articles

img

மாற்றுத் திறனாளிகளை மோசடி செய்த மோடி அரசு மீது குற்றப் பத்திரிக்கை - பா.ஜான்சிராணி

டிசம்பர் 3 உலக ஊனமுற்றோர் தினம் ஆகும். இத்தினத்தையொட்டி, இந்தியாவின் ஊனமுற்றோர் பிரச்சனைகளை ஒன்றிய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக ஊனமுற்றோர் உரிமைக்கான தேசிய மேடை(NPRD) பல்வேறு போராட்ட இயக்கங்களை நடத்தி வருகிறது. இந்தாண்டு உலக ஊனமுற்றோர் தினத்தையொட்டி, மாற்றுத் திறனாளிகளை ஏமாற்றியும் வஞ்சித்தும் சட்ட உரிமைகளை அமலாக்க மறுத்தும் வருகிற ஒன்றிய மோடி அரசின் மீது டிசம்பர் 1இல் (இன்று) மக்கள் மன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்கிறது தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம்.

மக்களை வாட்டி வதைக்கும் அரசியல் பொரு ளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதி மக்களும் நாடு முழுவதும் போராட்டக் களத்தில் நிற்கிற இன்றைய சூழ்நிலையில், மாற்றுத்திறனாளிகள் மட்டும் பிரச்சனை இல்லாமல் வாழவா முடியும்? மக்கள் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சனைகளும், வன்முறைகளும், கொடுமைகளும், பொருளாதார நெருக்கடிகளும் வேலைவாய்ப்பின்மையும், விலை வாசி உயர்வும், இந்தி திணிப்பும், சாதி மதரீதியான திட்டமிட்ட கலவரங்களும் இந்நாட்டில் வாழும் மாற்றுத் திறனாளிகளுக்கும் பெரும் சவாலாகவே இருக்கின் றன. உடலாலும் மனதளவிலும் பாதிப்பைப் பெற்றுள்ள ஊனமுற்றவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் தான் ஒன்றிய பாஜக அரசு சாதாரண மக்களைக் காட்டிலும் ஊனமுற்றவர்க ளுக்கு ஏகப்பட்ட வாக்குறுதிகள், நம்பிக்கைகள் அளித்தது; ஆனால் அவர்களுக்கு சட்டப்பூர்வமான உரிமைகள் உட்பட அனைத்தும் மறுக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை.

புதிய உரிமைகள் சட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கான 2016 ஆம் ஆண்டின் புதிய உரிமைகள் சட்டம் போராடிப் பெறப்பட்டது. இச்சட்டத்தில் சொல்லப்பட்ட அம்சங்களில் ஒன்று, நாடு முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பல்நோக்கு தேசிய அடையாள அட்டை (UDID) கொடுக் கப்படும் என்பது. அதாவது, நாடு முழுவதும் செல்லத்தக்க அனைத்து உரிமைகளும் சலுகைக ளும் நலத்திட்டங்களும் பெறக்கூடிய அடையாள அட்டையாக யூ டி ஐ டி கார்டு இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை இதற்கான சிறப்பு முகாம் ஏற்பாடுகள் எதுவும் இல்லை. மாறாக அவரவரே அலைந்து திரிந்து பணச் செலவு செய்து 27 சதமானபேர் மட்டுமே இந்த அட்டைகளை பெற்றுள்ளனர். மேலும் ஒன்றிய அரசு, இந்த அடை யாள அட்டையின் பயன்பாட்டைப் பற்றி எந்த அறி விப்பும் இன்று வரை வெளியிடவில்லை. ஒன்றிய பாஜக அரசின் இந்த அலட்சியப் போக்கு மாற்றுத்திறனாளி களுக்கு தேவையற்ற அலைச்சல், பணச் செலவு , மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. சட்டத்தை அமல்படுத்த மறுக்கும் இந்தச் செயலானது ஒன்றிய அரசுக்கு மாற்றுத் திறனாளிகள் உரிமைச் சட்டம், 2016இன் படி அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்க வேண்டிய குற்றமாகும்.

8 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு எங்கே?

மாற்றுத்திறனாளிகள் போராடிப் பெற்ற 2016 ஆம் ஆண்டின் புதிய சட்டப்படி அரசு வேலைவாய்ப்பில்  4 சதவீதம் இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது.  ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பு தரு வேன் என்று பிரதமர் மோடி வாய்ப்பந்தல் போட்டார். பொதுவானவர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்றால்  அதில் 4 சதமா னம் என்ற அடிப்படையில் ஆண்டுக்கு 8 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும். வெற்று வாய்ப்பந்தல் மூலம், மாற்றுத் திறனாளிகளையும் மோடி ஏமாற்றியுள்ளார்.  மாற்றுத்திறனாளிகளில் படித்து பட்டம் பெற்ற தகுதி யுள்ள பல லட்சக்கணக்கான மாற்றுத் திறனாளிக ளின் வாழ்நாள் கனவாக கவுரவமான வேலைவாய்ப்பு என்கிற கோரிக்கையை வலியுறுத்துகிறோம். ஒன்றிய பாஜக அரசுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் உண்மையில் அக்கறை இருந்தால், கொடுத்த வாக் குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் இப்போதும் கூட ஒன்றிய அரசின் பல துறைகளில் காலியாக உள்ள 8 லட்சத்து 72 ஆயிரத்து 243 பணியிடங்களை நிரப்பலாம். ஆனால் மோடி அரசு வாய் திறக்கவில்லையே!

நூறு நாள் வேலை

கிராமப்புறத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதியையும் வெட்டி சுருக்கி குறைத்ததின் மூலமாக கிராமப்புற வேலை வாய்ப்பையும் தட்டிப் பறிக்கும் கொடுமையை  ஒன்றிய பாஜக அரசு செய்து வருகிறது. சமீபத்தில் கூட  குஜராத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, இந்த வேலை வாய்ப்புக்கான பொய்யான வாக்குறுதி வாரி வழங்கப்பட்டுள்ளது. ஒன்றரை ஆண்டுக்குள் குஜ ராத்தில் 10 லட்சம் வேலை வாய்ப்புகளை வழங்குவேன் என்று பிரதமர் அங்கே முழங்கியுள்ளார். இப்படி அடுக்கடுக்காக சொல்லப்பட்டது. வாக்குகளைப் பெறுவதற்காக சொல்லப்பட்ட பொய் என்பதால், இது சட்டப்படி ஓராண்டு சிறைத் தண்டனை கொடுக்க வேண்டிய குற்றம் ஆகும். 

மாற்றுத்திறனாளிகளுக்கு தடையற்ற சூழல் வருமா?

2016ஆம் ஆண்டு புதிய உரிமைகள் சட்டப் பிரிவு 89 மாற்றுத் திறனாளிகளுக்கு தடையற்ற சூழலை 5ஆண்டுக்குள் நாடு முழுவதும் உறுதிப்படுத்திட வேண்டும் என்று சொல்கிறது. அதாவது 2021 ஆம் ஆண்டுக்குள் 5 ஆண்டுகள் முடிவு பெற்ற நிலையில் இச்சட்டத்தை அமல்படுத்தி இருக்க வேண்டும்.ஆனால் இச்சட்டம் மீறப்பட்டுள்ளது. மறுக்கப்பட்டுள் ளது. தடையற்ற சூழலை உருவாக்க வேண்டும் என்று  சட்டம் சொல்கிறது. அதற்கான நிதி ஏதும் ஒன்றிய அர சால் ஒதுக்கப்படவில்லை. இன்று வரை நாடு முழுவதும் இருக்கக்கூடிய அரசு கட்டிடங்கள், பொது கட்டிடங்கள் கூட, மாற்றுத் திறனாளிகளுக்கு தடையற்ற சூழலில் இல்லை என்கிற நிலை தான் உள்ளது. 2016 சட்டம் 89 ஆவது பிரிவுப்படி முதல்முறையாக சட்டம் மீறப்படு கிறது என்றால் 10000 ரூபாய் அபராதம், திரும்பவும் சட்டம் மீறப்படுகிறது என்றால் 50000 முதல் 5 லட்சம் வரை அபராதம் விதிக்கக் கூடிய குற்றத்தை ஒன்றிய அரசு செய்து வருகிறது. 

ஊனமுற்றவர்களுக்கான பராமரிப்பு உதவித் தொகை 

ஒன்றிய அரசின் மூலம் நாடு முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளில் பராமரிப்பு உதவித் தொகை பெறுவோர் எண்ணிக்கையில் மிகக் குறைவா னவர்களுக்கே ஒன்றிய அரசின் தொகையான ரூபாய் 300 வழங்கப்படுகிறது. இதுவும் கடந்த 11 ஆண்டுக ளாக உயர்த்தப்படாமல் உள்ளது. தமிழகத்தில் சுமார் 6 லட்சம் பேர் பராமரிப்பு உதவித் தொகை பெறு கிறார்கள். இவர்களில் 48 ஆயிரம் பேருக்கு மட்டுமே ஒன்றிய அரசின் நிதி பங்களிப்பாக ரூபாய் 300 மட்டும் வழங்கப்படுகிறது. இதர தேவைகள் மாநில அரசு நிதியிலிருந்து வழங்கப்படுகிறது. கடந்த 11 ஆண்டுக ளில் விண்ணை முட்டும்விதமாக விலைவாசி பல மடங்கு உயர்ந்துள்ள நிலையில் வெறும் 300 ரூபாயை வைத்துக்கொண்டு ஒரு மாதம் முழுவதும் எப்படி ஒரு மாற்றுத்திறனாளி வாழ முடியும்?  ஒன்றிய பாஜக அரசு அதானி அம்பானி போன்ற பெரும் முதலாளிகளுக்கும் கார்ப்பரேட் கம்பெனிக ளுக்கும் வாங்கிய கடனுக்கு வரிச்சலுகையும் கடன் தள்ளுபடியுமாக கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 11 லட்சம் கோடி ரூபாயை வாரி வழங்கியுள்ளது. ஆனால் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை யை உயர்த்த முடியவில்லை.

இந்திய நாட்டில் இருக்கும் மாற்றுத்திறனாளிகள் இன்றைக்கு வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ள முடியாமல் கண்ணியமான கௌரவமான வாழ்க்கையை நடத்த முடியாமல், உதவித்தொகை உயர்வும் கிட்டாமல்,  கையேந்தும் நிலைக்கு தள்ளப் பட்டதற்கு ஒன்றிய மோடி அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். இத்தகைய நிலை காரணமாக மாற்றுத்திற னாளிகள் வாழ்வதா? சாவதா? என்கிற கேள்விக்கு,  மறைமுகமாக ‘‘முடிந்தால் வாழ், இல்லையேல் செத்துப் போ’’ என தற்கொலைக்கு தூண்டுவதாகவே மோடி அரசின் செயல்உள்ளது. ஆக இந்திய தண்டனைச் சட்டம் 306-இன் படி தற்கொலைக்கு தூண்டிய குற்றம் என்ற அடிப்படையிலும், வாழும் உரிமையை வழங்கும் அரசியல் சட்டச் ஷரத்து 21 மீறப்பட்டுள்ளது என்பதா லும் இது தண்டனைக்குரிய குற்றமாகும். 

ஊனமுற்றோரின்  கருவிகளுக்கும் ஜிஎஸ்டி

மேலும் உலகத்தில் எந்த நாட்டிலும் இல்லாத கொடுமை ஊனமுற்றோர் பயன்படுத்தும் செயற்கை உறுப்புகளுக்கும் கருவிகளுக்கும் ஜிஎஸ்டி வரி போட்டு, ஊனமுற்றவர்களின் நடமாட்டத்தையே தடுத்து நிறுத்தும் கொடுமையை செய்துள்ளது ஒன்றிய அரசு. அரசியல் நையாண்டிக்கு ஊனத்தை குறிப்பிட்டு பொதுவெளியில் இழிவாக பேசுவதை ஊனமுற்றோர் சட்டம் 92ஆவது பிரிவு ஆறு மாதம் முதல் ஐந்து வருடம் வரை சிறைத் தண்டனை கொடுக்கக்கூடிய மற்றும் அபராதம் விதிக்கக்கூடிய குற்றம் என கூறுகிறது. 

மாற்றுத்திறனாளிகள் ஆதரவற்றவர்களா?

ஆனால் பிரதமர் மோடியின் அரசு ஊனத்தை இழிவு செய்கிறது. இதையெல்லாம் விட கொடுமை ஊனமுற்றவர்களுக்கு ஒன்றிய மோடி அரசு குறிப்பாக பிரதமர் மோடி, ‘திவ்யாங்’ என புதிய நாமம் சூட்டியுள்ளார். இந்தி மொழியில், ‘கடவுளின் குழந்தை கள்’ என்று பொருள்படுகிறது. கடவுளின் குழந்தைக ளுக்கு ஜிஎஸ்டி வரியா?  ஊனத்தை மறைக்கவும் முடி யாமல் மறுக்கவும் முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டி ருக்கும் மாற்றுத்திறனாளிகளை போலியாக சிறப்பிப்ப தாக நினைத்து மோடி அவர்கள் ‘திவ்யாங்’ என பெயர் சூட்டியுள்ளார். 

மாற்றுத்திறனாளிகள் அனாதைகள் அல்ல. ஆனால் மாற்றுத்திறனாளிகளின் பிறப்பையே இழிவுபடுத்துவதாக, களங்கப்படுத்தும் முறையில் திவ்யாங் என்று பெயர் சூட்டியது என்பது ஒட்டு மொத்த மாற்றத்திறனாளிகளுக்கும் இழிவு ஆகும். ஒரு மனிதரை கெட்ட/ இழி பிறவியாக அடையாளப்படுத்து வது மற்றும் கௌரவக் குறைவு ஏற்படுத்துவது ஆகிய குற்றங்கள் இந்திய தண்டனைச் சட்டம் 294 (b) இன் படி மூன்று மாதம் சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கவும், மற்றும் 2016 புதிய உரிமைகள் சட்டப்படி பிரிவு 92 இன் படி ஆறு மாதம் முதல் ஐந்து வருடம் வரை சிறை தண்டனை கொடுக்கக் கூடிய குற்றமாகும். பிரதமர் மோடியின் பேச்சு இத்தகைய குற்றம் ஆகும். ஒன்றிய அரசின் ஏமாற்று வேலை இத்தோடு நிற்க வில்லை. ஒன்றிய அளவிலான ஊனமுற்றோர் துறையை ‘திவ்யாங் டிபார்ட்மென்ட்’ என துறையின் பெயரையே மாற்றி ஏமாற்றுத் தனத்தின் உச்சமாக செயல்பட்டுள்ளது. அதாவது மோசடி (fraud) இந்திய தண்டனைச் சட்டம்468 ன் படி 7 ஆண்டு சிறை தண்ட னைக்குரிய குற்றமாகும் இது. ஒன்றிய அரசு, ஊன முற்றோருக்கு உதவிட நேஷனல் ஃபண்ட் (தேசிய நிதியம்) உருவாக்கிட வேண்டும்

என 2016 ஆம் ஆண்டு சட்டம் சொல்கிறது. ஆனால் மோடி அரசு இதை உருவாக்கவில்லை.இப்படி எண்ணற்ற வாக்குறுதி களை மீறிய செயல்கள், சட்டத்தை மீறிய செயல்கள், சட்டத்தை அமல்படுத்த மறுத்தல், மாற்றுத்திறனாளி கள் இழிவுபடுத்தும் செயல்கள் என அடுக்கடுக்காக ஒன்றிய மோடி அரசு தண்டனைக்குரிய குற்றங்களை செய்து வருவதால் தான், ‘இனி பொறுப்பதற்கில்லை’ என்ற முறையில் மாற்றுத்திறனாளிகள் ஒன்றிய அரசின் மீது மக்கள் மன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளோம். டிசம்பர் 3 அன்று தேசிய மாற்றுத்திறனாளிகள் தினம் ஆகும். இதையொட்டி, தேசிய ஊனமுற்றோர் உரிமை மேடை யின் அறைகூவலின்படி, தமிழ்நாடு அனைத்து வகை  மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் சார்பில் டிசம்பர் 1இல் (இன்று) தமிழகம் முழுவதும் இந்த மாபெரும் இயக்கம் நடை பெறுகிறது. அனைத்துத் தரப்பு மக்களும் கரம் கோர்ப்பீர்! 

கட்டுரையாளர்: தமிழ்நாடு அனைத்து வகை  மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கப் பொதுச் செயலாளர்