குட்டக் குட்ட குனிபவனும் குனியக் குனிய குட்டுபவனும்!
மக்கள் தொகையிலும், சந்தை மதிப்பிலும், மனித வளத்தி லும், ஜனநாயக மதிப்பீடுகளி லும் உலகின் மிகப்பெரிய வல்லரசுக ளில் ஒன்றாக உருவாகி வரும் இந்தி யாவின் வெளியுறவுக் கொள்கையினை எப்படி கையாளக் கூடாதோ அப்படி கையாண்டு சர்வதேச அரங்கில் பல தளங்களில் இந்தியா நிலைதவறி அவ மானப்பட்டு நிற்பதற்கு பிரதமர் மோடி யின் “தன் முனைப்பு” ஒரு பெரும் காரணம். உலக நாடுகளை நமது நட்பு நாடுகளாக உருவாக்குவதில் நாட்டம் செலுத்தாமல், அந்நாடுகளின் தலைவர் களை தனது தனிப்பட்ட நண்பர்கள் என்பதைப் போன்ற தோற்றத்தை உரு வாக்குவதிலேயே அவரது நேரத்தினை யும், வெளியுறவுத் துறையின் செய லாக்கத்தையும் பயன்படுத்தினார்.
உலக நாடுகளின் பெருந்தலைவர்களை தனது “பால்ய நண்பர்கள்” போல நடத்து வதால் உள்நாட்டில் தனக்கு ஒரு அகில உலகத் தலைவர் (விஸ்வ குரு) என்ற அங்கீகாரம் கிடைக்கும் என்ற அவரது தவறான அணுகுமுறையால் உலக அரங்கில் பல இழப்புகளை சந்தித்துள் ளோம். சர்வதேச உறவுகள் என்பதும், வெளியுறவுக் கொள்கை என்பதும் தனிநபர் சார்ந்ததல்ல என்பதை அவர் உணரக்கூடிய காலம் வந்துவிட்டது. அமெரிக்காவில் வாக்கு பிச்சையும் இழந்த கௌரவமும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பை தனது தனிப்பட்ட நண்பர் என்று பீற்றிக்கொள்வதில் நமது பிரதமருக்கு ஒரு அலாதி இன்பம். சர்வதேச ராஜ தந்திர உறவுகளின் எல்லைகளை மீறி, விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் இந்தியாவின் பிரதமர் அந்நிய மண்ணில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டி யிடும் டிரம்ப்புக்காக பகிரங்கமாக வாக்கு கேட்டார். அவரை தனது சொந்த மாநில மான குஜராத்துக்கு கூட்டிவந்து பல நூறு கோடி ரூபாய்கள் செலவு செய்து கொண் டாட்டங்கள் நடத்தினார்.
அதற்காக ஏழைகள் வாழும் குடிசைகளை யெல்லாம் அப்புறப்படுத்தினார். அந்த தேர்தலில் டிரம்ப் தோற்றதால் வெற்றி பெற்ற ஜனநாயக கட்சி வேட்பாளர் பைடனின் நல்லெண்ணத்தை இந்தியா இழந்தது. மீண்டும் அமெரிக்க குடியரசுத் தலை வர் தேர்தலில் இந்திய வம்சாவளியினர் வாக்குகளை டிரம்ப்புக்கு பெற்றுத் தருவதற்கு பாஜகவின் அயலக அணி யும், ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பு நிறுவனங்களும் கடுமையாக உழைத் தன. டிரம்ப் வெற்றி பெற்றால் அமெரிக்க பொருளாதாரத்தை இந்தியாவுக்கும், அமெரிக்க அரசு நிர்வாகத்தை இந்திய வம்சாவளியினருக்கும் டிரம்ப் திறந்து விடுவார் என்று இடைவிடாது பிரச்சாரம் செய்தனர். உலக அரங்கில் அமெரிக்காவுடன் உள்ள உறவு மட்டுமே போதும் என்றும் காலம் காலமாக இந்தியாவுடன் நட்பு றவாக இருந்த நாடுகளையெல்லாம் நமது வெளியுறவுத் துறை தள்ளி வைத்தது. பல முக்கியமான கட்டங்க ளில் நாம் தொடர்ந்து பின்பற்றி வந்த அணுகுமுறைகளையும், நிலைப்பாடுக ளையும் மாற்றி, அமெரிக்க ஆதரவு நிலைப்பாட்டையே நமது வெளியுறவு நிலைப்பாடாக அறிவித்தது. சர்வதேசச் சட்டங்களை பல நாடுகள் மீறிய போது ஐக்கிய நாடுகள் சபையில் நியாயத்தின் பக்கம் நின்று வாக்களிக்க வேண்டிய இந்தியா அமெரிக்காவுக்கு பயந்து வாக்களிக்காமல் வெளிநடப்புச் செய்வது அல்லது எதிராக வாக்களிப்பது என்ற நிலைப்பாட்டை எடுத்தது. பாலஸ் தீனத்தின் காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் இன அழிப்பைக்கூட கண்டிக்க இந்தியா முன்வரவில்லை என்பது எவ்வளவு பெரிய தவறு! நம் தலையில் மண்ணை அள்ளிப் போடும் டிரம்ப் இதற்கு கைமாறாக அமெரிக்கா நமது பொருளாதாரத்தைப் பெருக்கவும், நமது பாதுகாப்பினை பலப்படுத்தவும் பெரும் உதவிகளை செய்யும் என்று மோடி அரசு எதிர்பார்த்துக் காத்திருந்த வேளையில் நம் தலையில் மண்ணை அள்ளி போட டிரம்ப் அரசு முடிவெடுத்தி ருப்பது தான் நமக்கு இன்று ஏற் பட்டுள்ள சோகம்.
அமெரிக்கத் தயாரிப்புகளையும், தொழில் நுட்பங்களையும், சேவைகளை யும் மிகக்குறைந்த வரியில் தடையின்றி தாராளமாக அனுமதிக்காத எந்த நாட்டு டனும் அமெரிக்கா வியாபாரம் செய்யாது. அந்த நாட்டுப் பொருட்கள் அமெரிக்கா வுக்கு உள்ளே வர தாறுமாறான இறக்கு மதி வரியையும், மற்றும் சில நாடுகளுக்கு அபராத வரிகளையும் டிரம்ப் அரசு விதித்து வருகிற வேளையில், தனது தனிப்பட்ட நட்பின் காரணமாக இந்தி யாவுக்கு மட்டும் மிகக் குறைவான வரி யைத் தான் விதிப்பார்கள் என்று நமது பிரதமர் எதிர்பார்த்திருந்த வேளையில் டிரம்ப்பின் அறிவிப்பு பேரிடியாக நம் தலையில் விழுந்துள்ளது. இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் இருதரப்பு வணிகம் சம்பந்தமா கவும், இரண்டு தரப்பினரும் ஒப்புக் கொண்டு பல்வேறு ஏற்றுமதி இறக்கு மதிகளுக்கு விதிக்கப்பட வேண்டிய வரிகள் சம்பந்தமாகவும் பேசி முடிவு செய்ய அமைச்சர்கள் மட்டத்திலும் அதி காரிகள் மட்டத்திலும் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் ஐந்து முறைகள் பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்துள் ளன. ஆறாவது மற்றும் இறுதிப் பேச்சு வார்த்தையினை இம்மாத இறுதியில் இந்தியாவில் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது. அது முடிவதற்குள் நம்மை பயமுறுத்தி நெருக்கடி கொடுப்பதற்காக வும், ஒப்புக்கொண்டு சரணடைவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை என்று டிரம்ப் நம்புவதாலும் இப்படி ஒரு முரட்டுத்தனமான முயற்சியில் இறங்கி யுள்ளார்.
ஜனநாயகம், மனித உரிமைகள், எல்லோருக்குமான வளர்ச்சி, உலக நாடுகளிடையே சமாதானம் நிறைந்த நல்லுறவு, அணு ஆயுதக் குறைப்பு, புவி வெப்பமயமாதலை தடுப்பது, ஏழை எளிய நாடுகளுக்கு பொருளாதார மற்றும் தொழில்நுட்ப உதவிகள் என்று எந்த நல்ல சிந்தனைகளுக்கும், முயற்சி களுக்கும் அமெரிக்காவுக்கும் இனிமேல் சம்பந்தமே இல்லை என்று பதவியேற்ற வுடன் அறிவித்த டிரம்ப் “பணம்” மட்டுமே தனது நோக்கம் என்பதை ஒவ்வொரு மேடையிலும் தவறாமல் சொல்லி வருகிறார். உலகின் மிகப் பெரிய வல்லரசின் தலைவர் என்ற ஆண வத்தின் உச்சத்தில் நிற்கும் அவர், உலக நாடுகள் காலம் காலமாக போற்றி வரும் சர்வதேச நிறுவனங்கள், உறவுகள், வியாபாரம், தகவல் பரிமாற்றம் போன்ற அனைத்தையும் தான்தோன்றித்தனமாக ஒவ்வொரு நாளும் சிதைத்து வருகிறார். உலகின் பல நாடுகள் தங்களின் இருப் புக்கே அமெரிக்காவின் தயவு தேவைப் படுவதால் அவமானங்களை தொடர்ந்து ஏற்றுக்கொண்டு அமைதி காக்கின்றன. இந்த நாடுகளின் வரிசையில் நம்மை யும் நிற்கவைக்க டிரம்ப் நினைக்கின்றார். குதிரை கீழே தள்ளியதோடு குழியும் பறித்த கதையாய்... நமது பொருளாதாரத்திற்கு ஏற்படக் கூடிய பாதிப்புகளை பார்த்தால், 2024 ஆம் ஆண்டு அமெரிக்காவோடு நமக்கு நடந்த வியாபாரத்தின் மொத்த மதிப்பு 124 பில்லியன் டாலர். நமது இறக்குமதி போக நம்மிடம் வணிக மிகுதியாக (trade surplus) இருப்பது சுமார் 43 பில்லி யன் டாலர். நமது மொத்த ஏற்றுமதியில் சுமார் 20% அமெரிக்காவுக்கு செல்கிறது. டிரம்ப்பின் இந்த ஒருதலைப்பட்ச மான அதீத வரிவிதிப்பால் இந்தியா பல துறைகளில் தனது ஏற்றுமதி சந்தையை இழக்க நேரிடும். குறிப்பாக ஜவுளிகள், தங்க - வைர நகைகள், அணுசக்தி இயந்திரங்கள், மின்சார உபகரணங்கள், முத்துக்கள் மற்றும் விலை உயர்ந்த கற்கள், தாது உலோகங்கள் மற்றும் மருந்துகள் போன்ற துறைகளில் பெரும் பாதிப்பு ஏற்படும்.
தமிழ்நாடு மிகவும் அதிகமாக ஏற்றுமதி செய்கின்ற திருப்பூர் ஜவுளி ஆடைகள், தோல் பொருட்கள், மொபைல் போன்கள் போன்ற முக்கியத் தொழில்களின் எதிர்காலம் கேள்விக் குறியாக மாறிவிடும். குதிரை கீழே தள்ளியது மட்டு மல்லாமல் குழியும் பறித்தது என்பதைப் போல அநியாயமாக வரிகளை விதித்த தோடு அபராத வரிகளையும் விதிக்கப் போவதாக டிரம்ப் மிரட்டியுள்ளார். ரஷ்யாவில் இருந்து ஆயுதங்களையும், பெருமளவில் பெட்ரோலியப் பொ ருட்களையும் நாம் இறக்குமதி செய்வ தால் அமெரிக்காவுக்கு நாம் தண்டம் கட்ட வேண்டுமாம்! நமக்கு தேவையான பொருட்களை நாம் எங்கே வாங்க வேண்டும் என்பதைக் கூட டிரம்ப் தான் முடிவு செய்வார் என்றால் இந்தியாவை அமெரிக்காவின் காலனி நாடு என்று கூட அறிவித்துவிடலாமே! அமெரிக்க பசுக்களின் பால் மற்றும் பால் பொருட்களை தடையின்றி இறக்கு மதி செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி நிர்ப்பந்திக்கிறார். அமெரிக்க பசுக்களுக்கு கொடுக்கப் படும் தீனியில் மாட்டு இறைச்சியும், பிற மிருகங்களின் ரத்தமும் சேர்க்கப் படுகின்றன. அந்த பால் கெட்டுப்போகா மல் இருக்க நம் நாட்டு உணவு கலப்பட தடைச்சட்டத்தின்படி தடைசெய்யப்பட்ட ஏராளமான வேதிப்பொருள்களும் சேர்க்கப்படுகின்றன. அப்படிப்பட்ட பாலை நமது நாட்டில் எப்படி அனு மதிக்க முடியும்?
அதானி-அம்பானி நலனா? தேசத்தின் நலனா? டிரம்ப்பின் இந்த நடவடிக்கையால் இந்தியப் பொருளாதாரத்திற்கு ஏற்ப டக்கூடிய பாதிப்புகளை விட மோடியின் நண்பர்களான அதானி மற்றும் அம்பா னிக்கான பாதிப்புகள் அதிகம். அதாவது, டிரம்ப்பை எதிர்த்து மோடி எதிர்வினை ஆற்றினால் அமெரிக்க பங்குச் சந்தை நிறுவனம் அதானி மீது தொடர்ந்துள்ள மோசடிக் குற்றத்திற்கான கிரிமினல் வழக்கின் நடவடிக்கைகளை தீவிரப் படுத்தும். அம்பானியும் அதானியும் அமெ ரிக்காவில் பெருமளவில் முதலீடு செய் துள்ளனர். அவர்கள் தவிர குஜராத்தைச் சார்ந்த பல பெருமுதலாளிகள் அமெ ரிக்காவில் பெரிய அளவில் வியாபாரம் செய்து வருகின்றனர். சிலர் டிரம்ப் அர சின் நிர்வாகத்தில் பல அதிகாரம் நிறைந்த பதவிகளில் பணியமர்த்தப் பட்டுள்ளனர். பாஜகவுக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தொண்டு நிறுவனங்க ளுக்கும் கோடிக்கணக்கான டாலர் நன்கொடைகள் அமெரிக்காவிலிருந்தே வருவதாகச் சொல்கிறார்கள். அமெரிக்காவின் தயவில் பெரும் பணம் சம்பாதிப்பவர்களும், பெரிய பதவிகளில் இருப்பவர்களும் மோடிக்கு மிகவும் நெருக்கமானவர்களாக இருப்ப தால் அமெரிக்காவையும், டிரம்ப்பையும் பகைத்துக்கொள்ள மோடி மிகவும் யோசிப்பார். தனது நண்பர்களுக்காக இந்தியப் பொருளாதாரத்தை மோடி நாசம் செய்துவிட்டார் என்று ராகுல் காந்தி அடிக்கடி சொல்லிவருவதின் காரணம் இதுவே. டிரம்ப்பின் பதவியேற்பு விழா வுக்கு அவருடைய தனிப்பட்ட விருந்தி னர்களாக அம்பானியும், அதானியும் அழைக்கப்பட்டு முக்கியமான இருக்கை களில் உட்காரவைக்கப்பட்டதை நினை வில் கொள்ள வேண்டும். மவுனம் காக்கும் “56 அங்குல மார்பு” சீனா, கனடா போன்ற நாடுகள் அமெ ரிக்காவின் இத்தகைய நடவடிக்கைக்கு எதிராக வலிமையான எதிர்வினை ஆற்றி யுள்ளன. அத்தகைய தன்னம்பிக்கை யும், சுய கவுரவமும் மோடி அரசுக்கு இருக்க முடியாது. இந்தியா-பாகிஸ் தான் மோதலை “நான் தான் தலை யிட்டு தடுத்து நிறுத்தினேன்” என்று டிரம்ப் சொல்லும்போது மோடியும் அவரது அரசும் எப்படி மவுனம் காத்தார்களோ அதைப் போல இப்போதும் மவுனமாக இருப்பது என்றே முடிவு செய்துள்ளனர். இந்தியாவை எதிர்ப்பவர்களை பீரங்கிக் குண்டுகளால்
சுட்டுப் பொசுக்கி விடுவேன் என்று இரண்டு நாட்களுக்கு முன்னால் நாடாளுமன்றத்தில் கர்ஜித்த “56 அங்குல மார்பு” இப்போது வாய் திறக்காமல் பயந்து மவுனம் காக்கிறது. சீனாவைப் போல “வா! ஒரு கை பார்க்க லாம்” என்று சவால் விடக்கூடிய அளவுக்கு நமது பொருளாதாரத்தை மோடி அரசு கட்டமைக்கவில்லை. வரலாற்றில் மிகப்பெரிய வாய்ப்பினை இந்திய ஜனநாயகம் மோடிக்கு வழங்கி யுள்ளது. இந்தியாவில் இதுவரை எந்த பிரதமருக்கும் கிடைக்காத வளமான பொருளாதாரம், நாடாளுமன்றத்தில் தொடர்ச்சியாக நிபந்தனைகளே இல்லா மல் கண்களை மூடிக்கொண்டு ஆத ரிக்கும் பெரும்பான்மை, கேள்வியே கேட்காமல் ஒரு பக்தர் சபை போல செயல்படும் பாஜக, வரலாறு காணாத வரி வசூல், எந்நாளும் இல்லாத அந்நியச் செலாவணி கையிருப்பு, தொடர்ந்து 12 ஆண்டுகளாக வறட்சியே இல்லாத பருவ மழை, பிரதமரின் விருப்பம் அறிந்து செயல்படும் அரசு நிர்வாகம், ஊடகங்கள், அரசியல் சாசன நிறு வனங்கள் என்று இவ்வளவு சாதகங்கள் இந்தியாவில் எந்த பிரதமருக்கும் கிடைக்கவில்லை. மோடி பதவியில் இருந்த பத்தாண்டு களும் வீண் ஆடம்பரங்களிலும், வெற்றுக் கோஷங்களிலுமே கழிந்தது. வருடத்தில் பாதி நாட்கள் வெளிநாட்டிலும் மீதி நாட்களை உள்நாட்டில் தேர்தல் பிரச்சாரங்களிலும் செலவிட்ட மோடி,
தேசத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்குமான, அனைத்து மக்களையும் ஒருங்கிணைக்கும் வழிகாட்டுதலையும், நிர்வாகத்தையும் தரவில்லை. மக்கள் மத்தியில் தன்னம்பிக்கை யையும், ஒற்றுமை உணர்வினையும் வளர்த்தெடுக்கவேண்டிய மோடியும், பாஜகவும், மோடி அரசும் இந்திய மக்களை மதம், சாதி, மாநிலம், மொழி அடிப்படையில் பிரித்து வைத்து அதி காரத்தைக் கைப்பற்றுவதிலேயே குறியாக இருந்ததால் உண்மையான வளர்ச்சியும் முன்னேற்றமும் நாட்டுக்கு வாய்க்கவில்லை. உள்நாட்டில் மக்கள் மத்தியில் சமூகப் பதற்றம், எல்லைப் பகுதிகளில் நிரந்தரமான அச்சுறுத்தல் கள், அண்டை நாடுகளோடு பழுதாகிப் போன உறவுகள், சரிவை நோக்கி விரை யும் பொருளாதாரம் என்று அனைத்து முனைகளிலும் தோற்று நிற்கும் மோடி அரசுக்கு வரும் நாட்கள் மிகப்பெரிய சவா லாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. மிரட்டுவதற்கும் ஒரு எல்லை உண்டு. பணிந்து போவதற்கும் ஒரு வரைமுறை உண்டு. குட்டக் குட்ட குனிபவனும் முட்டாள்! குனியக் குனிய குட்டுபவனும் முட்டாள் - எங்கள் ஊர் பழமொழி.