்கின்றது. சாதி, மதம், மொழி, மாநிலம், ஆண்-பெண், படித்த வர்-படிக்காதவர், ஏழை-பணக்காரர் என்ற எந்த வேறு பாடுகளும் இல்லாமல் “அனைவருக்கும் வாக்குரிமை” என்பது சுதந்திரம் நம் நாட்டு மக்களுக்கு தந்த மிகப் பெரும் கொடை. குறிப்பாக விளிம்பு நிலை மற்றும் அடித்தட்டு மக்களின் குரலுக்கு நமது அதிகார வர்க்கம் இன்று செவிசாய்க்கிறது என்றால் அவர்கள் கைகளில் இருக்கும் வாக்குச்சீட்டுகளின் வலிமைதான். ஆதிக்க சாதியினரின் கைகளில் இருந்த அரசியல் அதிகாரம் சாமானியர்களின் கைகளுக்கு மாறியதற்கான மிகப் பெரும் காரணம் அனைவருக்கும் வழங்கப்பட்ட வாக்கு ரிமையே! இட ஒதுக்கீடு, அடிப்படை உரிமைகள், பட்டி யல் இன, பழங்குடி மற்றும் சிறுபான்மையினர் உரிமை களைப் பாதுகாக்கும் சிறப்புச் சட்டங்கள் மற்றும் சமூக நீதிக்கான முன்னெடுப்புகள் அனைத்தும் இன்று நடை முறையில் இருப்பதற்கு அடிப்படையான காரணம் அனைவருக்குமான வாக்குரிமையே!
தேர்தல் ஆணையத்தின் அரசியல்மயமாக்கல்
வலதுசாரி மதவாத பாசிச சக்திகளுக்கு “அனைவ ருக்கும் வாக்குரிமை” என்பதில் என்றும் உடன்பாடு இருந்ததில்லை. கல்வி அறிவு இல்லாத நாட்டில் எல் லோருக்கும் வாக்குரிமை கொடுத்தால் தேசம் சீரழிந்து விடும் என்று கூக்குரலிட்டுப் பார்த்தனர். ஆனால் நமது முதல் பிரதமர் நேரு உள்ளிட்ட தலைவர்கள் “அனைவருக் கும் வாக்குரிமை” என்பதில் மிகவும் உறுதியாக இருந்த தால் எல்லோருக்கும் வாக்குரிமை சாத்தியமாயிற்று. சுதந்திரமாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடத்தி னால் ஆட்சியையும் அதிகாரத்தையும் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள முடியாது என்பதை நன்குணர்ந்த “அவர்கள்” (பாசிச சக்திகள்) சுதந்திரம் நமக்கு வழங்கிய அனைத்து உரிமைகளையும் ஒவ்வொன்றா கப் பறித்தது போல நம்மிடம் இருக்கும் வாக்களிக் கும் உரிமையினையும் பறிக்க சதிவலை விரித்துள்ளனர். தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்யும் அதிகாரம் பெற்ற குழுவிலிருந்து உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக ஒரு ஒன்றிய கேபினட் அமைச்சர் என்ற அடிப்படையில் அமித் ஷாவை பிரதமர் மோடி நியமித்துக்கொண்டார். இருவரும் சேர்ந்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி யின் ஆட்சேபணைகளையும் மீறி தங்களுக்கு வேண்டிய அதிகாரிகளை தேர்தல் ஆணையர்களாக நியமித்துக்கொண்டனர். நாடு முழுவதும் உள்ள அதிகார வர்க்கத்தில் தங்க ளது கருத்தியலுக்கு சார்பாக இருக்கும் அதிகாரிக ளையும், தாங்கள் விரும்புகின்ற எதனையும் செய்யத் துணிந்த அதிகாரிகளையும் அடையாளம் கண்டு அவர் களை தேர்தல் ஆணையத்தில் பணியமர்த்தியுள்ள தால் தற்போது தேர்தல் ஆணையம் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டதோ என்று நடுநிலையாளர்கள் கருதும் அளவுக்கு அதன் நட வடிக்கைகள் ஒருதலைப்பட்சமாக அமைந்துள்ளன.
தேர்தல் ஆணையத்தின் சர்ச்சைக்குரிய நடவடிக்கைகள்
தேர்தல் அட்டவணையினை பாஜகவின் மற்றும் பிரதமரின் வசதிக்கேற்ப தயாரிப்பதும், தேர்தல் பிரச்சா ரங்களின்போது பிரதமர், அமித் ஷா மற்றும் பாஜக கூட்டணி தலைவர்களின் தேர்தல் விதி மீறல்களை கண்டுகொள்ளாமல் இருப்பதும்; பாஜகவுக்கு ஆதர வான அதிகாரிகளை தேர்தல் அலுவலர்களாக நிய மிப்பதும்; எதிர்க் கட்சிகள் ஆட்சியில் இருக்கும் மாநி லங்களில் மாநில தலைமைச் செயலாளர், காவல் துறைத் தலைவர் போன்ற முக்கியமான பணியிடங்களில் இருக்கின்ற அதிகாரிகளை மாற்றிவிட்டு தங்கள் சொல்படி மட்டுமே செயல்படும் அதிகாரிகளை நிய மிப்பதும்; ஆளும் கட்சி வெளியிடும் “விதிகளை மீறும் விளம்பரங்களை” அனுமதிப்பதும்; தேர்தல் பிரச்சாரம் துவங்கியபின்னர் சிபிஐ, வருவாய் புலனாய்வுத் துறை, வருமானவரித் துறை போன்ற ஒன்றிய அரசு துறை அதிகாரிகளை எதிர்க்கட்சி வேட்பாளர்கள் வீடு களிலும், அலுவலகங்களிலும் சோதனை என்கிற பெய ரிலும், விசாரணை என்ற பெயரிலும் அவர்களை தேர் தல் பிரச்சாரம் செய்யவிடாமல் தடுப்பதை அனுமதிப்ப தும்- என்று தேர்தல் ஆணையத்தின் முறைகேடு களை பட்டியல் இட்டுக்கொண்டே இருக்கலாம்.
ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா - சந்தேகங்களின் உச்சம்
இந்த தவறுகளின் உச்சத்தைத்தான் ஹரியானாவி லும் மகாராஷ்டிராவிலும் சந்தித்தோம். பதிவு செய்யப் பட்டதாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட வாக்குகளுக்கும் இறுதியாக எண்ணப்பட்ட வாக்குக ளுக்கும் உள்ள மிகப்பெரிய இடைவெளிகள்; வாக்குப் பதிவின் கடைசி மணித்துளிகளில் அதிசயிக்கத் தக்க வகையில் பதிவாகும் லட்சக்கணக்கான வாக்குகள்; அனைத்துமே கணினி மயமாக்கப்பட்டபோதும் வாக் குப்பதிவின் இறுதி நிலவரங்களை வெளியிடுவதில் உள்ள முரண்பாடுகளும், விளக்கவேமுடியாத கால தாமதங்களும்- பல நியாயமான சந்தேகங்களையும், யூகங்களையும் எழுப்புகின்றன. இந்த சந்தேகங்களை தெளிவுபடுத்தக்கூடிய, வாக்குச்சாவடிகளில் நடந்த வாக்குப்பதிவுகளின் வீடியோ பதிவுகளை யாருக்கும் தரக்கூடாது என்று அவசர அவசரமாக விதிகளைத் திருத்துவதும், நாற் பத்தைந்து நாட்களுக்குமேல் அவற்றை அழித்துவிட வேண்டும் என்று உத்தரவிடுவதும் தேர்தல் ஆணை யம் எதையோ மறைக்க முற்படுகிறது என்ற நியாய மான சந்தேகத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது. 100 சதுர அடி வீட்டில் 150 வாக்காளர்கள் வசிப்பதாக பதிவு செய்யப்பட்டிருக்கும் அக்கிரமத்தை தேர்தல் ஆணையம் நியாயப்படுத்துவதை எப்படி ஏற்க முடியும்? சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற பாஜக கூட்டணி வேட்பாளர்களில் பெரும்பாலானவர்கள் புதி தாக சேர்க்கப்பட்ட வாக்குகளின் காரணமாகவே வெற்றி பெற்றிருப்பது மற்றுமொரு விபரீதம்.
பீகாரில் நடப்பது - வாக்குரிமை பறிப்பின் மெகாசதி
இந்த நிலையில்தான் “SIR” (Special Intensive Revision) என்றழைக்கப்படும் சிறப்பு தீவிர வாக்கா ளர் பட்டியல் சீராய்வு நடவடிக்கை என்ற பெயரில், பீகா ரில் லட்சக்கணக்கான ஏழை, எளிய, பட்டியல் இன, பிற் படுத்தப்பட்ட, சிறுபான்மையின மற்றும் புலம்பெயர்ந் துள்ள தொழிலாளர்களின் வாக்குரிமைகளைப் பறிப்ப தற்கு ஒரு பெரும் அநியாயத்தை தேர்தல் ஆணையம் அரங்கேற்றி வருகின்றது. 2003 ஆம் ஆண்டுக்கு பின்னர் வாக்காளர்களாக பதிவு செய்து இறுதிசெய்யப்பட்ட வாக்காளர் பட்டிய லில் இடம்பெற்றுள்ள வாக்காளர்கள் அனைவரும் தங் களை இந்தியர்கள் என்று நிரூபிப்பதற்கான சில ஆவ ணங்களை ஜூலை மாதம் 25 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யவேண்டும். அப்படி தாக்கல் செய்யாதவர்க ளின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப் படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த வாக்காளர்கள் இது வரை ஐந்து பொதுத் தேர்தல்களில் வாக்களித்துள்ளனர். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் வாக்களித்துள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் நடத்தப்பட்ட வாக்கா ளர் சீர்திருத்தப்பட்டியல் தயாரிக்கப்பட்டபோதும் சரி பார்க்கப்பட்டு, வெளியிடப்பட்டுள்ள சீர்திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளனர்.
தேர்தல் ஆணையம் கேட்கும் ஆவணங்களின் அநீதி
தேர்தல் ஆணையம் இவர்களிடம் கேட்கும் ஆவ ணங்கள் எதுவும் இவர்களில் பலரிடம் இருப்பதற்கு வாய்ப்பில்லை. பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், 12வது வகுப்பு சான்றிதழ், சாதிச் சான்றிதழ், சொத்துரிமைக் கான பத்திரங்கள் என்று நீள்கின்ற பட்டியலில் சாமா னிய அடித்தட்டு மக்களிடம் இருக்கும் ஆதார் அடை யாள அட்டை, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்றவை இடம்பெறவில்லை என்பதுதான் பெரும் துரதிருஷ்டம். மேலும் இவர்களிடம் இல்லாத ஆவணங்களை முப்பது நாட்களுக்குள் பெற்று தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள தேர்தல் ஆணை யத்திற்கு பீகார் அரசு இயந்திரம் எவ்வளவு வேகமாக வேலைசெய்யும் என்று தெரியாதா? தேர்தல் ஆணை யம் வழங்கிய வாக்காளர் அடையாள அட்டையை தேர்தல் ஆணையமே ஏற்கமாட்டோம் என்று சொல்வ தற்கு வெட்கப்பட வேண்டாமா?
புலம்பெயர் தொழிலாளர்களின் வேதனை
இந்தியாவில் பெரும்பாலான புலம்பெயர் தொழி லாளர்கள் பீகாரைச் சேர்ந்தவர்களே! அவர்களுக்கும் அவர்களது சொந்த மண்ணுக்கும் இருக்கும் ஒரே தொடர்பு இந்த வாக்களிக்கும் உரிமை மட்டுமே! இவர்க ளில் அநேகருக்கு அவர்களது வாக்களிக்கும் உரிமைக ளைப் பறிப்பதற்கு இப்படி ஒரு சதி நடப்பதே தெரியாது. தெரிந்தாலும் பெரும் பொருட்செலவு செய்து பீகாரு க்கு பயணித்து மீண்டும் தொழில் செய்யும் மாநிலங்க ளுக்கு திரும்ப தேவைப்படும் பொருளாதார வசதி அவர்களிடம் இல்லை. அவர்களது அரைவேட்டியையும் அவிழ்த்து, சொந்த மண்ணில் அரசியல் உரிமைகளற்ற நிர்வாண மனிதர்களாக ஆக்கும் இக்கொடுமையினை உச்ச நீதிமன்றம் தடுக்குமா என்பதைப் பார்க்க பதற்றத்து டன் காத்திருக்கின்றோம்.
வாக்குரிமை பறிப்பின் இலக்கு - அடித்தட்டு மக்கள்
இந்த சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு, எவ்வித முன்தயாரிப்பும் இன்றி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைக் கலந்து ஆலோசிக்காமல் அரை வேக்காட்டுத்தனமாக அவசரம் அவசரமாக நடத்தப் படுவதை நடுநிலையாளர்கள் அனைவரும், ஊடகங்க ளும் கடுமையாகக் கண்டித்துள்ளனர். இதற்காக நிய மனம் செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடி அலுவலர் கள் மட்டும்தான் தேர்தல் ஆணையத்தின் படிவங்களை வினியோகிக்க வேண்டும் என்றும் பூர்த்தி செய்யப் பட்ட படிவங்களை அவர்கள் மட்டுமே பெற வேண்டும் என்ற விதிகள் எங்கேயும் பின்பற்றப்படவில்லை என்றும் சொல்கிறார்கள். உள்ளூர் ஊராட்சி மற்றும் நகராட்சி மன்றங்களின் சுகாதாரப் பணியாளர்களே இப்பணிக ளை செய்வதாகத் தெரிகிறது. அவர்களுக்கு எவ்வித மான முறையான பயிற்சிகளும் அளிக்கப்படவில்லை. காய்கறிக் கடைகளில் அச்சடிக்கப்பட்ட பாரங்கள் நூற்றுக் கணக்கில் குவிந்து கிடப்பதை ஒரு தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை பெற்றுக்கொண்டதற்கு எவ்வித ரசீதும் வழங்குவ தில்லை. லட்சக்கணக்கான வாக்காளர்கள் தங்களது வாக்குரிமைகளை இழக்கப்போவது உறுதி. தேர்தல் ஆணையம் நடத்தும் இந்த சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு காரணமாக வாக்குரி மையினை இழக்கப்போகின்ற பெரும்பாலோர் அடித் தட்டு மற்றும் விளிம்பு நிலை மக்களே! பட்டியல் இன மக்களும், சிறுபான்மை மக்களும் சொத்துப் பத்தி ரங்களுக்கு எங்கே போவார்கள்? புலம்பெயர்ந்த தொ ழிலாளர்களுள் பெரும்பான்மையினர் பிற்படுத்தப் பட்ட மக்களே! வாக்காளர் பட்டியல் சீராய்வு என்பது இவர்களிட மிருந்து வாக்குரிமைகளைப் பறிக்கும் சதி என்று இப் போது புரிகிறதா? “வாக்குரிமை இல்லாத எனக்கு இந்த நாட்டில் இனி மேல் என்ன இருக்கிறது?” என்ற நிலை, இந்த தேசத் தின் இறையாண்மைக்கு எவ்வளவு பெரிய ஆபத்து என் பதை தேர்தல் ஆணையம் உணர்வதாகத் தெரியவில்லை. தேர்தலின் மீதும், தேர்தல் ஆணையத்தின் மீதும் மக்களுக்கு நம்பிக்கை உள்ளவரைதான் ஜனநாய கம் வாழும். ஆட்சியில் உள்ளவர்கள் தவறு செய்தால் தேர்தல் மூலம் நீதி வழங்கலாம். ஆனால் தேர்தல் முறை களே தவறும்போது நியாயம் கிடைப்பது எங்கே?