சந்தேகத்துக்கு இடமின்றி கடந்த 8 ஆண்டுகளில் மிகவும் பரவசமூட்டிய தருணம் இது! 74 வயதான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் அவர்கள் நீதிமன்றத்தின் ஆணையை கையில் ஏந்தி, ஜஹாங்கீர்புரி யில் ஆணவத்துடன் பொறுப்பற்ற முறையில் கட்டிடங்களை இடித்து கொண்டிருந்த புல்டோசரை மறித்துநின்றார். ஜஹாங்கீர்புரி தில்லியில் உள்ள தொழிலாளி வர்க்கம் வாழும் ஒரு குடியிருப்பு. பிருந்தாகாரத் அவர்களின் மிகவும் தைரியமான செயல் கட்டிடங்களை இடிக்கும் இந்துத்துவாவின் செயல்களை முற்றிலும் நிறுத்தியது. உச்சநீதிமன்றத்தின் ஆணையும் முன்னுக்கு கொண்டுவரப்பட்டது.
பாஜகவின் வஞ்சகத் திட்டப்படி அரங்கேற்றப்பட்ட இந்த இழி செயலை தடுத்து நிறுத்தியதில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அவர்களின் பங்கை ஊடகங்கள் முக்கியப்படுத்திக் கூறின. அது நியாயமானதே! அதே சமயத்தில் ஊடகங்கள் பிருந்தாகாரத்தின் போராட்டத்தை இருட்டடிப்பு செய்தன; அல்லது குறைந்த முக்கியத்து வம் தந்தன. தொலைக்காட்சி பிம்பங்களோ அல்லது வாட்சப் தகவல்களோ வரவில்லையெனில் பிருந்தாகாரத் ஜஹாங் கீர்புரிக்கு சென்றார் எனும் தகவல் கூட உங்களுக்கு தெரிந்திருக்காது! தங்கள் தைரியத்தை பறைசாற்றிக் கொள்ளும் ஊடகங்களின் நிலைமை இதுதான்! புல்டோசரை மறித்து பிருந்தாகாரத் நின்ற அந்த தருணம், தமது பாரபட்ச நிலையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் உருவாகியது ஊடகவியலாளர்களுக்கு மட்டுமல்ல; முஸ்லீம்களுக்கும் கூட இது ஆழமாக சிந்திக்க வேண்டிய தருணத்தை விளைவித்துள்ளது. செங்கொடி இயக்கத்துடன் கை சேர்த்து செவ்வணக்கம் சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை முஸ்லீம்கள் சிந்திக்க வேண்டும்.
ஆம் ஆத்மி கட்சியின் இரட்டை வேடம்
பிருந்தாகாரத் அவர்களின் தைரியமான செயலுடன் ஆம் ஆத்மி அல்லது காங்கிரசின் செயல்களை ஒப்பிட்டுப் பார்த்தால் தங்களுக்கு எவ்வளவு அநீதியை அவர்கள் இழைத்திருக்கிறார்கள் என்பதை முஸ்லீம்கள் புரிந்து கொள்ள இயலும். தில்லியில் பெருவாரியான முஸ்லீம் களின் வாக்குகளை இந்த இரு கட்சிகள்தான் பெறுகின்ற னர். இந்த இரு கட்சிகளும் களத்திற்கு வராததற்கு அவர் களின் அலட்சியம் அல்லது கற்பனை வளமற்ற அரசியல் என நீங்கள் விமர்சிக்கலாம். ஆனால் உண்மை அதுவல்ல!
முஸ்லீம் வாக்குகளைப் பெறும் இந்த அரசியல் கட்சிகள் களத்துக்கு வராமல் போனதற்கு காரணம் என்ன?
முஸ்லீம்களை பாதுகாக்க களத்துக்கு வந்தால் இந்துக்களின் வாக்குகளை இழப்போம் எனும் பயம் மற்றும் அரசியல் கணக்குதான் காரணம். தாங்கள் களத்துக்கு வராவிட்டாலும் பாஜக ஆட்சி குறித்த பயம் காரணமாக வேறு வழியின்றி முஸ்லீம்கள் தங்களுக்குத்தான் வாக்களிப்பார்கள் என இந்தக் கட்சிகள் இறுமாப்புடன் கூடிய நம்பிக்கையும் கொண்டுள்ள னர். நாடாளுமன்றம்/சட்டமன்றம்/உள்ளாட்சி என எந்த தேர்தலாக இருந்தாலும் முஸ்லீம்களுக்கு வேறு வழியில்லை என இந்த கட்சிகள் நினைக்கின்றன. 2020ம் ஆண்டு ஆம் ஆத்மி தில்லி தேர்தல்களில் வெற்றிபெற்ற பிறகு அந்த கட்சியின் ஒரு தலைவர் “எங்களுக்கு வாக்க ளிக்காமல் முஸ்லீம்களுக்கு வேறு என்ன வழி உள் ளது?” என அகம்பாவத்துடன் என்னிடம் சொன்னார். ஆம் ஆத்மி கட்சியின் இந்த சிந்தனைதான் ஜஹாங்கீர்புரி வன்முறையில் அவர்களது அணுகுமுறையை உருவாக்கியது. சஞ்சய் சிங்/ ராகவ் சத்தா/அதிஷி சிங் ஆகிய ஆம் ஆத்மி கட்சியின் தலை வர்கள் “உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வீட்டையும் பாஜகவின் தலைமை அலுவலகத்தையும் இடித்தால் மட்டுமே இந்தியாவில் ரவுடித்தனமும் வன்முறையும் நிற்கும்” என விமர்சனம் செய்தனர். மேலோட்டமாக பார்த்தால் இது தைரியமான விமர்சனமாக தோன்றும். ஆனால் உண்மையில் இது “நடைமுறை செயல்கள் அல்லாத வெறும் கூச்சல்தான்” என்பதை புரிந்து கொள்வது கடினமல்ல.
இந்த வெற்றுக் கூச்சல்கள் கூட இந்துக்களை தமது கட்சியிடமிருந்து தூர தள்ளிவிடக்கூடாது என்பதற்காக இந்த தலைவர்கள் வேறு ஒரு வினோதமான கருத்தாக்கத் தையும் முன்வைத்தனர். இந்தியாவில் ரோஹிங்கியா மற்றும் வங்கதேச முஸ்லீம்கள் அதிகமாக இருப்ப தால்தான் வன்முறையும் உருவாகிறது எனவும் கூறினர். இவர்களை பா.ஜ.க. அரசாங்கம் வேண்டுமென்றே குடிய மர்த்தும் குறிப்பிட்ட இடங்களில்தான் வன்முறையும் வெடிக் கிறது என ஆம் ஆத்மி தலைவர்கள் கூறுகின்றனர். அர சாங்க கணக்குபடி இந்தியாவில் 14,000 ரோஹிங்கியாக்கள் உள்ளனர். ஆனால் ராணுவ பாதுகாப்பு அமைப்புகள் 40,000 பேர் உள்ளதாக கூறுகின்றன. ராமநவமி மற்றும் அனுமான் ஜெயந்தியை முன்னிட்டு நாட்டின் பல பாகங் களில் வன்முறைகள் நடந்தனவே! அதற்கெல்லாம் ரோஹிங்கியாக்களும் வங்கதேச முஸ்லீம்களும்தான் காரணமா? நிச்சயமாக இல்லை. வன்முறைக்கு காரணம் பாஜகவின் ஆணைப்படி செயல்படும் ‘வெளிநாட்டு முஸ்லீம்கள்’தான் என ஆம் ஆத்மி தலைவர்கள் அவர்களை இழிவுபடுத்தினர். அவர்கள் ஒரு பக்கம் அமித்ஷாவை விமர்சனம் செய்தது முஸ்லீம்களை திருப்திபடுத்த! மறுபுறம் முஸ்லீம்களை வன்முறையாளர்கள் என விமர்சிப்பது இந்துக்களை சமாதானப்படுத்த! தமது வாக்கு வங்கியின் அனைத்துப் பிரிவினரையும் சமாதானப்படுத்தும் இந்த முயற்சி கடந்த காலங்களில் காங்கிரஸ் கையாண்ட உத்தி!
ஆம் ஆத்மியின் இந்த மூன்று தலைவர்களும் ஒரே மாதிரியான விமர்சன அறிக்கைகளை வெளியிட்டனர். இது அரவிந்த் கெஜ்ரிவால் உருவாக்கிய அறிக்கை என நீங்கள் நம்பாமல் இருக்க முடியாது. ஆனால் கெஜ்ரிவால் இந்த வன்முறைகள் அல்லது புல்டோசர் இடிப்பு குறித்து எதுவும் பேசமாட்டார். சங் பரிவாரத்தின் வன்முறைகள் குறித்து மோடி எப்படி பேச மாட்டாரோ அப்படி கெஜ்ரிவாலும் மவுனம் காப்பார். தில்லியின் ஆதர்ஷ் நகர் சட்டமன்ற தொகுதியில்தான் ஜஹாங்கீர்புரி பகுதி உள்ளது. கொடுமை என்னவெனில் இந்த தொகுதியின் ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் பவண் சர்மா, பிருந்தா காரத் புல்டோசரை மறித்து இடிப்புகளை நிறுத்திய 24 மணி நேரத்துக்கு பின்னர்தான் அந்த பகுதிக்கே வந்தார்.
காங்கிரஸ் விழித்துக் கொள்ளுமா?
காங்கிரஸ் கட்சியின் தூதுக்குழுவும் 24 மணி நேரம் கழித்துத்தான் ஜஹாங்கீர்புரி பகுதிக்கு வந்தது. அவர்களின் நோக்கமும் ஆம் ஆத்மி நோக்கமும் ஒரே மாதிரி எனத் தோன்றுகிறது. காங்கிரசின் பிரச்சனை என்ன வென்றால் ராகுல் காந்தி போல சமூக ஊடகங்களில் மட்டும் செயல்பட்டால் போதுமானது எனத் எண்ணு கின்றனர். மென்மையான இந்துத்துவாவை பல சமயங்களில் பல கோணங்களில் காங்கிரஸ் கைக் கொள் கிறது. இதன் மூலம் இந்துத்துவாவின் மதவாதத்தை எதிர்கொள்ள முடியும் என பல வடநாட்டுக் கட்சிகள் போல காங்கிரசும் கணக்குப் போடுகிறது. காங்கிரசின் மென்மையான இந்துத்துவா நீண்ட வரலாறு கொண்டது. இன்று முஸ்லீம்களை அலைக்கழிக்க பாஜக பயன்படுத்தும் பல சட்டங்கள் காங்கிரஸ் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டவை என்பதை குறிப்பிடுவது தவறாகாது. இந்திரா காந்தியின் படுகொலைக்கு பின்னர் சீக்கியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட ரத்தக்களரியை இந்திய குடியரசின் பக்கங்களிலிருந்து அகற்றிவிட முடியுமா? இன்றைய சூழலில் காங்கிரஸ் விரைவில் விழித்துக் கொள்வது நல்லது.
இடதுசாரிகளே முஸ்லீம்களை காப்பாற்ற இயலும்!
இத்தகைய கட்சிகளின் பாசாங்கும் இரட்டை அணுகு முறையும்தான் முஸ்லீம்கள் இடதுசாரிகளுடன் கை சேர்க்க வேண்டிய தேவையை உருவாக்குகிறது. ஒவ்வொரு கட்சியிலும் பிருந்தா காரத் போன்றவர்கள் இருப்பார்கள் எனவும் அவர்கள் தங்களின் உதவிக்கு ஓடோடி வருவார்கள் எனவும் முஸ்லீம்கள் எதிர்பார்க்க முடியாது. கம்யூனிஸ்டுகள் கடவுள் நம்பிக்கை இல்லா தவர்கள் எனவும் மத நம்பிக்கை உள்ளவர்களுக்கு எதிரானவர்கள் எனவும் கடுமையான பிரச்சாரம் உள்ளது என்பது உண்மையே! இந்த கருத்து உண்மை அல்ல என்பது ஒரு பக்கமிருந்தாலும் மனித்தன்மையற்று கொன்றும் எரித்தும் கொலை பாதகம் செய்யும் பக்தி யாளர்களை ஆதரிப்பதைவிட மனிதத்தன்மையை உயர்த்தி பிடிக்கும் நாத்திகர்களை ஆதரிப்பது மேலானது! கேரளாவில் 27 சதவீதம் முஸ்லீம்கள் உள்ளனர். அவர்களில் கணிசமானவர்கள் கடந்த சட்டமன்ற தேர்தல்களில் இடதுசாரிகளை ஆதரித்தனர்.எனவேதான் முஸ்லீம் லீக் கூட காங்கிரஸ் கூட்டணியில் தொடர வேண்டுமா என நினைக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகிறது. இடதுசாரிகளின் வர்க்க அரசியல் முஸ்லீம் களுக்கு ஏற்றது. ஏனெனில் பெரும்பாலான முஸ்லீம்கள் சமூக பொருளாதார குறியீடுகளில் மிகவும் பின் தங்கி யுள்ளனர். உழைக்கும் வர்க்கங்களின் ஒருமைப்பாட்டு டன் செயல்படும் இடதுசாரிகள்தான் முஸ்லீம்களுக்கு ஏற்ற அரசியல் சக்தியாக அமைய முடியும். சாதிய அடிப் படையில் செயல்படும் கட்சிகள் (அவை பிற்படுத்தப்பட்ட அல்லது தலித் அடிப்படையிலான எந்த பிரிவாக இருந்தாலும்) உழைக்கும் வர்க்கங்களை திரட்டும் வாய்ப்பை பயன்படுத்த தவறிவிட்டனர். அத்தகைய வர்க்க சிந்தனைகள் அவர்களிடம் இல்லை.
சங் பரிவாரத்தின் வன்முறை அரசியலில் இந்துக்களை திரட்ட முஸ்லீம் எதிர்ப்பை ஒரு ஆயுதமாக பயன் படுத்தும் இந்த நேரத்தில், முஸ்லீம்களைப் பாதுகாக்க பல கட்சிகள் முன்வராத சூழலில் முஸ்லீம் சமூகம் நீண்ட கால நோக்கிலிருந்து அவர்களுக்கு எது சிறந்த அரசியல் விருப்புரிமை என்பதை சிந்திக்க வேண்டும். முஸ்லீம்கள் முன்பு பல இஸ்லாமியக் கட்சிகளின் விருப்புரிமை உள்ளது என்பது உண்மைதான்! ஆனால் எந்த ஒரு இஸ்லாமியக் கட்சியும் இன்றைய சூழலில் குறிப்பிடத்தக்க இந்துக்களின் வாக்கு சதவீதத்தை பெற இயலாது. அந்த திறன் இடதுசாரிக் கட்சிகளுக்குதான் உள்ளது. இடதுசாரிகளின் பாரம்பரிய அணுகுமுறை என்னவெனில் அவர்கள் பல்வேறு உழைக்கும் வர்க்கங்களின் கோரிக்கைகளை முன்வைத்து சமூக அர சியல் இயக்கங்களை தொடங்கி அவற்றை வலுவாக்கு கின்றனர். மிகவும் கடுமையாக உழைத்து ஊழியர்களை உருவாக்குகின்றனர். எனவேதான் முஸ்லீம்கள் கம்யூனிஸ்டுகளுடன் கைகோர்க்க வேண்டும். முஸ்லீம்களுக்கு பாதுகாப்பு கம்யூனிஸ்டுகள்தான்! வாக்குகளைப் பெற்றுக் கொண்டு பின்னர் கைவிடும் கட்சிகள் முஸ்லீம்களை பாதுகாக்க இயலாது.
ஆர்எஸ்எஸ்-சின் இரண்டாவது தலைவர் கோல்வால்கர் இந்தியாவின் உள் எதிரிகள் என முஸ்லீம்கள்/கிறித்துவர்கள்/ கம்யூனிஸ்டுகள் ஆகியோரை சுட்டிக்காட்டினார். கோல்வால்கரின் இந்த பயங்கரவாத அணுகுமுறை இரு முக்கிய சிறுபான்மை மக்களையும் கம்யூனிஸ்டுகளுடன் சேர வைக்க வேண்டும். இவர்களைத்தான் கடந்த 8 ஆண்டுகளில் மோடி அரசாங்கம் உபா போன்ற கடுமையான சட்டங்கள் மூலம் சிறைகளில் தள்ளி, பிணையும் தராமல் விசார ணையையும் விரைவுபடுத்தாமல் கொடுமைப்படுத்தி யுள்ளது. எனவேதான் முஸ்லீம்கள் செங்கொடியின் பக்கம் கவனம் செலுத்தி செவ்வணக்கம் சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என கூறினால் தவறாகாது.
நியூஸ் கிளிக் இணைய இதழில் வெளி வந்த கட்டுரையின் பகுதிகள்
தமிழாக்கம் – அ.அன்வர் உசேன்