articles

img

கேலிக்கூத்தாகும் ஆளுநர்களின் அபத்தமான, விசித்திரமான செயல்பாடுகள்

...நேற்றைய தொடர்ச்சி

ஆளுநரை பல்கலைக்கழக வேந்தராக்கும் நடைமுறை பழங்கால வரலாற்றுப்பூர்வமான தேவையாக முன்பு வரை இருந்திருக்கலாம். விடுதலை இந்தியாவின் காலமும், சூழலும் மாறிவிட்டதாலும் இப்போது அந்தத் தேவை எழவில்லை.

விசாரணை ஆணையங்கள்,  உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரைகள்

கூட்டாட்சி உறவுகளில் தொடரும் பதற்றத்தை தணிப்பதற்காகவும், ஒன்றிய- மாநில உறவுகளை விரிவாக ஆராய்வதற்கும் விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டன.சர்க்காரியா விசாரணை ஆணையம் (1983) அரசமைப்புச் சட்டம் இயங்கும் முறையை ஆய்வு செய்தது. பூஞ்சி விசாரணை ஆணையம் (2007)ஒன்றிய-மாநில உறவுகளை மிகவும் கூர்மையாக ஆய்வு செய்தது. பூஞ்சி விசாரணை ஆணையம் ஆளுநர் நியமனம் செய்யும் முறை, அவரது விருப்ப உரிமை, ஆலோ சனை வழங்கும் அதிகாரங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து பல்வேறு பரிந்துரைகளை வழங்கி உள்ளது. மேலும், உச்ச நீதிமன்றம் அரசமைப்புச் சட்டம் குறித்த பல்வேறு தீர்ப்புகளிலும் அவ்வப்போது தமது தீர்ப்பு களில் கூட்டாட்சி உறவுகள் பற்றி தெளிவுபடுத்தி யுள்ளது. ஆனால் ஒன்றிய அரசுகள் இவை அனைத்தை யும் அப்பட்டமான முறையில் மீறியுள்ளன.

ஆளுநரின் தகுதியும்,  நியமன முறையும்

ஆளுநர் நியமனம் குறித்து அரசமைப்புச் சட்ட நிர்ணய சபையில் கூர்மையான விவாதம் நடை பெற்றது. ஆளுநர் நியமனம் குறித்து நேரு என்ன சொன்னார் என்பதை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். “..... மொத்தத்தில் பார்த்தால் அரசியலுக்கு அப்பாற்பட்டு வெளியில் இருந்து ஆட்களை தேர்வு செய்வது விரும்பத்தக்கது. அவர் அரசியலில் பெரும் பங்கு வகிக்காதவராக இருக்கலாம். கல்வியாளர்கள் போன்று வாழ்க்கையின் பல துறைகளில் உள்ள புகழ் பெற்றவர்களை தேர்ந்தெடுக்கலாம். அவர்கள் அரசின் கொள்கை, திட்டங்கள், செயல்பாடுகள் எல்லாவற்றி லும் உதவி புரிவதுடன் அரசியல் கட்சிக்கு அப்பாற் பட்டவராக இருப்பார்கள்” என்று நேரு குறிப்பிட்டார். பூஞ்சி விசாரணை ஆணையம் ஆளுநர் பதவி அரசி யல் மயப்படுத்தப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியது. இத னால்,ஆளுநர் போன்ற அரசமைப்புச் சட்ட உயர் பதவிகளுக்கு தகுதியற்றவர்கள் நியமிக்கப்படுவதாக அக்குழு குறிப்பிட்டது. எனவே சில கட்சிகள் ஆளுநர் பதவியை முற்றிலும் ஒழிக்கக் கோருவதற்கும், சில மாநிலங்களில் ஆளுநர்களுக்கு எதிராக போராட் டங்கள் நடத்துவதற்கும்  வழி வகுக்கின்றன. 

எனவே அந்தப் பதவியின் கண்ணியமும், சுதந்திர மான செயல்பாடும் உறுதிபடுத்தப்பட பூஞ்சி விசார ணைக் குழு “எதிர்பார்க்கப்படும் சில தகுதிகள் மற்றும் வரையறுக்கப்பட்ட பதவிக்காலம்” போன்ற பரிந்து ரைகளை செய்தது. இவைகளை அரசமைப்புச் சட்ட  திருத்தத்தின் மூலம் சட்டமாக்கப்பட பரிந்துரைத்தது. ஆனால் இது விஷயத்தில் ஒன்றும் நடக்கவில்லை. அதனால் கூட்டாட்சி உறவுகள்  மேலும் மோசமாகி யுள்ளது. ஆளுநர் என்பவர் பெயரளவிலான தலைவர் மட்டுமே என்பது தீர்வு காணப்பட்ட பிரச்சனையா கும். அமைச்சரவைக்கு ஆளுநர் உதவியும், ஆலோ சனை வழங்கவும் செய்வார். ஆளுநர் விரும்பும் வரை யில் அமைச்சர்கள் பதவி வகிப்பார்கள் (பிரிவு164(1)) என்று அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது உண்மைதான். ஆனால், இவைகளுக்கு இடையில்  163 (2)  சட்டப்பிரிவும் இருக்கிறது. குறிப்பிட்ட மிகச்சில பிரச்சனைகளை மட்டுமே ஆளுநர் தமக்கு வழங்கப்பட்டுள்ள தனி விருப்புரிமை அடிப்படையில் செயல்படலாம் என்று அந்த பிரிவு தெளிவுபடுத்துகிறது. மற்றபடி, பொதுவான விவகாரங்களில், மாநில அமைச்சரவையின் ஆலோ சனைக்கும், அறிவுரைக்கும் கட்டுப்பட்டுத்தான் ஆளுநர் செயல்பட வேண்டியவர் என்பது தெளிவான தாகும்.

எனவே, கேரள ஆளுநர், கேரள அமைச்சரவைக் குழுவில் உள்ள ஒருவர் அமைச்சராக தொடர்வ தற்கான தனது விருப்பத்தை நீக்கிக் கொண்டதாக அறிவிப்பதும்-அவரை முதல்வர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பதும் ஆளுநரின் வெறும் மாயை தான்! சட்டப்பிரிவு 124 இல் குறிப்பிடப்படும் தனிநபர் (ஆளுநர்) திருப்தி அல்ல! அமைச்சரவையின் திருப்தி என்பது தான் அரசமைப்புச் சட்டத்தின் உண்மை யான உணர்வாகும். ஆளுநருக்கு கீழ்க்கண்ட தனி விருப்புரிமை அதிகாரங்கள் உள்ளன: ஒரு மசோதாவிற்கு- ஒப்புதல் வழங்குதல், நிறுத்தி வைத்தல் அல்லது சட்டப்பிரிவு  200 இன் படி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்புதல், சட்டப்பிரிவு 164இன்படி முதல்வரை நிய மனம் செய்தல், சட்டப்பேரவையில்  பெரும்பான் மையை இழந்தால் பதவி விலக மறுக்கும் அரசை பதவி நீக்கம் செய்தல், சட்டப்பிரிவு 174 இன் படி மாநில அரசை கலைத்தல், சட்டப்பிரிவு 356 இன் கீழ் ஆளுநர் அறிக்கை அனுப்புதல், வடகிழக்கு மாநிலங்க ளில் உள்ள ஆதிவாசி பகுதிகளில் சில பிரத்யேகக் கடமைகளை நிறைவேற்றுதல் போன்ற ஆளுநரின் அதிகாரங்கள் பற்றி உச்ச நீதிமன்றத் தீர்ப்பிலும் விசாரணை குழுக்களின் பரிந்துரைகளிலும் வழி காட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

சமீபத்திய சர்ச்சைகள் சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட மசோதாக்களின்  மீதான ஆளுநரின் தனி விருப்புரிமை அதிகாரம் பற்றியதாகும். சட்டமன் றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் நிறுத்தி வைத்தல், ஒருவேளை கூடிய விரைவில் தனது கருத்துக்களை தெரிவித்தல், சட்டமன்றத்திற்கு திருப்பி அனுப்புதல் ஆகிய பிரச்ச னைகளில் தங்களின் கருத்துக்களை தெரிவிக்காமல் நிறுத்தி வைப்பதற்கு அரசமைப்புச் சட்டம் கால வரையற்ற அவகாசம் வழங்கியுள்ளதாக நினைத்துக். கொண்டுள்ளனர். சமீபத்தில் பேரறிவாளன்  விடுதலை செய்யப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்ற தீர்ப்பு தெள்ளத் தெளிவா னதாகும். தமிழ்நாடு அமைச்சரவையின் பரிந்து ரையை இரண்டரை ஆண்டு காலமாக நிலுவையில் வைத்திருந்த பின்னர் குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதற்கு ஆளுநருக்கு அரசமைப்புச் சட்டத்தின் படியான எந்தவித அதிகாரமும் இல்லை. ஆளுநர் என்பவர் மாநில அரசின் உணர்வுகளை வெளிப் படுத்துபவர் மட்டுமே என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆளுநர்களின் விருப்புரிமை அதிகாரங்கள் மற்றும் சட்டமன்ற அதிகாரங்களில் காணப்படும் தெளி வின்மை குழப்பங்களை அகற்றுவதற்கு முக்கிய அரச மைப்புச் சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று பூஞ்சி விசாரணை ஆணையம் பரிந்து ரைத்தது. ஆனால் அவைகளை எல்லாம் ஒன்றிய அரசு செயல்படுத்தவில்லை என்பதைச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பு ஆளுநர் பல்கலைக்கழக வேந்தராக இருப்ப தும் சர்ச்சைக்குரிய பிரச்சனையாக மாறியுள்ளது.  பல்கலைக்கழக பதவி என்பது அரசமைப்புச் சட்டத்தின்படியான பதவி அல்ல. சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட பல்கலைக்கழகச் சட்டங்க ளின்படியான பதவியே வேந்தர் பதவியாகும். எனவே வேந்தர் பதவியில் இருந்து ஆளுநரை நீக்குவதற்கு  சட்டப்பேரவைக்கு எல்லா உரிமையும் உள்ளது. ஆனால் கேரள ஆளுநர் இந்தச் சட்டத்திற்கு ஒத்து ழைக்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

பூஞ்சி விசாரணை ஆணையத்தின் கருத்து என்ன வென்றால், அரசமைப்புச் சட்டம் ஆளுநரின் அதிகா ரங்களும் பதவிகளும் சட்டப்படியான பொறுப்பு களுக்கு மேலாக கூடுதல் சுமையாகி விடக்கூடாது. இதனால் ஆளுநருக்கு தேவையற்ற சுமைகளை சுமத்தி விடக்கூடாது. இது போன்ற பதவிகள், ஆளுநர் பதவியை தேவை யற்ற சர்ச்சைகளுக்கும், பொது மக்களின் விமர்ச னத்திற்கும் உள்ளாக்கும் என்று பூஞ்சி விசாரணை ஆணையம் எடுத்துரைத்துள்ளது. எனவே ஆளுநர் பதவி தேவையற்ற  சர்ச்சைக்கு உள்ளாக்கப்படாமல் இருக்க வேந்தர் பதவி போன்றவைகள் தவிர்க்கப்பட வேண்டும். ஆளுநரை பல்கலைக்கழக வேந்தராக்கும் நடைமுறை பழங்கால வரலாற்றுப்பூர்வமான தேவை யாக முன்பு வரை இருந்திருக்கலாம். விடுதலை இந்தியாவின் காலமும், சூழலும் மாறிவிட்டதாலும் இப்போது அந்தத் தேவை எழவில்லை.

ஒரு ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையி லான இயல்பான அரசமைப்புச்சட்டத்தின் படியான நாகரீகம், நல்லொழுக்கம், மரியாதை இவை எல்லாம்  இன்று காணாமல் போய்விட்டது. கேரளா, தமிழ்நாடு, தெலுங்கானா போன்ற பாஜக மிகவும் பலவீனமாக இருக்கும் மாநிலங்களில், அந்த மாநில அரசுக ளைக் கைப்பற்றுவதற்கு முடியாததால்  அந்த மாநிலங்களின் ஆளுநர்கள் எதிர்க்கட்சிப் பணியை ஏற்றுக் கொண்டுள்ளனர். இதனால் ஆளுநர்களின் அபத்தமான, விசித்திர மான செயல்பாடுகள் கேலிக்கூத்தாக மாறியுள்ளன. ஆனால் இதுவே கொடூரமான உண்மையாக உள்ளது. இது நாடாளுமன்ற/சட்டமன்ற ஜனநாயகத்திற்கோ அல்லது கூட்டாட்சிக்கோ நல்லதல்ல.

நன்றி : ஃப்ரண்ட்லைன்,டிச.16,2022.  
தமிழில் : ம.கதிரேசன்