இந்திய அரசியலமைப்புச் சட்டம் 25/1ன் படி மதச் சுதந்திரத்தை அனுபவிக்கவும் கடைபிடிக்கவும் அதைப் பரப்பவும் சம அளவில் உரிமை உள்ளது. எந்த ஒரு மதத்தினரும் தங்கள் கலாச்சாரத்தையும் கருத்துக்களை பரப்புவதற்கு அரசியல் உரிமை இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சியின் நோக்கமே இந்துத்துவா கருத்துக்களை திணிக்க கூடிய வேலைகளை திட்டமிட்டு செய்து வருவதுதான். பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலத்தில் மத மோதல்களை உருவாக்கி அதன் மூலம் குறுகிய அரசியல் லாபத்தைப் பெற தொடர்ந்து பல்வேறு வகையில் முயற்சிக்கிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் இன்று தமிழகத்தில் மதகலவரத்தை தூண்டும் விதமாக கட்டாய மதமாற்ற சட்டத்தை அமல்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து மதமோதல்களை உருவாக்க திட்டமிட்டு இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.
மதமாற்ற சட்டமும் நீக்கிய நோக்கமும்
இந்தியாவில் கட்டாய மதமாற்ற தடை சட்டம் இயற்றப்பட்டது இப்போதுதான் முதல் முறை அல்ல. 1960-களின் பிற்பகுதியிலிருந்து சில மதமாற்ற எதிர்ப்புச் சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. நாட்டிலேயே மத மாற்றத்திற்கு எதிராக சட்டம் இயற்றிய முதல் மாநிலம் ஒடிசா. 1967-ஆம் ஆண்டில், ஒடிசா மத சுதந்திரச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதில், எந்தவொரு நபரும் நேரடியாகவோ அல்லது வேறுவிதமாகவோ, எந்த ஒரு மதத்தைச் சேர்ந்த நபரையும் மற்றொரு மதத்திற்கு வலுக்கட்டாயமாக அல்லது தூண்டுதல் மூலமாகவோ மாற்ற முயற்சிக்கக் கூடாது எனக் கூறப்பட்டது. மத்தியப் பிரதேச மாநிலம் இதைப் பின்பற்றி, 1968-ஆம் ஆண்டு சட்டத்தை இயற்றியது. இதன்படி, எந்த வொரு நபரும் நேரடியாகவோ அல்லது வேறுவித மாகவோ, ஒரு மத நம்பிக்கையிலிருந்து மற்றொரு மதத்திற்கு மாற்ற முயற்சிக்கக்கூடாது.
அருணாச்சலப் பிரதேசம் மாநிலம் 1978-இல் அருணாச்சலப் பிரதேச மத சுதந்திரச் சட்டத்தை இயற்றியது. 2018-ஆம் ஆண்டில், பெமா காண்டு அரசாங்கத்தால் இந்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டது. சத்தீஸ்கர் மாநிலம் 2000-ஆம் ஆண்டில் மத்திய பிரதேசத்தில் இருந்து பிரிந்த பின்னர் ம.பி. அரசாங்கத் தின் மதமாற்ற எதிர்ப்பு மசோதாவைத் தக்க வைத்துக் கொண்டது. பின்னர் சத்தீஸ்கர் மத சுதந்திர (திருத்தம்) சட்டம், 2006 நிறைவேற்றப்பட்டது. இது இன்னும் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது குஜராத் மாநிலத்தில் குஜராத் சட்டம் 2003 இல் இயற்றப்பட்டது பின்னர் திருத்தப்பட்டது இமாச்சல பிரதேச அரசாங்கம் 2006இல் நிறைவேற்றப்பட்டு அரசியல் நோக்கத்தால் இமாச்சலப் பிரதேச சட்டம் 2019 திருத்தச்சட்டம் செய்யப்பட்டது. இந்தப் பின்னணியில் கர்நாடக சட்டசபையில் கட்டாய மதமாற்ற தடைச்சட்டம் கொண்டுவரப்பட்ட நோக்கம் வேறு. இந்த சட்டத் திருத்தத்தில் இஸ்லாமி யர்களையும் கிறிஸ்தவர்களையும் கடுமையாக பாதிக்கக்கூடிய தண்டனைச் சட்டங்கள் இதில் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது கர்நாடக மாநிலத்தில் உள்ள பல எதிர்க்கட்சி தலைவர்களின் கடும் எதிர்ப்புகளையும் மீறி இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டு மக்களை அச் சுறுத்தும் வகையில் இந்த சட்டம் அமலில் இருந்து வருகிறது.
தமிழகத்தில் அன்றைக்கு பெரும்பான்மையாக ஆட்சியில் இருந்த அதிமுக அரசாங்கம் பாஜக சொல்வ தைக் கேட்டுக்கொண்டு தமிழ்நாட்டில் 2004ம் ஆண்டு கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வந்தது. பாஜகவை தவிர்த்து பல அரசியல் கட்சிகள் கடுமையாக எதிர்த்தனர், பல போராட்டங்கள் நடத்தி னர். அதன் பின் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக மிக மோசமான தோல்விக்கு பிறகு கட்டாய மதமாற்றச் சட்டத்தை அதிமுக திரும்பபெற்றது. இதே போன்று தான் பல மாநிலங்களிலும் சட்டம் இயற்றி. பின்பு அது நிராகரிக்கப்பட்டது. கட்டாய மதமாற்றம் சட்டத்தை அமல்படுத்துவதற்கு பாஜக பல மாநிலங்களில் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறது. இன்றைய நிலையில் அரு ணாச்சல பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், சத்திஸ்கர், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கட்டாய மதமாற்ற சட்டம் அமலில் இருக்கிறது.
தமிழகத்தில் கலவரம் செய்வதன் நோக்கம்...
இந்தியாவில் செப்டம்பர் மாதம் நடக்கும் விநாயகர் சதுர்த்தியன்று பல இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் தனக்கு ஏதேனும் பாதிப்பு நிகழ்ந்து விடுமோ என்ற அச்சத்திலேயே இருந்து வருகின்றனர். தமிழகத்தில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் பள்ளிவாசல் தாக்கப்படுகின்ற அவலநிலை தொடர்ந்து நடக்கிறது. காவல்துறை குவியலாக பாதுகாப்பு பணியில் இருந்தாலும், தாக்குதல்களை தடுத்து நிறுத்த முடியாது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு மட்டுமே நடக்கிறது. இதன் நீட்சியாக, தமிழகத்தில் ஏதேனும் பிரச்சனை கிடைத்தால் அதை வைத்து அரசியல் செய்து மதக்கல வரத்தை தூண்டும் செயலில் ஈடுபட்டு வருகிறது பாஜக. குறிப்பாக கோவை பகுதியில் இஸ்லாமியர்க ளுக்கும் இந்து மக்களுக்கும் கலவரத்தை தூண்டி விட்டு அதில் அரசியல் ஆதாயம் தேடக் கூடிய ஒரு நிலைமை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாகத் தான் இன்றைக்கு தஞ்சைப் பகுதியிலும் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் மரணத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட தொடர்ந்து முயற்சிக்கிறார்கள் இந்துத்துவாவாதிகள். தஞ்சையில், மாணவி லாவண்யாவை மதமாற்றம் செய்ய முயன்றதால்தான் தற்கொலை செய்து கொண்டார் என்று கலவரத்தைத் தூண்ட முயற்சித்து படுதோல்வியடைந்த பாஜகவினர், கர்நாடகத்தில் ஹிஜாப் பிரச்சனையை எழுப்பி, இஸ்லாமிய மாணவி களை குறி வைத்துள்ளனர்.
கல்வி நிலையங்களில் காவிக் கும்பலின் தாக்குதல்
பாரதிய ஜனதா ஆட்சி பொறுப்பு ஏற்றதிலிருந்து சந்தை பொருளுக்கு இணையாக கல்வியை வகைப் படுத்தி வருகிறது. சிறிதளவும் கல்வி நிலையங்களில் எந்த ஒரு பங்களிப்பையும் செலுத்தாத இந்துத்துவா அமைப்புகள் கல்வி நிலையங்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பல முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. பல கல்வி நிலை யங்களிலும் உயர் கல்வி நிறுவனங்களிலும் ஆர்எஸ்எஸ் சங் பரிவாரத்தின் கும்பல்களின் ஆட்களை பணியமர்த்தி பல வடிவங்களில் கல்வி நிலையங்களை மதவெறிக் கூடங்களாக்கிட வேலை செய்து வருகிறது பாஜக. கர்நாடக மாநிலத்தில் உடுப்பி மாவட்டம் உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களில் இஸ்லா மிய மாணவிகள் படிக்கக்கூடிய கல்வி நிலையங்க ளில் தொடர்ச்சியாக தனது மரபாக உள்ள ஹிஜாப் அணிவதை தடுப்பதாகக் கூறி, இந்துத்துவ அமைப்பு மாணவர்கள் காவி துண்டு அணிந்து வளாகத்திற்குள் வருவது, பகிரங்கமாக மோதலை அரங்கேற்றுவது என அட்டூழியங்களைச் செய்து வருகிறது. அதற்கு அந்த அரசும் காவல் துறையும் உடந்தையாக இருக்கிறது.
பாடப்புத்தகங்களில் மதச் சாயம் பூசக்கூடிய பல கருத்துக்களை திருத்துவதும் தமிழ்ப் புலவர்களை காவி உடை அணிந்து திருவள்ளுவருக்கு மத காவி சாயம் பூசுவதும் என அவலநிலையும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. சிபிஎஸ்இ பாடப்புத்தகங்க ளில் தொடர்ச்சியாக மதக் கருத்துக்களையும் வர லாற்று திரிப்புகளையும் இந்த காவிக்கும்பல் செய்து வருகிறது. மேலும், மதமாற்ற தடைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதற்காக அனைத்து கல்வி அலுவல கங்களிலும் இந்து அமைப்பை ‘இந்து உணர்வு’ என்ற அடிப்படையில் மாணவர்களை திரட்டி வருகிறார் கள். மாணவர்கள் மத்தியில் ஒற்றுமையை சீர் குலைக்கும் வண்ணம் இந்த கருத்துக்களை திணித்து வருகிறார்கள் இதை உடனடியாக நிறுத்த வேண்டும். இந்துத்துவா சக்திகளுக்கு எதிராக மத ஒற்றுமையைப் பேணிகாக்க வேண்டும்.
கட்டுரையாளர் : மாநிலத் துணைச் செயலாளர், இந்திய மாணவர் சங்கம்