articles

img

விவசாயிகளுக்கு துரோகம் செய்த மோடி அரசை ஆட்சியிலிருந்து அகற்றுவோம்!

இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு

விவசாயிகளுக்கு துரோகம் செய்து, கார்ப்பரேட் முதலாளிகளுக்காக ஆட்சி நடத்தி வரும் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசை ஆட்சியிலிருந்து  அகற்றுவோம் என்று  தமிழக விவசாயிகளுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் மார்ச் 23 அன்று தஞ்சாவூரில்  மாநிலத் தலைவர் பெ.சண்முகம்  தலைமையில் நடைபெற்றது.  மாநிலப் பொதுச்செயலாளர் சாமி.நடராஜன்,  அகில இந்திய இணைச் செயலாளர் டி.ரவீந்திரன், மாநிலப் பொருளாளர்  கே.பி.பெருமாள் உட்பட  மாநிலக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

விவசாயிகளுக்கு வஞ்சகம்

ஒன்றிய ஆட்சி அதிகாரத்தில் 2014 முதல் 10 ஆண்டுகாலமாக உள்ள பாஜக தலைமையிலான அர சாங்கம் தேர்தல் காலத்தில் இந்திய நாட்டு விவசாயிகளுக்கும், மக்களுக்கும் கொடுத்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றாமல் வஞ்சித்து வருகிறது. நாட்டில் உள்ள அனைத்துப் பகுதி மக்களும் இனிமேல் வாழ்க்கை நடத்த முடியாத அளவிற்கு அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. உரம் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அரிசி உள்ளிட்ட வேளாண் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி விதித்து விலைவாசி தொடர்ந்து உயர்ந்து வருகிறது.  சமையல் கேஸ், பெட்ரோல், டீசல் விலை கடந்த 10 ஆண்டு காலத்தில் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. மோடி ஆட்சியின் 10 ஆண்டு காலத்தில் வேலையில்லா திண்டாட்டம் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. தேர்தல் காலத்தில் ஆண்டிற்கு 2 கோடி படித்த இளைஞர்களுக்கு வேலை தருவோம் என்று கூறினார். ஆனால் அரசுத்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஏற்கனவே வேலை செய்த பல லட்சம் பேரை வெளியேற்றிவிட்டு, அந்த நிறுவனங்களையெல்லாம், அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளிடம் விற்றுவிட்டார். மேலும் நிலம், வனம் மற்றும் கடல்வளம் உள்ளிட்ட அனைத்து இயற்கை வளங்களையும் பெரும் முதலாளிகளுக்கு தாரை வார்த்து வருகின்றனர். 

1 லட்சத்து 4 ஆயிரம்  விவசாயிகள் தற்கொலை 

ஒன்றிய மோடி அரசின் தவறான வேளாண் கொள்கைகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், வாங்கிய கடனை கட்ட முடியாமல், விளைவித்த பொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காத தால் ஏற்பட்ட நெருக்கடிகளை தாக்குப்பிடிக்க முடி யாமல் கடந்த 10 ஆண்டு காலத்தில் 1 லட்சத்து 4 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண் டுள்ளனர். மோடி ஆட்சியில் ஒவ்வொரு நாளும் 27 விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். விவசாயத் தொழிலாளர்கள் தினக்கூலிகள், ஏழை கள், கடந்த 10 ஆண்டுகளில் 3 லட்சத்திற்கும் மேற் பட்டோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

குறைந்தபட்ச ஆதார விலை எங்கே?

விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களுக்கு சுவாமி நாதன் குழு பரிந்துரை அடிப்படையில்  குறைந்தபட்ச ஆதார விலை (எம்.எஸ்.பி) வழங்குவோம் என்ற மோடி அரசு இதுவரை வழங்கவில்லை. விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்துவோம் என்று சொன்ன பிரதமர் மோடி தான் . இந்திய நாட்டு விளைநிலங்களையும், விவசாயிகளையும் கார்ப்பரேட் நிறு வனங்களின் கொத்தடிமைகளாக மாற்றக்கூடிய மூன்று வேளாண் சட்டங்களை கொண்டு வந்தார். விவசாயிகளுக்கு எதிரான அந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி தலைநகர் தில்லியில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க இந்திய விவசாயிக ளின் போராட்டம் ஒரு வருடத்தை கடந்து நடைபெற்ற பின்பு தான் வேறு வழியேயில்லாமல் மூன்று வேளாண் சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு திரும்பப்பெற்றது.  போராட்டத்தின் இறுதியில் விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதி களை இதுவரை நிறைவேற்றாமல் விவசாயிகளின் முதுகில் குத்தி துரோகம் செய்து வருகிறார் மோடி. வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைத்தப்படி (சி2+50) குறைந்தபட்ச ஆதார விலை கொடுத்திருந்தால் நெல் குவிண்டாலுக்கு 2708 ரூபாய் கிடைத்திருக்கும், ஆனால் தற்போது குவிண்டாலுக்கு 2183 மட்டுமே விலை கிடைக்கிறது. ஒரு குவிண்டாலுக்கு 525 ரூபாய் விவசாயிகள் இழக்கின்றனர். இதுபோல் விவசாயிகள் உற்பத்தி செய்யும் 23 வகையான விளைபொருட்களுக்கு ஒன்றிய அரசு தான் ஏற்றுக் கொண்ட சி2+50 சதம் என்ற அடிப்படையிலான குறைந்தபட்ச ஆதார விலை கொடுக்காததால் ஆண்டுக்கு சுமார் 2 லட்சம் கோடி ரூபாயை விவசாயிகள் இழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிக ளின் கடன்களை தள்ளுபடி செய்திட மறுத்த மோடி தலைமையி லான பாஜக ஒன்றிய அரசு கார்ப்பரேட் கம்பெனிகள், பெரும் நிறு வனங்களின் 25 லட்சம் கோடி ரூபாய் வங்கி கடனை பத்தாண்டு களில் தள்ளுபடி செய்தனர்.

வன உரிமைகள் பறிப்பு

வனஉரிமைச் சட்டம் 2006 ஐ நீர்த்துப்போகச் செய்யும் வகையில் வன பாது காப்பு சட்டத்தில் திருத்தம் செய்து ஆதிவாசி மக்களின் உரிமைகளை பறித்துள்ளது. இந்திய மக்களின் குடியுரி மையை பாதிக்கும் வகையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியிருப்பது வன்மையான கண்டனத்திற் குரியது. அனைத்துப் பகுதி மக்களையும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ள ஒன்றிய அரசு தனது தோல்விகளை மூடி மறைப்பதற்காக சாதிய, மத வெறியை தூண்டி மக்களைப் பிளவுபடுத்தி, வெறுப்பு அரசிய லின் மூலம் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள அனைத்து  முயற்சிகளையும் மேற்கொள் கிறது. இவை அனைத்திற்கும் மேலாக நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள அரசியல் சாசனத்தை மாற்றிட மற்றும் அனைத்து ஜனநாயக உரிமை களையும் குழிதோண்டி புதைக்கக் கூடிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

அதிமுக, பாஜக கூட்டணிகளை தோற்கடிப்போம்

நாட்டின் இறையாண்மையை பாதுகாப்ப தற்கும், அரசியல் சாசனத்தை பாதுகாப்ப தற்கும், விவசாயிகளின் நலன்களை பாது காப்பதற்கும் எதிர்வரும் 18 ஆவது நாடாளுமன்ற தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக அரசாங்கத்தை ஆட்சி அதிகாரத்திலிருந்து அப்புறப்படுத்திட அனைவரும் கரம் கோர்ப் போம். பத்தாண்டு காலம் பாஜக அரசின் மக்கள் விரோத திட்டங்களுக்கு நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஆதரவு அளித்த அதிமுக இன்று பகல் வேசம் போட்டு ஓட்டு கேட்டு  வருகிறார்கள். எனவே, அதிமுக, பாஜக கூட்டணி களை முறியடிப்போம். தேசம் காத்திட தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியை வெற்றிபெறச் செய்திட வேண்டும் என அனைத்துப் பகுதி விவசாயிக ளையும் கேட்டுக்கொள்கிறோம். இந்தியா கூட்டணியை ஆதரிப்போம். தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட திமுக தலைமையிலான மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் 4 இடதுசாரி வேட்பாளர்கள் உட்பட 40 தொகுதிக ளிலும் ஆதரித்து அனைவரின் வெற்றிக்காக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உழைத்திடும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதி மக்களும், விவசாயிகளும் திமுக தலைமையிலான வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும்.