2022, மார்ச் 1 முதல் 4 வரை எர்ணா குளத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கேரள மாநில மாநாட்டில் “புதிய கேரளம்” குறித்த ஆவணம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ”அனைத்து வகையிலும் முன்னேறிய கேரளம்” எனும் இலக்கை முன்வைத்திருக்கும் அந்த ஆவணம், கேரள அரசி யல் சமூக பொருளாதார தளத்தில் கட்சியின் முயற்சிகள் மற்றும் அரசின் திட்டங்கள், அவற்றை அமலாக்கும் போது கிடைத்த அனுபவங்கள் ஆகியவற்றை உள்ள டக்கமாகக் கொண்டுள்ளது. நான்கு பகுதிகளை கொண்ட அந்த ஆவணத்தில் இடம் பெற்றுள்ள அம்சங்களில் முக்கியமான சிலவற்றை சுருக்கமாக பார்க்கலாம்.
கேரள கட்சியின் தொலைநோக்கு இலக்கு
நவகேரளம் (புதிய கேரளம்) எனும் இந்த ஆவணம் தற்போதைய மாநில மாநாட்டில் விவாதித்து இறுதிப் பட்டிருந்தாலும், கம்யூனிஸ்ட் கட்சி கேரளாவில் துவக்கப்பட்ட காலத்திலிருந்தே கேரள சமூக பொரு ளாதார வளர்ச்சி குறித்த பார்வையோடுதான் தனது அர சியலை முன்னெடுத்து வந்திருக்கிறது. கேரளாவில் 1937 இல் கட்சியின் முதல் கிளை உருவாகிறது. கிளை துவங்கிய இரண்டாண்டுகளில் அதாவது, 1939-இல் மலபார் நிலங்கள் குத்தகை தொடர்பான விபரங்களை சேகரிப்பதற்காக அன்றைய பிரிட்டிஷ் அரசால் அமைக் கப்பட்ட கே.குட்டிகிருஷ்ணமேனன் தலைமையிலான குழுவிடம் தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் அவர்கள் கட்சியின் சார்பில் ஒரு கோரிக்கையை முன்வைத்தி ருக்கிறார். அதில், கேரளாவில் தற்போதைய குத்தகை முறையென்பது மிகவும் சிக்கலானதொரு நில உறவு முறையை கொண்டிருப்பதோடு, கிராமப்புற சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் தடையாக உள்ளதா கவும், விவசாயப் பொருளாதார வளர்ச்சிக்கு முட்டுக் கட்டை போடுவதாக உள்ளதெனவும் விளக்கியதோடு, நிலமற்றவர்களுக்கு நிலங்களை பகிர்ந்து அளிப்ப தன் மூலமே வளர்ச்சியை நோக்கி முன்னேற முடியும் என தொலைநோக்குப் பார்வையோடு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அதற்குப் பிறகும் இத்தகைய கோரிக்கைகளை தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர் கம்யூனிஸ்டு கள். பிறகு 1956-இல், அதாவது தோழர் இஎம்எஸ் தலை மையிலான அரசு அமைவதற்கு ஓராண்டு முன்னதா கவே திருச்சூரில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டத்திலும் புதிய கேரளம் எனும் ஒரு ஆவணம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. முழுமையான நிலச் சீர்திருத்தம், கல்வி மற்றும் சுகாதாரத் துறைக ளின் வளர்ச்சி, புதிய வேலைவாய்ப்புகளை உள்ளடக் கிய தொழில் வளர்ச்சி எனும் அம்சங்களை கொண்ட தாக வெளியிடப்பட்ட அந்த ஆவணத்தின் உள்ளடக்கம் தான் 1957-இல் நடைபெற்ற தேர்தலில் கட்சியின் சார்பில் முன்வைக்கப்பட்ட தேர்தல் அறிக்கையாகவும் வெளியிடப்பட்டது.
தோழர் இஎம்எஸ் தலைமையிலான முதல் அரசு அமைந்தவுடன் மேற்கண்ட அம்சங்களை அமலாக்கு வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன. அத்துடன் மக்கள் போராட்டங்களில் காவல்துறையினரின் அணுகு முறையில் ஒரு புதிய கண்ணோட்டமும் சுட்டிக்காட் டப்பட்டது. ஆனால் புதிய அரசின் திட்டங்களை அம லாக்கவிடாமல் இந்திய ஆளும் வர்க்கமான முதலா ளித்துவ - நிலப்பிரபுத்துவ வர்க்கத்தினர், வலதுசாரி கண்ணோட்டம் கொண்டவர்களோடு கூட்டுச் சேர்ந்து இஎம்எஸ் அரசைக் கவிழ்த்து விட்டார்கள். இந்திய ஆளும் வர்க்க நலன்களுக்கு எதிராகவும், அதே சமயத் தில் சுரண்டப்படும் உழைப்பாளி மக்கள் நலன்களை பாதுகாக்கவுமான கொள்கைகளைக் கொண்டதொரு வர்க்கக் கண்ணோட்டம் கொண்டதொரு மாநில அரசு செயல்படுவது அவ்வளவு எளிதானதல்ல என்பதை முதன் முதலாக கேரள அனுபவம் நமக்கு உணர்த்தியது.
அனுபவச் செறிவுடன் முன்னேற்றப் பாதையில்...
ஆட்சிக்கு வந்த இரண்டாண்டுகளுக்குள் அரசு கலைக்கப்பட்டாலும் கூட குறுகிய காலத்தில் பல புதிய சாதனைகளைப் படைத்த அரசாங்கமாக அது அமைந் தது. புதிய நிலைமைகளுக்கேற்ப நவீன கேரளத்தைப் படைக்க வேண்டுமென்ற இலக்கு அந்த அரசுக்கு இருந்தது. அதற்கு பிறகு 1967, 1980, 1987, 1996, 2006 எனப் பல முறை பொறுப்பேற்றுக் கொண்ட இடது ஜனநாயக முன்னணி அரசுகள் குறிப்பிடத்தகுந்த பல்வேறு சாதனைகளை படைத்திருக்கின்றன. குறிப் பாக 1967 இல் மாநிலங்களுக்கு நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் ஒன்பது மாநிலங்களில் காங்கிரஸ் அல்லாத அரசுகள் அமைந்தன. அப்போது மிக இயல் பாகவே அதிகாரத்தை தன்னிடம் குவித்து வைத்திருக் கும் ஒன்றிய அரசுக்கும், மாநிலங்களுக்கும் இடையே யான முரண்பாடுகள் வெடித்தன. ஒன்றிய- மாநில அரசுகள் இடையேயான உறவுகள் மற்றும் கோரிக்கை கள் குறித்த குரலை முதன் முதலாக வலுவாக எழுப்பிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், கேரள இடது ஜன நாயக முன்னணி அரசும் இதர மாநிலக் கட்சிகளை யும் ஒன்றிணைக்க மேற்கொண்ட முயற்சியின் விளை வாக- காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் நடைபெற்ற எதிர்க் கட்சிகளின் கூட்டத்தில் ஒன்றிய- மாநில உறவுகள் தொடர்பான ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே பின்னர் 1983ல் சர்க்காரியா கமிஷனும் அமைக்கப்பட்டது.
1967-இல் அமைந்த கேரள இடதுசாரி அரசு உறுதி யாக அமலாக்கிய நில உச்சவரம்புச் சட்டம் மற்றும் நில மற்றவர்களுக்கு நிலங்களை பகிர்ந்து அளித்தல் உள்ளிட்ட அரசியல் நடவடிக்கைகளின் காரணமாகவே அன்றைய காங்கிரஸ் அரசும் பெயரளவிற்கேனும் ஒரு நில உச்சவரம்புச் சட்டத்தை அமலாக்கியது. இந்த காலகட்டத்தில் அமைந்த இடது ஜனநாயக முன்னணி அரசு தான் நாட்டிலேயே அதிக கல்வியறிவு கொண்ட கேரள சமூகத்தை உருவாக்கியது. மாநிலம் முழுவதும் “மாவேலி ஸ்டோர்ஸ்” எனும் மலிவு விலை கூட்டுறவு அங்காடிகள் அமைக்கப்பட்டன. மாநிலம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் புனர மைக்கப்பட்டு நீராதாரமும், விவசாயமும் அதிகரிக் கப்பட்டது. இந்நிலையில் தான் 1990 களில் நவீன தாராள மயக் கொள்கைகள் அமலாக்கப்பட்டன. இக்கொள்கை கள் முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ நலன்களை மைய மாக கொண்டு முன் நிறுத்தப்பட்ட போது, மாநிலங்க ளுக்கு உள்ள வரம்பிற்குள் நின்று ஏழை உழைப்பா ளிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள், சிறு குறு விவசாயிகள் உள்ளிட்ட அடித்தட்டு வர்க்க நலன்களை பாதுகாப்பதற்கான கொள்கைகளும் அமலாக்கப் பட்டன. கேரளம் மட்டுமின்றி, இடதுசாரிகள் ஆட்சிக்கு வந்த மேற்கு வங்கம், திரிபுரா மாநிலங்களிலும் நிலச் சீர்த்திருத்தக் கொள்கை மூலம் நிலவிநியோகம் செய் யப்பட்டு மக்கள் நலன் எனும் பார்வையில் பொருளா தார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
பெரு முதலாளிகள், நிலப்பிரபுக்களின் நலன்களை முன்னிறுத்திய நவீன தாராளமயக் கொள்கைகளுக்கி டையே இடதுசாரி அரசுகள் எவ்வாறு மக்கள் நலன் சார்ந்த அரசுகளாகச் செயல்பட வேண்டுமென்று கட்சி யின் 18ஆவது மற்றும் 19ஆவது அகில இந்திய மாநாடு கள் குறிப்பான சில வழிகாட்டுதல்களையும் அந்த காலகட்டத்தில் அளித்தன. அவற்றையும் உள்ளடக்கிய தாக அடித்தட்டு மக்களின் நலன் சார்ந்த நடவடிக்கை கள் வர்க்கக் கண்ணோட்டத்துடன் கூடிய திட்டங்க ளாக அமலாக்கப்பட்டன.
மக்களின் ஆதரவோடு மீண்டும் கேரள இடது ஜனநாயக முன்னணி
பொதுவாக ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை கேரளத்தில் ஆட்சி மாற்றம் இருக்கும் எனும் நடை முறையை பொய்யாக்கி; 2016இல் ஆட்சிக்கு வந்த இடது ஜனநாயக முன்னணி அரசு 2021 இல் மீண்டும் இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்டது. 2016-இல் ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்டபோது 1. ஊழலற்ற அரசு நிர்வாகம், 2. மதச் சார்பின்மையை உயர்த்திப் பிடிப்பது, 3. வளர்ச்சியை நோக்கிய கேரளம்- ஆகிய மூன்று முக்கிய விஷயங்கள் ஆட்சியின் பிரதான குறிக்கோள்களாக முன்வைக்கப்பட்டன. மேலும் 35 அம்சங்களைக் கொண்ட பிரத்யேக செயல்திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டது. அமலாக்கத்திற்கான 600 இலக்குகள் தீர்மானிக்கப்பட்டன. ஒரு கட்சியின் ஆட்சி என்பதற்கு பதிலாக மக்கள் பங்கேற்போடு ஆட்சி என்பது உறுதி செய்யப்பட்டது. மேற்கண்ட முன் னெடுப்புகள் மூலமாக 2016 முதல் 2021 வரையிலான ஐந்து ஆண்டுகளில் பல்வேறு திட்டங்கள் முழுமை யாக அமலாக்கப்பட்டன.
குறிப்பாக, வேலை வாய்ப்புகள் பெருமளவில் வெட்டிச் சுருக்கப்படும் நவீன தாராளமயக் காலத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் கேரள அரசு 1,61,361 பேருக்கு அரசு வேலைகளை அளித்துள்ளது. விவசாயத்துறை யின் முன்னேற்றமாக 1.7 லட்சம் ஹெக்டேராக இருந்த பாசனப் பரப்பு 2.23 லட்சம் ஹெக்டேராக அதிகரிக்கப் பட்டது. 14 வகையான காய்கறி வகைகளின் உற்பத்தி 7.25 லட்சம் மெட்ரிக் டன்னில் இருந்து 15 லட்சம் மெட்ரிக் டன்னாக- அதாவது இரு மடங்காக அதிகரிக்கப் பட்டது. நிலமற்ற 1,90,825 பேருக்கும் நிலங்கள் வழங்கப் பட்டன. 2016 இல் 13,727 ஆக இருந்த சிறு, குறு தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 64,879 ஆக அதிகரித் தது. மிக முக்கியமாக லைப்- LIFE (Livelyhood Inclu sive Financial Empowerment) எனும் திட்டம் அம லாக்கப்பட்டு வீடற்றவர்களுக்கு வீடு அளிக்கும் திட்டம் துவக்கப்பட்டு, இந்தக் காலத்தில் 2,77,045 வீடுகள் கட்டி தரப்பட்டதன் மூலம் பதினொரு லட்சம் மக்கள் தங்கள் சொந்த வீடுகளில் வசிக்கும் வாய்ப்பை பெற்றி ருக்கிறார்கள். மேலும் இத்திட்டத்தில் விண்ணப்பித் துள்ள ஒன்பது லட்சம் பேருக்கும் வீடு அளிப்ப தற்கான முயற்சிகளில் அரசு ஈடுபட்டுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் தனியார் பள்ளிக ளிலிருந்து விலகி அரசுப் பள்ளிகளில் சேர்ந்த மாண வர்களின் எண்ணிக்கை 6,80,000 ஆக அதிகரிக்கும் வகையில் அரசு பள்ளிக் கூடங்களின் தரம் நவீன வசதிகளோடு மேம்படுத்தப்பட்டுள்ளன. மாநிலம் முழு வதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் குடும்ப சுகாதார நிலையங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. பெண்களுக்கான குடும்பஸ்ரீ திட்டத்தின் மூலம் 45 லட்சம் பெண்கள் பயனடையும் வகையில் ரூ.2000 கோடி வட்டியில்லா கடனும், ரூ.1500 கோடி 4 சதவீத வட்டியுடன் கூடிய கடனுமாக வழங்கப்பட்டுள்ளன. மேலும் பெண்களின் சமூகப் பொருளாதார முன்னேற் றத்திற்கென பிரத்யேகமாக பாலின நிதி நிலை அறிக்கை மூலம் 19.5 சதவீத நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. 59.5 லட்சம் பேருக்கான ஓய்வூதியம் ரூ.600 லிருந்து ரூ.1600/- ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பிற்காக இடம் பெயரும் தொழிலாளர்கள் அடையாள அரசியல் கண்ணோட்டத்துடன் விரட்டப் படும் சூழல்களுக்கிடையே, அவர்களை ‘எங்கள் விருந்தினர்’ என அரவணைத்துக் கொண்டது தொழி லாளி வர்க்கக் கட்சியின் தலைமையிலான கேரள அரசு. அவர்களுக்கான பிரத்யேக அடையாள அட்டைகள், தங்கும் விடுதிகள் என திட்டங்கள் அமலாக்கப்பட்டன. பசுமைக் கேரளம் எனும் திட்டத்தின் மூலம் 41.2 கிமீ ஆறுகளும், 42,774 கிமீ கால்வாய்களும் தூர்வாரப்பட்டு நீராதாரங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. பல்வேறு நலத் திட்டங்களிலும், நடவடிக்கைகளிலும் கேரளம் முதல் நிலையில் உள்ளதென ஒன்றிய அரசின் நிதி ஆயோக் அமைப்பும் பாராட்டுமளவிற்கு கேரள அரசின் நடவ டிக்கைகள் அமைந்துள்ளன. மேலும் பல மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகள் அமலாக்கப்பட்டு வருவதன் மூலம் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிறது கேரள இடதுசாரி அரசு.
புதிய எல்லைகளை நோக்கி...
இத்தகைய அனுபவங்களோடு மேலும் புதிய எல்லையை இலக்காகக் கொண்டு முன்னேறிக் கொண்டிருக்கிறது கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு. நாடு முழுவதும் மத மோதல்கள் அதிகரித்துக் கொண்டுள்ள சூழலில் மத மோதல்களற்ற, அனைத்து சமூகத்தினரும் அச்சமின்றி வாழ்வதற்கானதொரு நல்லிணக்க சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளில் முன்னேறுகிறது. நவீன அறிவியல் கண்ணோட்டம் கொண்ட சமூகத்தை கட்டியெழுப்புவ தற்கான பாதையிலும் முன்னேறிக் கொண்டிருக்கி றது. தாராளமய நடவடிக்கைகளில் ஒன்றாக, பாஜக ஒன்றிய அரசு கடந்த 2015-இல் திட்டக்கமிஷனை ஒழித்து விட்ட பின்னணியில் பல மாநிலங்களும் அதன் பாதையிலேயே பயணிக்கத் துவங்கியபோதும், கேரள மாநிலம் தனக்கென ஒரு ஐந்தாண்டு திட்டத்தை இலக்காக வைத்து முன்னேறுகிறது. அடுத்த 25 ஆண்டுகளில் ஒரு கேரள தனிநபரின் சராசரி வருவாய் நடுத்தர வருமானம் கொண்ட நாடு களை ஒத்ததாக இருக்க வேண்டுமெனும் குறிக்கோளை நிச்சயித்து அதற்கேற்ற சமூக – பொருளாதார நட வடிக்கைகளை முன்னெடுக்கிறது கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு.
ஒன்றிய அரசின் நிதி பகிர்வு பாதியாக வெட்டிச் சுருக்கப்பட்ட பின்னணியில் தனக்கான பொருளாதார ஆதாரத்தை சுயேச்சையாகப் பெருக்கவும் போராடு கிறது கேரள அரசு. இந்துத்துவா எனும் வகுப்புவாத நிகழ்ச்சி நிரலை அமலாக்கிக் கொண்டே நவீன தாராளமயக் கொள்கை களை அமலாக்கும் பாஜக மாடல் ஒருபுறம்; மாநில அரசு கள் அமலாக்கிக் கொண்டிருக்கும் பல்வேறு சமூகப் பொருளாதார மாடல்கள் மறுபுறம் என விவாதங்கள் தொடர்ந்தாலும் கூட, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி எனும் இலக்கை கொண்டு முன்னேறுகிற இடது சாரி அரசின் மாடல் தான் உண்மையாக மக்களுக்கான மாற்றாகவும் மாடலாகவும் இருக்க முணடியும்.
கட்டுரையாளர்: சிபிஐ(எம்) மாநிலக்குழு உறுப்பினர்