உழைப்பே உயர்வு என்று நாளும் பொழுதும் பாடுபடும் விவசாயிகள், பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு மூட்டை பொட்டாஷ் உரத்தை 280 ரூபாய்க்கு வாங்கினர். அது8 ஆண்டு காலத்தில் 1700 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது. அதே போல் ஒரு மூட்டை வெறும் 140 ரூபாய்க்கு கிடைத்த சூப்பர் பாஸ்பேட் இப்பொழுது 1200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 450 ரூபாய்க்கு விற்பனை செய்த டிஏபி உரம் 1150 ரூபாய் வரைக்கும் உயர்ந்துள்ளது. பிரதமராக மோடி பதவி ஏற்கும் முன்பு ஒரு விவசாயி ஒட்டுமொத்தமாக 1540 ரூபாய்க்கு வாங்கிய இந்த உரங்களின் விலை தற்போது 6175 ரூபாயாகும். ஐந்து மடங்கு அதிகரித்து இருக்கிறது. அதே நேரத்தில் அன்றைக்கு ஒரு மூட்டை நெல் 900 ரூபாய்க்கு கொள்முதல் செய்த பாஜக அரசு, 8 ஆண்டுகளில் உயர்த்தியிருப்பது வெறும் 350 ரூபாய் மட்டுமே. உரிய விலை கிடைக்காமல் நாடு முழுக்க 20 விழுக்காடு வரை நெல் சாகுபடி பரப்பு குறைந்துவிட்டது. இதன் விளைவுகள், கடந்த ஓராண்டில் மட்டும் 5318 விவசாயிகள், 5563 விவசாயக் கூலிகள் என 10,881 பேர் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொண்டனர். இதில் 653 பேர் பெண்களாகும். இதற்கெல்லாம் காரணம் பாஜக கடைபிடித்து வரும் விவசாயிகள் விரோத கொள்கைகளே.
வேலையின்மையின் விளைவு
பாஜக அரசு பின்பற்றி வரும் தாராள மயம், தனியார் மயம், உலக மயம் என்கிற நாசகர பொருளாதாரக் கொள்கை அமலாக்கத்தின் விளைவு நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்தில் விழுந்துள்ளது. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியாமல் இந்த ஆட்சியாளர்கள் அம்பலப்பட்டுள்ளனர். நாடு முழுக்க வேலையின்மையும் வறுமையும் அதிகரிக்க அதிகரிக்க கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், கூலிப்படைகளின் அட்டூழியம், பாலியல் வன்கொடுமைகள், சாதி மதத்தின் பெயரால் கலவரங்கள் போன்ற சமூக குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த குற்றங்களின் எண்ணிக்கையை ஒன்றிய பாஜக அரசு மறைக்கவும் குறைக்கவும் முயற்சித்தா லும் குற்றங்களின் விகிதாச்சாரம் 216 விழுக்காட்டில் இருந்து முறையே 229, 234, 237, 241, 315 என்று ஆண்டுக்காண்டு அதிகரித்துக் கொண்டே இருப்பதை தேசிய குற்றப்பதிவு ஆவண காப்பகத்தின் (என்சிஆர்பி) அறிக்கையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
2021 ஆம் ஆண்டில் நடந்த குற்றங்கள் குறித்து நாடு முழுவதுமுள்ள அனைத்து வகையான காவல் நிலையங்களிலும் 1 கோடியே 74 லட்சத்து 80 ஆயி ரத்து 305 புகார்கள் பதிவாகியுள்ளன. இதில் 85 லட்சத்து 85 ஆயிரத்து 351புகார்கள் வாய்மொழியா கவும், 88 லட்சத்து 94 ஆயிரத்து 954 புகார்கள் எழுத்துப் பூர்வமாகவும் 1 லட்சத்து 85 ஆயிரத்து 443 புகார்கள் இணையதளம் மூலமாகவும் வந்துள்ளன. இவற்றில் 1 கோடியே 11 லட்சத்து 316 புகார்கள் மீது மட்டுமே முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதியப் பட்டுள்ளது. இந்த புகார்களில் இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) கீழ் 36,63,360 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள் ளது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் சற்று குறைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் போஸ்கோ, எஸ்டி, எஸ்சி வன்கொடுமை தடுப்புச் சட்டம், மாநில உள்ளூர் சிறப்பு சட்டங்களில் 24,32,850 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டு களைக் காட்டிலும் மிகவும் அதிகமாகும்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உத்தரப்பிரதேசத்திற்கு முதலிடம்!
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் 4,28, 278 வழக்குகள் பதிவாகியிருக்கிறது. இதுவும் முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது 15 விழுக்காடு அதிகமாகும். அதிலும் பாஜக ஆட்சி செய்து வரும் உத்தரப்பிரதேசம் 57 ஆயிரம் வழக்குகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது. ராஜஸ்தானில் 40,738, மகாராஷ்டிரத்தில் 39, 526, மேற்கு வங்கத்தில் 35,884, ஒடிசாவில் 31, 352 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 1,49,44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவும் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் 16.2 விழுக்காடு அதிகமாகும். முதல் ஐந்து இடங்களில் மத்தியப் பிரதேசம் (19,173), மகாராஷ்டிரம் (17,261), உத்தரப்பிரதேசம் (16,383), மேற்கு வங்கம் (9,523), ஒடிசா (7,899) இடம் பிடித்துள்ளது. குறிப்பாக போக்சோ சட்டத்தில் 38 விழுக்காடு வழக்குகள் பதிவாகியுள்ளன. இவற்றில் 3170 வழக்கு களில் 37,44 சிறார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 76 விழுக்காட்டினர் 16 முதல் 18 வயதுக்குட்பட்ட வளரும் இளம் பருவத்தினர் என்பது வருத்தமளிக்கிறது.
தினக்கூலி தொழிலாளர் தற்கொலை
கடந்த ஓராண்டில் மட்டும் 1 லட்சத்து 64 ஆயிரத்து 33 தினக்கூலித் தொழிலாளர்களின் தற்கொலைகள் பதிவாகியுள்ளன. 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 7.6 விழுக்காடு அதிகமாகும். இதில் 26 விழுக்காடு அணி திரட்டப்படாத முறை சாரா தொழி லில் ஈடுபட்டு வரும் தினக்கூலி தொழிலாளர்கள் என்பது வேதனைக்குரியது.
கொள்ளை நோயை மிஞ்சும் கொலைகள்
கடந்த ஆண்டு நாடு முழுவதும் 1,64,033 தற்கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் மகாராஷ்டி ரம் 22,207,தமிழ்நாடு 18,925, மத்தியப் பிரதேசம் 14,965, மேற்கு வங்கம் 13,500, கா்நாடகம் 13,056 வழக்கு கள் பதிவாகியுள்ளன. இவை மட்டுமல்ல; தகராறு, ஆதாய மற்றும் தனிப்பட்ட பழிவாங்கல் அல்லது பகையின் காரணமாக 29,272 கொலைகள் நடந்துள்ளது. இதுவும் கடந்த ஆண்டுகளை காட்டிலும் அதிகமாகும். பாலியல் மற்றும் கும்பல் பாலியல் சம்பவங்களில் 293 கொலைகள் நடந்துள்ளது. இதிலும் பாஜக ஆளும் உத்தரப்பிரதேசமே முதலிடத்தில் உள்ளது. அசாம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. பாலியல் வல்லுறவு, ஆள் கடத்தல், குழந்தைகள் மீதான வன்முறை, திருட்டு சம்பவங்கள், கொலைகள் என 2021 ஆம் ஆண்டில் நடந்த வன்முறை குற்றங்க ளின் எண்ணிக்கை என்பது கொள்ளை நோய்க்கு முன்பு இருந்ததை விட பன்மடங்கு அதிகமாகி இருப்பது கவலையளிக்கிறது.
பட்டியல்-பழங்குடி மக்களின் மீதான தாக்குதல்கள்
நாடு முழுக்க பட்டியலினம் மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான குற்றங்களும் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. குறிப்பாக பட்டியலின மக்க ளுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட 50,900 வழக்குக ளில் உத்தரப் பிரதேசத்தில் மட்டும் அதிகபட்சமாக 13 ஆயிரத்து 146 வழக்குகள் உள்ளது. அதேபோல் பழங்குடி மக்களுக்கு எதிரான குற்றங்களில் 882 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில் அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலத்தில் 2,627 வழக்குகள் பதிவாகியுள்ளன. நாட்டில் 1319 சிறைச்சாலைகள் உள்ளன இவற்றில் 4,25, 609 குற்றவாளிகளை மட்டுமே அடைக்கக் கூடிய வசதிகள் உள்ளது. ஆனாலும் 5,54,334 கைதிகளை அடைத்து வைத்துள்ளனர். விகிதாச்சார அடிப்படையில் பார்த்தோமானால் இது 130 விழுக்காடு அதிகமாகும். இது மட்டுமல்ல சிறை மரணங்க ளும் கடந்த ஓராண்டில் அதிகரித்துள்ளது. மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தது முதல் சிறைகளில் அடைபட்டுள்ளவர்களின் எண்ணிக்கை மட்டும் அல்ல; குற்றங்களின் எண்ணிக் கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
(ஆதாரம்: தேசிய குற்றப் பதிவு ஆவண காப்பகம் 2021ஆம் ஆண்டு தொகுத்து வெளியிட்ட அறிக்கை)