இனப்படுகொலைத் தாக்குதல் நடத்தி பெண்கள், குழந்தைகள் உட்பட பல ஆயிரக்கணக்கான பாலஸ்தீன மக்களை கொன்று குவித்து வருகிறது இஸ்ரேல் ராணு வம். அத்துடன், இஸ்ரேல் பகுதி களில், பல்வேறு துறைகளில் பணி புரியும் பாலஸ்தீனத் தொழிலா ளர்களை இஸ்ரேலை விட்டு வெளி யேறுமாறு அந்நாட்டு ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப் படுகிறது.
மறுபுறத்தில், பாலஸ்தீன தொழிலாளர்களை விரட்டிய பின் இஸ்ரேலில் வேலை செய்வ தற்காக இந்தியாவிலிருந்து 50 ஆயி ரம் முதல் 1 லட்சம் தொழிலாளர் களை, குறிப்பாக கட்டுமானத் தொழிலாளர்களை அனுப்புமாறு இந்திய அரசுக்கு, இஸ்ரேலிய கட்டு மானத் தொழிலாளர்கள் கூட்ட மைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
தங்களின் இந்தக் கோரிக்கை யை இந்திய அரசுக்கு நேரடியாக வும், இஸ்ரேலிய அரசு மூலமாகவும் அனுப்பியுள்ளதாகவும் இஸ்ரே லிய கட்டுமானத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பாலஸ்தீன மக் கள் மீதான இனப்படுகொலை மற் றும் பாலஸ்தீனியர்களை துரத்தி விட்டு, இந்தியர்களை இஸ்ரேலில் பணியில் அமர்த்தும் நோக்கத் திற்கு இந்திய தொழிற்சங்க மையம் (CITU) கடும் கண்டனம் தெரிவித் துள்ளது.
இதுதொடர்பாக சிஐடியு பொதுச்செயலாளர் தபன் சென் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள் ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
“பாலஸ்தீன தொழிலாளர் களுக்கு எதிரான இஸ்ரேல் நாட்டு நிர்வாகத்தின் மிருகத்தனமான, மனிதாபிமானமற்ற செயல்களை கண்டிக்கும் வகையில், பாலஸ்தீன மக்கள் மீதான தொடர்ச்சியான இனப்படுகொலை படுகொலை களுக்கு துணையாக, கட்டுமானம் உட்பட பல்வேறு பணிகளுக்கு இந்திய தொழிலாளர்களை அனுப்ப அனுமதிக்கக்கூடாது என இந்திய தொழிற்சங்க மையம் (சிஐ டியு) ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.
அவ்வாறு அனுப்புவதற்கான நடவடிக்கை எதுமிருந்தால், அது கண்டிக்கத்தக்கது. அதனை உழைக்கும் மக்களும் மறுத்திட வேண்டும் என சிஐடியு கேட்டுக் கொள்கிறது.
இந்த இக்கட்டான நேரத்தில் இந்தியத் தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்பும் எந்த ஒரு நடவடிக்கையையும் நேரடியாக எதிர்ப்போம் என இந்திய கட்டு மானத் தொழிலாளர் சம்மேளனம் (CWFI)தீர்மானம் நிறைவேற்றியி ருப்பதை சிஐடியு வரவேற்கிறது.
இஸ்ரேலிய அரசு மற்றும் அங்குள்ள கட்டடம் கட்டுபவர்கள் சங்கத்தின் இத்தகைய நோக்கம் தொடர்பாக இந்திய அரசு பதி லளிக்க மறுக்கும் நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளிக்க இந் திய அரசாங்கத்தை சிஐடியு மற்றும் தொழிலாளி வர்க்கம் மீண்டும் வலி யுறுத்துகிறது.
மேலும் 1967-க்கு முந்தைய எல்லையுடன் கூடிய பாலஸ்தீன தாயகத்தை அனைத்து ஆக்கி ரமிப்பிலிருந்தும் விடுவிப்பதற்காக வும், மனிதாபிமான அடிப்படை யில் இஸ்ரேலில் உடனடி போர் நிறுத்தத்திற்கான சமீபத்திய ஐநா தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும்.
ஐநா தீர்மானங்களின்படி பாலஸ்தீன மக்கள் மற்றும் அவர் களின் தாயக கோரிக்கைக்கு ஆத ரவு தெரிவிப்பதுடன், பாலஸ்தீனத் தில் அமெரிக்க ஏகாதிபத்திய ஆத ரவுடன் இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலைக்கு எதிராக இந்தியா முழுவதும் உள்ள உழைக் கும் மக்கள் கண்டனம் முழங்க வேண்டும் என்றும் சிஐடியு அழைக் கிறது.
2023 நவம்பர் 7-10 தேதிகளில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் லாயிட் ஆஸ்டின் ஆகி யோர் இந்தியாவிற்கு வருகின்ற னர். அவர்கள் வருகை தரும் போது பாலஸ்தீனப் பிரச்சனையில் முற் போக்கு மற்றும் இடதுசாரி சக்தி களால் ஏற்பாடு செய்யப்படும் யுத்த எதிர்ப்பு மற்றும் பாலஸ்தீனம் உடனான ஒருமைப்பாட்டு நட வடிக்கைகளில் பங்கேற்குமாறும் தொழிலாளர் வர்க்கத்தை சிஐடியு அழைக்கிறது.
இவ்வாறு தபன் சென் அறிக்கை யில் குறிப்பிட்டுள்ளார்.