தமிழகத்தில் 2 தலைமுறைகளாக சத்துணவுத் திட்டம் நிரந்தரம். ஆனால் சத்துணவு திட்டத் தில் பணிபுரியும் சத்துணவு ஊழியர்கள் நிரந்தர மில்லை என்பது நியாயம் தானா? 1920இல் ஏழைக் குழந்தைகள் மதிய உணவு கிடைக்காத நிலையில் பள்ளிக்குச் சென்று படிக்க முடியவில்லை என்ற நிலை யை எண்ணி சென்னை நகர்மன்றத்தில் பொதுவுடை மைவாதி சிங்கார வேலர் கடுமையான முயற்சி எடுத்தும் பிரிட்டிஷ் ஆட்சியில் மதிய உணவு வழங்க மறுத்து விட்ட நிலையில், 1925இல் நகராட்சி பள்ளியில் துவக் கப்பட்டது. அதன்பின் மாநகராட்சி அளவில் செயல்பட்டுக் கொண்டிருந்த மதிய உணவுத்திட்டத்தை, தமிழ் நாட்டின் முதலமைச்சரான காமராஜர் மாநிலம் முழுவ தும் பரவலாக்கினார். மிகுந்த மனித நேயமும் தொலை நோக்கும் நீண்டகால அளவில் நல் விளைவுகளையும் உருவாக்கிய மகத்தான திட்டம் இது. கல்வியில் பின்தங்கிய மாநிலமாக நாம் இருந்த காலகட்டத்தில் அதற்கான காரணங்கள் என்னவென்று ஒவ்வொன்றாகக் களைய முற்பட்டபோதுதான் இந்த மதிய உணவுத்திட்டத்தின் தேவை உணரப்பட்டது. பசியோடு இருக்கும் குழந்தை எப்படி சிந்திக்கும் என்ற பெரும் கருணையான கேள்வியில் பிறந்த திட்டம். பிற்பாடு எம்ஜிஆர் ஆட்சியில் இந்த திட் டத்தை பத்தாம் வகுப்பு வரை விரிவாக்கி சத்துணவுத் திட்டம் என்ற பெயரும் சூட்டினார். எம்ஜிஆருக்கு மங்காப் புகழைத்தந்த திட்டமாக சத்துணவுத்திட்டம் இன்றும் ஒளிர்கிறது. கலைஞர் கருணாநிதி ஆட்சி யில் சத்துணவுத்திட்டத்தில் வாரம் ஒரு முறை முட்டை தருவது என்று முடிவானது.
அடுத்து வந்த ஜெயலலிதாவின் ஆட்சியில் இந்த முட்டையின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டதுடன் 14 வகை கலவை சாதம் வழங்கி மேலும் மெரு கூட்டப்பட்டது. இப்படி ஒவ்வொரு முன்னாள் முதல்வர்க ளும் தங்கள் ஆட்சிக் காலத்தில் பசிப்பிணி போக்கும் திட்டம் என்பதால் சத்துணவுத்திட்டத்தை தாயுள்ளத் தோடே அணுகி வந்திருக்கிறார்கள். இன்றைய நிலவரப்படி தமிழகம் முழுவதும் 43,026 சத்துணவு மையங்கள் செயல்படுகின்றன. இதன் மூலம் சுமார் 46 லட்சத்து 66 ஆயிரத்து 951 மாணவர் கள் பயனடைந்து வருகின்றனர். சத்துணவு மையங்கள் அதிகரித்திருக்கின்றன. ஆனால் அரசுப்பள்ளிகளில் மாணவர் குறைந்ததற்கு அரசின் கல்விக் கொள்கையும் நடவடிக்கைகளுமே பிரதான காரணம். இதனால் சத்துணவுத்திட்டத்தின் பயனாளிகள் குறைகிறார்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டும் என்கிறார்கள் கல்வியாளர்கள்.
சத்துணவுத்திட்டம் அமல்படுத்தப்பட்டபோதும் தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் தான் இருந்தது. 1983இல் தமிழக அரசின் மொத்த வரி வருமானம் வெறும் 844 கோடி ரூபாய் மட்டுமே. ஆனால் அன்றே சத்துணவுக்கு என 144 கோடி ரூபாய் செலவிடப் பட்டது. நிதி நெருக்கடி தாங்காமல் இந்த திட்டத் தையே கைவிடலாம் என்று அதிகாரிகள் சொன்ன போது “கையேந்தியாவது நம் குழந்தைகளுக்கு அன்ன மிட வேண்டும்” என்றார் அன்றைய முதல்வர் எம்ஜிஆர். அவருக்குப் பிறகு வந்த கருணாநிதி ஒவ்வொரு முறை யும் சத்துணவு திட்டத்தை மேம்படுத்தினார். வாரத்தில் ஐந்து நாட்கள் முட்டை வழங்கவும், முட்டையை விரும்பாத மாணவர்களுக்கு வாழைப்பழம் வழங்கவும் உத்தர விட்டார். சத்துணவு உண்ணும் குழந்தைகள் மட்டு மல்ல சத்துணவுத்திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்க ளுமே கூட ஒருவகையில் விளிம்பு நிலையினர்தான் என்பது இந்த திட்டத்தின் இன்னொரு சிறப்பு. இந்த திட்டம் அறிவிக்கப்பட்ட போது மறைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினர், கணவனை இழந் தோர், கைவிடப்பட்டோர் போன்ற வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் அதிகமாக பணியமர்த்தப்பட்டனர். பட்டியலின மக்களும் சத்துணவு ஊழியர்களாகினர். அமைதியாக சமையல் வழி ஒரு சமத்துவப்புரட்சி நடந்து கொண்டு இருக்கிறது.
உலகம் போற்றும் திட்டம் ஆனால் ஊழியர் நிலை..?
சத்துணவு ஊழியர்களின் ஊதியம் இரண்டு தொகுப் பூதியத்தில் தொடங்கி, சிறப்பு காலமுறை ஊதியம் என பெயர் மாறினாலும் குறைந்தபட்ச கல்வி முதல் கல்லூரி கல்வி வரை பயின்ற சத்துணவு ஊழியர்களுக்கு 38 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட குறைந்தபட்ச ஊதியம் கிடைக்காத (அமைப்பாளருக்கு ரூ.7700, சமையலர் ரூ.4100, உதவியாளருக்கு ரூ.3000 நிலையே தொ டர்கிறது. அரசு துறையான சத்துணவு திட்டத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு சிறப்பு ஓய்வூதியமாக மாதந்தோறும் ரூ .2000 வழங்கப்படுகிறது ( ஒரு நாளை க்கு 66.70 காசு) இதை வைத்து வயதான காலத்தில் மருத்துவச் செலவு செய்ய முடியுமா? சாப்பிட முடி யுமா? தமிழக அரசிடம் 30 ஆண்டு காலம் பணிபுரிந்து வாழ்க்கை நடத்த முடியாமல் சாவதா? அரசுதான் தெளிவு படுத்த வேண்டும். அரசு துறையில் பணிபுரிந்து ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு ஒட்டுமொத்த தொகை வழங்குவது போல் சத்துணவு ஊழியர்களுக்கு கணக்கிட்டு வழங்கா மல் அமைப்பாளர்களுக்கு ரூ.1 லட்சமும், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்களுக்கு ரூ . 50,000 வழங் கப்பட்டு வருகிறது. இது எந்த விதத்தில் நியாயம்?
காலிப்பணியிடங்கள் நிரப்புதல்
தமிழகம் முழுவதும் 43 ஆயிரம் பள்ளி சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகிறது. சத்துணவு ஊழியர் கள் பணி ஓய்வு பெற்ற 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படா மல் உள்ளன. ஒவ்வொரு சத்துணவு ஊழியர்களும் 3 முதல் 7 பள்ளி சத்துணவு மையங்களை கூடுதல் பொறுப் பாக கவனித்து வர வேண்டியுள்ளது. மேலும் சமையலர் மற்றும் உதவியாளர்கள் இல்லாமல் பல மையங்கள் செயல்படுத்த வேண்டிய நிலை உள்ளது. ஆனால் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி எண்ணற்ற போராட்டங்கள் நடத்தியும் கூட தமிழக அரசு நிறைவேற்ற முன்வருவதில்லை. இன்றைய தமிழக முதல்வர் சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியில் சத்துணவு ஊழியர்களை அரசு ஊழிய களாக்கி பதவி உயர்வும் ஊதிய உயர்வும் வழங்குவேன் எனவும், ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்குவேன் எனவும், ஓய்வு பெற்றுச் செல்லும் சத்துணவு ஊழியர்களுக்கு ஒட்டு மொத்த தொகை அமைப்பாளர்களுக்கு ரூ. 5 லட்ச மும், சமையலர், சமையல் உதவியாளர்களுக்கு ரூ. 3 லட்சமும் வழங்குவேன் எனவும், காலி பணியிடங்க ளை உடனே நிரப்பப்படும் என்றும் வாக்குறுதி அளித் தார். ஆனால் தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக கடந்த தமிழக பட்ஜெட்டில் எந்தவித அறிவிப்பும் இல்லாதது சத்துணவு ஊழியர்கள் ஏமாற்றப்பட்டு உள்ளார்கள் என்பதை கவலையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னமிட்ட கைகளை கிண்ணமேந்த விடுவதோ?
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி இரா மேஸ்வரம், மயிலாடுதுறை, கும்மிடிப்பூண்டி, கோவை, திருப்பத்தூர், கன்னியாகுமரி, ஓசூர் ஆகிய 7 முனை களில் இருந்து 2100 கிமீ தூரம் நடைபயணம் இன்று (ஜூன் 4) துவங்கி, திருச்சியில் நிறைவு செய்து நாற்ப தாண்டு கால கோரிக்கைகளை ‘நான் இருக்க பயமேன்’ என்று சொன்ன தமிழக முதல்வரிடம் தேர்தல் வாக்குறு தியை நிறைவேற்ற வலியுறுத்தி கோரிக்கை மாநாடு நடத்துவது எனவும், ஜூலை 15இல் வாழ்வாதார உரிமை யும், வரையறுக்கப்பட்ட ஊதியமும் கேட்டு மாவட்ட தலைநகரில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்கும் பேரணி நடத்துவது எனவும், ஆகஸ்ட் 30 இல் தேதி வரையறுக்கப்பட்ட சம்பளம், ஓய்வூதியம் என்ற வாக்குறுதிகள் என்னாச்சு என்று சென்னையில் தமிழக முதல்வரை சந்தித்து நீதி கேட்க உள்ளோம். இதற்கு அனைத்து தரப்பு பொதுமக்களும், தோழமை சங்கங்களும் ஆதரவு தர வேண்டும்.
கட்டுரையாளர் : மாநில துணைத் தலைவர், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம்