மோடி அரசாங்கம், வேலை வாய்ப்பு என்கிற நோக்கத்தோடு செயல்படுவதற்கான வாய்ப்பே கிடையாது. எப்போதாவது வேலை வாய்ப்புத் திட்டங்களை அவர்கள் அறிவிக்கிறார்கள் என்றால் அது தவிர்க்க முடியாததாக இருக்கும் அல்லது தற்காலிகமாக ஏற்படும் கோபத்தை மட்டுப்படுத்துவதாக இருக்குமே தவிர வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கு என்றே திட்டங்களை உருவாக்க மாட்டார்கள். அது பொதுவாக முதலாளித்துவ அரசமைப்பின் இயல்பாகும்.
14.06.2022 அன்று அடுத்த 18 மாதங்களில் 10 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கிட இலக்கை குறிவைத்து செயல்பட போவதாக பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். குடிகாரன் பேச்சு கூட தெளிந்தால்தான் போச்சு. ஆனால் மோடியின் அறிவிப்பு அறிவிப்பதற்கு முன்பாகவே நடை பெறாது என்பதை உத்தரவாதப்படுத்திக் கொண்டு அறிவிப்பது. இதற்கு பல உதாரணங்களை கூற முடியும்.
ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலை
இந்த முழக்கம் தான் நரேந்திர மோடி 2014 தேர்தலில் இளைஞர்களின் வாக்கை அப்படியே அள்ளிக் கொண்டு செல்வதற்கு காரணமாக இருந்தது. அந்த அளவிற்கு வேலையின்மை தீவிரப்பட்டிருந்தது. ஆனால், 8 ஆண்டுகள் கழித்த பிறகு வேலை யின்மையின் தீவிரம் இன்னும் அதிகமாகியிருக்கிறது. கடந்த 43 வருடங்களில் இல்லாத அளவிற்கு வேலை யின்மை அதிகரித்திருப்பதாக அரசின் புள்ளி விப ரங்களே கூறுகின்றன. ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலை என்றால் கடந்த 8 ஆண்டுகளில் 16 கோடி பேருக்கு வேலை கிடைத்திருக்க வேண்டும். ஆனால், மோடி ஆட்சிக்கு வரும்போது இருந்ததை விட தற்போதைய நிலையில் தொழிலாளர்களின் எண்ணிக்கை கடுமையாக குறைந்திருக்கிறது. 2016-17 ஆம் ஆண்டு ஒட்டுமொத்த மாக பணியில் இருந்தோர் 40.7 கோடி பேர். உற்பத்தி, ரியல் எஸ்டேட், கட்டுமானம், சுரங்கம், ஊடகம், பொது நிர்வாகம், பாதுகாப்பு உள்ளிட்டு அனைத்து துறைகளி லும் வேலை பார்த்தோர் எண்ணிக்கை இது. அர சுத்துறை, பொதுத்துறை, தனியார் துறை, அணி திரட்டப்பட்ட தொழிலாளர்கள், அணிதிரட்டப்படாத தொழிலாளர்கள், தினக்கூலி தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் என்று அனைத்து பகுதி தொழிலா ளர்களின் எண்ணிக்கை இது. ஆனால், இது 2020-21ல் 37.8 கோடியாக குறைந்துவிட்டது. அதாவது, ஏற்கனவே இருந்த வேலை வாய்ப்புகள் 2.9 கோடி இல்லாமல் போய்விட்டன. ஆண்டுதோறும், சுமார் 1.25 கோடி பேர் புதிதாக வேலை தேடி படிப்பை முடித்துவிட்டு வருகிறார்கள். எனவே, அவர் சொன்ன 2014க்கும் 2022க்கும் இடையே 8 ஆண்டுகளில் கூடுதலாக 10 கோடி பேர் வேலை தேடி வந்திருக்கும் நிலையில் தான் இந்த சரிவு ஏற்பட்டி ருக்கிறது. எனவே, ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என்று சொன்னதை மோடி யோசித்தும் சொல்ல வில்லை, செய்ய வேண்டுமென்று விருப்பத்தோடும் அதை சொல்லவில்லை. எனவே, இந்த வேலைக்கு அவர் சரிப்பட்டு வரமாட்டார்.
2022க்குள் உற்பத்தி துறை வேலை வாய்ப்பு இரட்டிப்பாக்கப்படும்
முதலில் சொன்ன ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்பை அளிக்க முடியாது என்று தெரிந்தே சொன்ன மோடி அதை அப்படியே விட்டுவிட்டு புதிதாக இன்னொரு வாய்ச்சவடாலை அடித்துவிட்டார். அது தான் 2015-16ல் இந்தியாவில் உற்பத்தித் துறையில் 5 கோடி பேர் வேலை பார்க்கிறார்கள். 2022ஆம் ஆண்டுக்குள் இதை இரண்டு மடங்காக்கி உற்பத்தித் துறையில் 10 கோடி பேரை வேலைக்கு வைக்கப் போகி றோம் என்று வழக்கம்போல அடுத்த மூட்டையை அவிழ்த்துவிட்டார். ஆனால், 2015-16இல் 5 கோடி யாக இருந்த வேலை வாய்ப்பு 2020-21இல் இரண்டு மடங்காகி 10 கோடி வேலை வாய்ப்புகள் உற்பத்தித் துறையில் வருவதற்கு பதிலாக இருந்த வேலை வாய்ப்பு பாதியாக 2.73 கோடியாக குறைந்துவிட்டது. எனவே, உற்பத்தித்துறையில் வேலை வாய்ப்பை இரட்டிப் பாக்கும் வேலைக்கும் மோடி சரிப்பட்டு வரவில்லை.
பொதுத்துறை வேலைகளுக்கு பொங்கல் வைத்த மோடி
பொதுத் துறை வேலைகள் என்றால், பாதுகாப்பான வேலைகள் என்பதை சிதைத்த பெருமை மோடிக்குத் தான் உண்டு. பொதுத்துறைகளில் 2013-14ஆம் ஆண்டில் பணிபுரிந்த ஒட்டுமொத்த தொழிலாளர்க ளின் எண்ணிக்கை 16.9 லட்சம். இதில் நிரந்தரத் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் 13.5 லட்சம் பேர். அதாவது, 80 சதவிகிதம் பேர் நிரந்தரப் பணியில் இருந்தார்கள். 2019-20 ஆம் ஆண்டில் மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 14.7 லட்சம் பேராக சுருங்கிவிட்டது. இதில் நிரந்தரத் தொழிலாளர்கள் 9.2 லட்சம் பேர். அதாவது, நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 62.5 சதவிகிதமாக குறைந்துவிட்டது. மொத்த தொழிலாளர்கள் 2.18 லட்சம் பேர் குறைந்து விட்டார்கள். அதாவது, மோடி அரசு குறைத்து விட்டது. எனவே, பொதுத்துறை நிறுவனங்களின் மூலம் வேலை வாய்ப்பை உருவாக்கி சாதித்துவிடுவோம் என்றதும் ஒரு ஏமாற்றாகத்தான் இருந்திருக்கிறது. எனவே, இந்த வகையில் மோடி வேலை வாய்ப்பு அளிக்கும் வேலைக்கும் சரிப்பட்டு வரமாட்டார் என்பதுதான் தற்போதைய நிலை.
18 மாதத்தில் 10 லட்சம் வேலை வாய்ப்புகள்
மேலே கண்ட மூன்று வகைகளிலும் அறுத்து தள்ளி விடுவதாக பேசிக் கொண்டிருந்த மோடி, அது எதை யும் செய்யவில்லை. எனவே, தற்போது அடுத்த 18 மாதங்களில் அதாவது 2024 தேர்தலுக்கு முன்பு 10 லட்சம் பேருக்கு அரசு வேலை தருவதாக இன்னொரு லாலிபாப்பை நீட்டியிருக்கிறார். இதோடு சேர்த்து இன்னொன்றையும் சொல்லி இருக்கிறார். 45 - 50 ஆயிரம் இளைஞர்களை ராணுவத்தில் சேர்க்கப் போகி றாராம். இவர்களில் 75 சதவிகிதம் பேரை 5 ஆண்டு கள் முடிந்தபின் வேலையை விட்டு நீக்கிவிடுவாராம். அதாவது, 5 ஆண்டுகளுக்கு பிறகு 26 வயதான சுமார் 30 ஆயிரம் பேர் ராணுவப் பணியிலிருந்து விடு விக்கப்பட்டு விடுவார்கள். இவர்கள் புதிய வேலைக ளுக்கும் செல்லமுடியாது. தங்கள் படிப்பை தொடர்வதற்கான ஊக்கத்தையும் இழந்திருப்பார்கள். கல்யாணம் செய்தும் பிரம்மச்சாரி என்பது போல, வேலை கிடைத்தும் வேலையில்லா பட்டாளத்தில் சேர்ப வர்களை மோடி அரசு திட்டமிட்டு உருவாக்குகிறது. எனவே, இந்த வகையிலும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வேலைக்கு மோடி சரிப்பட்டு வரமாட்டார்.
உழைப்புச் சுரண்டலை அதிகரிக்கும் ஏற்பாடு
எனவே, மோடியை பொறுத்தமட்டில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான எந்த நோக்க மும் இல்லை, முயற்சியும் இல்லை. அந்நிய முதலாளிக ளும், இந்திய பெரு முதலாளிகளும் இந்திய இளைஞர்க ளை தினக்கூலி, அத்தக்கூலி, அவுட்சோர்சிங், ஒப்பந்தக் கூலி என்று உழைப்புச் சுரண்டலை அதிகப் படுத்துவதற்கான ஏற்பாட்டை செய்து கொடுக்கிற வேலையைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். இது அவரது இயல்பான குணம். எனவே தான் இன்று பீகாரில் பல இடங்களில் வேலை தேடிக் கொண்டிருக்கும் இளைஞர்கள் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக போராட்டக்களத்தில் முன்னிற்கிறார்கள். கடந்த காலத்தில் ரயில்வே வேலை வாரியத்தின் மோசடிக்கு எதிராக உத்தரப்பிரதேச தேர்தலுக்கு முன்பாக பீகாரில் இருந்துதான் போராட்டம் துவங்கியது. 35,000 பணியிடங்களுக்கு ஒரு கோடி பேர் மனு செய்திருந்த நிலையில் பணித் தேர்வில் மோசடி நடந்ததாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அதையொட்டி, அந்த தேர்வு முடிவு களை வெளியிடுவதை மோடி அரசாங்கம் நிறுத்தி வைத்தது.
மோடி அரசாங்கம், வேலை வாய்ப்பு என்கிற நோக்கத்தோடு செயல்படுவதற்கான வாய்ப்பே கிடையாது. எப்போதாவது வேலை வாய்ப்புத் திட்டங்க ளை அவர்கள் அறிவிக்கிறார்கள் என்றால் அது தவிர்க்க முடியாததாக இருக்கும் அல்லது தற்காலி கமாக ஏற்படும் கோபத்தை மட்டுப்படுத்துவதாக இருக்குமே தவிர வேலை வாய்ப்பை உருவாக்கு வதற்கு என்றே திட்டங்களை உருவாக்க மாட்டார்கள். அது பொதுவாக முதலாளித்துவ அரசமைப்பின் இயல்பாகும். அதனால்தான் இடதுசாரிகள் ஆதரவோடு கொண்டு வரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தை வரலாற்றுப் பிழை என்று நரேந்திர மோடி ஒன்றுக்கும் மேற்பட்ட தருணங்களில் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தார். எனவே, புதிய கனவுகளோடு படித்து முடித்துவிட்டு வேலை வாய்ப்பிற்காக காத்திருக்கும் இளைஞர்கள் மோடி தலைமையிலான பாஜக அரசின் தந்திரங்களை புரிந்து கொண்டு உறுதியாகவும், வலுவாகவும், தொடர்ச்சியாகவும் போராட வேண்டும்.
கட்டுரையாளர் : சிபிஐ(எம்) மாநிலச் செயற்குழு உறுப்பினர்