‘இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாப்போம்’ எனும் தலைப்பில் சென்னையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் நடத்திய கருத்தரங்கில் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி (ஓய்வு) எச்.என்.நாகமோகன்தாஸ் பேசியதாவது: இந்திய அரசியல் சாசனம் எப்படி வடிவமைக்கப்பட்டது என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அதை எப்படி பாதுகாப்பது என்பதை நாம் தெரிந்து கொள்ள முடியும். கர்நாடகாவில் மாவட்ட மற்றும் தாலுகா அளவி லான நீதிமன்றங்களில் விசாரணை கைதிகளை ஜாமீனில் எடுக்கும் வழக்கறிஞர்களுக்கு அரசியல் சாசனத்தை படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று எந்த கவலையும் இல்லை. அது உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதி மன்றங்களில் உள்ள வழக்கறி ஞர்களின் வேலை என்று கருதிக் கொண்டிருக்கிறார்கள். அனைத்து சட்டங்களுக்கும் தாயாக அரசியல் சாசனம் விளங்குகிறது. தாயை நாம் தெரிந்து கொண்டால் மற்றவர்களை யும் நாம் எளிதாக தெரிந்து கொள்ள முடியும். வழக்கறிஞர்களுக்கு முதல் வேலையே அரசியல் சாசனம் என்றால் என்ன? அதில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதை படித்து தெரிந்து கொள்வதுதான்.
அரசியல் அதிகாரம் என்றால்? சட்டத்தை இயற்றும் அதிகாரம் அதற்கு உண்டு. அந்த சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரம் அதற்கு இருக்கிறது. அந்த சட்டத்தை யாராவது மீறினால் தண்டனை அளிக்கும் அதிகாரமும் உண்டு. இந்த மூன்று அதிகாரங்களும் யாரிடம் இருக்கிறதோ அவர்களே அரசியல் அதிகாரம் கொண்டவர்கள். ஒரு காலத்தில் இந்த அதிகாரங்கள் சாம்ராஜ்யங்களிடமும் சக்கர வர்த்திகளிடமும் மகாராஜாக்களிட மும் இருந்தது. அவர்கள் சட்டங் களை இயற்றி அதை அமல்படுத்தி அதை மீறுவோரை தண்டிக்கும் அதி காரத்தை பெற்றிருந்தனர். ஒரு கட்டத்தில் நாம் சாம் ராஜ்யங்கள், சக்கரவர்த்திகள், மகாராஜாக்களின் அதிகாரத்தை முடிவுக்கு கொண்டு வந்தோம். அவர்கள் இருந்த இடத்தில் அரசி யல் ஜனநாயக ஆட்சி முறை அமைந்தது. ஜனநாயக ஆட்சி முறை யில் சட்டங்களை இயற்றும் அதி காரம் மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட சட்டமன்றம் மற்றும் நாடாளு மன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் சட்டங்களை அமல் படுத்தும் அதிகாரம் நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அதை அமலாக்கும்போது மீறுவோரை தண்டிக்கும் அதிகாரம் நீதி மன்றங்களுக்கு வழங்கப்பட்டுள் ளது. எனவேதான் சட்டமன்றம், நிர்வாகம், நீதித்துறை இவை மூன்றும் சுதந்திரமாக தனித்த அதிகாரங் களுடன் செயல்படுபவை.
உலகில் உள்ள 195 நாடுகளில் 190 நாடுகளுக்கு, அவர்களுக் கென்று சொந்தமாக அரசியல் ஜன நாயக முறை உள்ளது. சட்ட மன்றம், நிர்வாகம், நீதிமன்றம் இவை அனைத்தும் தான்தோன்றித்தனமாக நடந்து கொள்வதாக அனுபவம் வாயி லாக பொதுமக்கள் உணர்ந்துள் ளனர். சட்டமன்றம் எப்படி எதேச்சதி காரமாக நடந்து கொள்கிறது என்பதற்கு உதாரணத்திற்கு, கடவுளுக்கு நாள்தோறும் கற்பூரம் காட்டும்போது கடிகார முள் சுற்றும் திசையில் சுற்றி காட்டுவோம். இதுதான் வழக்கம். ஆனால், சட்ட மன்றத்தில் இனி கடவுளுக்கு கற்பூரத்தை கடிகார முள் சுற்றும் திசைக்கு நேர் எதிராக காட்ட வேண்டும் என்று ஒரு அரசு சட்டம் இயற்றினால் அது அதிகார அத்துமீறல் என்றுதான் கருத முடி யும். சட்டமன்றம் ஒரு சட்டத்தை இயற்றத்தான் முடியும். நிர்வாகம் தான் அதை செயல்படுத்த வேண்டும். அந்த நிர்வாகம் ஒரு சட்டத்தை ஒரு மாவட்டத்தில் முழுமையாகவும் மற்றொரு மாவட்டத்தில் 50 விழுக்காடும், இன்னொரு மாவட்டத் தில் அமல்படுத்தாமல் இருப்பதும் நிர்வாக எதேச்சதிகாரம் என்கிறோம். நீதிமன்றங்களிலும் இந்த அதிகார அத்துமீறல் இருந்தது. கணவர் தனது மனைவியை கொன்று விட்டால் விசாரணையில் அந்த நபர் குற்றவாளி என்று உறுதிப்படு த்தப்பட்டால் அவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை அளித்தால் நாம் அனைவரும் அதை ஏற்றுக் கொள்வோம். ஆனால், ஒரு ஏழை மனிதன், தனது வயிற்றுப் பிழைப்பு க்காக ஒரு சிறிய நகையை திருடி விட்டால் அவருக்கு மரண தண் டனை வழங்குவீர்களா? அப்படியே நீதிமன்றம் வழங்கினால் அதை நாம் ஏற்றுக் கொள்வோமா? இல்லை. அப்படி ஒருவேளை மரண தண்டனை வழங்கப்பட்டால் அது நீதித் துறை எதேச்சதிகாரம்.
இதுபோன்ற அதிகார அத்து மீறல்கள் அதிகரித்து வருவதை தெரிந்து கொண்ட மக்கள் இதற்கு கடி வாளம் போட வேண்டும், கட்டுப் படுத்த வேண்டும். இதை முறைப் படுத்த வேண்டும் என்று நினைத்தார் கள். அதன் பின்னர்தான் ஒவ்வொன் றுக்கும் ஒரு விதிமுறைகள் உருவாக் கப்பட்டன. சட்ட மன்றம் எப்படி செயல்பட வேண்டும், நிர்வாகம் எப்படி செயல்பட வேண்டும், நீதி மன்றம் எப்படி செயல்பட வேண்டும் என விதிமுறைகள் உருவாக்கப்பட் டன. இப்படித்தான் சட்டமன்றம், நிர்வாகத்துறை, நீதித்துறைக்கு விதிமுறைகள் கொண்டு வரப்பட்டன. இதன் மூலம் நாம் நமது உரிமைகளை பாதுகாத்துக் கொள்ள முடியும். நமக்கான பொறுப்பு களை உணர்ந்து கொள்ளமுடியும். மாநிலங்கள் என்றால் என்ன? அதற்கும் ஒன்றிய அரசுக்கும் உள்ள உறவுகள் என்ன? என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. நாட்டின் வருங் காலம் எப்படி இருக்க வேண்டும் என்று தீர்மானிக்க முடிந்தது? நமது நாடு எப்படி இருக்க வேண்டும். ஜனநாயக முறைப்படியா? அல்லது சர்வாதிகார ஆட்சி முறைப்படியா? மதச்சார்பற்ற அரசா அல்லது மத சார்புடன் செயல்படும் அரசாங்கமா? என்பதை நாம் முடிவு செய்து கொள்ள முடிந்தது. இதன் அடிப்படையில் விதி முறைகள் வந்தன. உரிமைகள் வந்தன. பொறுப்புகள் வந்தன. ஒன்றிய - மாநில அரசு உறவுகள் ஏற்படுத்தப்பட்டன. ஒவ்வொரு அமைப்பிற்குமான அதிகார எல்லைகள் வரையறுக்கப்பட்டன. அடிப்படை உரிமைகள் வரையறுக் கப்பட்டன. இவை அனைத்தும் சேர்ந்ததுதான் அரசியல் சாசனம். இப்படித்தான் உலகம் முழுவதும் அரசியல் சாசனங்கள் உருவாக் கப்பட்டன. உலகில் பெரும்பாலான நாடுகளில் தங்களுக்கு என்று சொந்தமாக அரசியல் சாசனத்தை ஏற்படுத்தியுள்ளன.
நமது நாட்டில் கம்யூனிஸ்டுகள் அதிகாரத்திற்கு வந்தாலும், பாஜக, அல்லது காங்கிரஸ் வந்தாலும் திமுக வந்தாலும் அரசியல் சாசனத்தின்படி அவர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்றுதான் மக்கள் விரும்புகிறார்கள். இது நமது நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள மக்கள் இதைத்தான் விரும்புகிறார்கள். இந்த பின்னணியில் இந்தியாவில் அரசி யல் சாசனம் எப்படி உருவாக்கப் பட்டது. அப்போதைய சூழல்கள் என்ன என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். நமது நாட்டிற்கு 1947ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தது. 1950ல் உலகி லேயே மிகப்பெரிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டது. இதன்பின்னர் இந்தியா ஒரு குடியரசு நாடு என உலகம் ஏற்றுக் கொண்டது. இந்தியா வில் 1950 ஆண்டு உருவாக்கப்பட்ட அரசியல் சாசனம் அமலுக்கு வந்து 72ஆண்டுகள் ஆகிவிட்டது. நாம் தற்போது 73வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம். அரசியல் சாசனத்தை பற்றி பொதுமக்களிடையே விளக்குவதில் அரசு தோல்வியடைந்து விட்டது. குடிமக்கள் என்ற முறையில் நாமும் அரசியல் சாசனத்தை படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் நமக்கும் இல்லை. இந்த பின்னடைவுக்கு இடையே நாம் 72 ஆண்டுகளை கடந்து விட்டோம். 20 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய சட்ட சேவைகள் ஆணையமும், அரசாங் கமும், அரசியல் சாசனத்தை ஒரு பாடமாக கல்லூரிகளில் கற்பிக்க முடிவு செய்தன. அதிலும் போதிய திருப்தி ஏற்படவில்லை. ஏனென்றால் இயற்பியல் பாடம் நடத்தக்கூடிய ஆசிரியர் அரசியல் சாசனத்தை போதிக்கிறார். உடற்கல்வி ஆசிரியர் அரசியல் சாசனத்தை போதிக்கிறார். கர்நாடகாவில் பல பல்கலைக்கழகம் மற்றும், கல்லூரி களில் இதுதான் நிலை.
மாணவர்களும் அரசியல் சாச னத்தை படித்து அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அல்லா மல் தேர்வில் மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக மட்டும் படிக்கிறார்கள். இவை அனைத்தும் அரசியல் சாசனத்தின் முக்கியத் துவத்தை குறைத்து விட்டன. இது தான் நாடு முழுவதும் உள்ள நிலை. இந்த பின்னணியில் நாம் அரசியல் சாசனத்தை படித்து அறிந்து கொள் வது மிகமிக அவசியம். இதில் பொதுமக்களைவிட வழக்கறி ஞர்களுக்கு கூடுதல் அக்கறை உள்ளது. அப்போதுதான் அரசியல் சாசனத்தை ஏன் பாதுகாக்க வேண்டும் என்று நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். நாம் அரசியல் சாசனத்தை இழந்துவிட்டால் நிலவுடமை சமூகத் திற்கு திரும்பிச் செல்ல வேண்டும். மன்னர்களின் ஆட்சி முறைக்கு செல்ல வேண்டும். எனவே ஜன நாயக முறைப்படியான சமூகத்தில் வாழ வேண்டும் என்று விரும்பும் அனைவரும் அரசியல் சாசனத்தை படித்து அறிந்து அதன் அவசி யத்தை தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் அதை பாது காக்கவேண்டிய அவசியத்தை உணர முடியும்.
அரசியல் சாசனத்தை படிக்க வேண்டும் என்றால் தமிழ் மொழியில் படித்தாலும், ஆங்கிலத்தில் படித் தாலும் வேறு ஒரு மொழியில் படித்தா லும் அல்லது பத்து முறை திரும்ப திரும்ப படித்தாலும் அதை புரிந்து கொள்ள முடியாது. அப்படி என்றால் அதை எப்படி புரிந்து கொள்வது? இந்தியாவை புரிந்து கொண்டால் அரசியல் சாசனத்தையும் புரிந்து கொள்ள முடியும். ஒரு தெலுங்கு கவிஞர் “தேசம் என்றால் மண் மட்டுமல்ல மனமும்தான் மக்களும் தான்’’ என்றார். நமது நாடு நிலத்தால் மட்டும் அமைக்கப்படவில்லை. மக்களால் தான் தேசம் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, மக்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். எனது பள்ளி பருவத்தில் இந்தியா என்றால் வடக்கே இமயமலை, தெற்கே குமரி முனை, கிழக்கில் வங்கக்கடல், மேற்கில் அரபிக்கடல் என்று ஆசிரியர் சொல்லிக் கொடுத்தார். இதற்கு இடைப்பட்ட பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகள் விந்திய மலைகள் உள்ளன. இது தான் இந்தியா என்று எனக்கு சொல்லிக் கொடுத்தது போன்றுதான் உங்களுக்கும் ஆசிரியர் சொல்லிக் கொடுத்திருப்பார். ஆனால் அது அல்ல இந்தியா. இந்தியா என்றால் நாம் அனைவரும்தான். நமது நாட்டில் உள்ள மக்களை நாம் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். அந்த மக்களின் வரலாற்றை நாம் தெரிந்திருக்க வேண்டும். அவர்களின சமூக, அரசியல், கலாச் சார உறவுகளை நாம் அறிந்திருக்க வேண்டும். அவர்களின் மொழியை உப பிரிவுகளை அறிந்து கொண்டா ல்தான் இந்தியாவை பற்றி அறிந்து கொள்ள முடியும்.
இந்திய வரலாற்றை சமானிய மனி தனும் நாமும் எளிதாக அறிந்து கொள்ள அவற்றை பண்டைய இந்திய வரலாறு, இடைக்கால இந்திய வர லாறு, நவீன இந்திய வரலாறு என மூன்றாக பிரித்துக் கொள்வோம். பண்டைய இந்திய வரலாற்றில் சிந்து சமவெளி நாகரீகத்தில் இருந்து 10 ஆம் நூற்றாண்டு வரை மௌரி யர்கள், குப்தர்கள், கனிஷ்கர்கள், ஹர்ஷவர்த்தனர்கள் ஆகியோர் இந்தியாவை ஆண்டனர். இடைக் கால இந்தியாவில் 10 வது நூற்றா ண்டில் இருந்து 18 ஆம் நூற்றாண்டு வரை ஆப்கானியர்கள், துருக்கி யர்கள், கில்ஜிக்கள், சுல்தான்கள், முகலாயர்கள் இந்தியாவை ஆண்ட னர். 18ஆம் நூற்றாண்டு முதல் தற்போது வரை உள்ள காலம் நவீன கால கட்டத்தில் இந்தியாவில் சில பகுதிகளில் போர்ச்சுக்கீசியர்கள், டச்சுக்காரகள், பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சி செய்தனர். பிரிட்டி ஷார் பெரும்பகுதியை ஆண்டனர். 1947ஆம் ஆண்டு பிரிட்டி ஷாரிடமிருந்து இந்தியா விடுதலை பெற்றது. 1950ல் குடியரசு நாடாக அறி விக்கப்பட்டது. இந்தியாவை ஆண்ட இந்த ஆட்சி யாளர்கள் பற்றி நாம் தெரிந்து கொள்ளாவிட்டால் நமது அரசியல் சாசனத்தை புரிந்து கொள்ள முடி யாது. முடியாட்சியை பற்றி அறிந்து கொள்ளாமல் ஜனநாயகத்தை பற்றி எப்படி அறிந்து கொள்ள முடியும். நில வுடமை பற்றி அறிந்து கொள்ளாமல் காலனியாதிக்கத்தை பற்றி அறிந்து கொள்ள முடியாது. நமது வேர்கள் எது? நமது மூதாதையர்கள் யார்? நமது பெற்றோர் யார்? நமது தாத்தா பாட்டி யார் என்பதை நாம் அறிந்து கொள்ளாமல் இந்தியாவை அறிந்து கொள்ள முடியுமா?
எனது முதாதையர்கள் காஞ்சி புரத்தில் வசித்தார்கள். ஒரு காலத்தில் அங்கிருந்து அவர்கள் கர்நாடக மாநி லம் கோலாருக்கு புலம் பெயர்ந்து ள்ளனர். எனது தந்தையின் மூதாதை யர்கள் சிவ பக்தர்கள். கோலார் மாவட் டத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சிவ பக்தர்கள் விரதம் இருப்பார் கள். இங்கே இருக்கிறதா என்று எனக்கு தெரியாது. எனது தந்தை வெங்கடேச பெருமாளை வழி படும் குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்தார். வெங்கடேச பெருமாளை வழி படுவோர் சனிக்கிழமை விரதம் இருப்பார்கள். எனது குடும்பத்தில் திங்கட்கிழமையும், சனிக்கிழமையும் ஒன்று சேர்ந்துள்ளது. எனது தாத்தா பாட்டி இறந்துவிட்டதால் சிறுவயதில் எனது குடும்பத்தில் இருந்து ஒரே பெண் எனது அம்மாதான். எனது அம்மா சுயமரியாதை கொண்டவர். அவர் எங்களது குடும்பத்தை கட்டு ப்பாட்டில் வைத்திருந்தார். அவர் படிப்படியாக தனது திங்கட்கிழமை விரதத்தை சனிக்கிழமைக்கு மாற்றி னார். எனது குடும்பத்தில் உள்ள பெரி யப்பா சித்தப்பா, குழந்தைகள் அனை வரும் திங்கட்கிழமை விரதம் இருப் பார்கள். நான் மட்டும் சனிக்கி ழமை விரதம் இருப்பேன். நான் சித்தூர் மாவட்டத்தில் உள்ள மதனப் பள்ளியை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். பின்னர் பெங்களூருவில் குடியேறி னோம். அங்குதான் நான் வழக்கறி ஞர் தொழில் செய்தேன். எனது மனைவி திங்கட்கிழமையும் விரதம் இருக்கவில்லை, சனிக்கிழமையும் விரதம் இருக்கவில்லை. வியாழக் கிழமை விரதம் இருந்தார். கேட்ட போது மைசூர் பக்கத்தில் ராகவேந்தி ராவை வழிபடுபவர்கள் அந்த நாளுக்கு விரதத்தை மாற்றிக் கொண்டார்கள். ஓராண்டு கழித்து என்னிடம் இந்த விரத நாள் குறித்து எனது மனைவி சண்டையிட்டார். வாக்குவாதம் செய்தார். வியாழக் கிழமை நான் விரதம் இருப்பேன். அன்று என்னால் சமைக்க முடியாது என்றார். அவர் எனது தாயார் விரதம் இருந்த தேதியில் விரதம் இருக்க வில்லை என்பதற்காக நான் அவரி டம் சண்டை போடவில்லை. நாங்கள் அதற்காக மோதிக் கொள்ள வில்லை. மாறாக அன்பு செலுத்தி னோம். அவரது உணர்வை மதித்து நடந்து கொண்டோம். எங்க ளுக்கு குழந்தைகளும் பேரக் குழந் தைகளும் பிறந்தன. விரதம் தொடர்கி றது. சகிப்புத் தன்மையும் தொடர்கி றது. எனது குடும்பத்தில் உள்ள இந்த சகிப்புத் தன்மை ஏன் எனது மாவட் டத்தில் இருக்க முடியாதா? ஏன் எனது மாநிலத்தில் இருக்க முடி யாதா? ஏன் எனது தேசத்தில் இருக்க முடியாதா? ஆனால் எங்கும் இன்று சகிப்பின்மையை காண முடிகிறது.
உங்களது ஆடையை நான் விரும்பவில்லை. உங்களது நிறம் எனக்கு பிடிக்கவில்லை, உங்களது சாதியை மதத்தை, உங்களது உணவை நான் விரும்பவில்லை. ஆனால் ‘ நீ எந்த மதத்தை தேர்வு செய்ய வேண்டும்’. எந்த கட வுளை வழிபட வேண்டும் என்ற உரி மையை அரசியல் சாசனம் நமக்கு வழங்கியிருக்கிறது. அதை பாது காக்கிறது. எனவே, இந்த நிகழ்வு களை அறிந்து கொள்ளாமல் அரசி யல் சாசனத்தை அறிந்து கொள்ள முடியாது. இரண்டாவதாக நமது நாட்டில் சாதிய முறை உள்ளது. எனது சாதி யின் அடிப்படையில்தான் வேலை யில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. எனது சாதியை நான் மாற்றிக் கொள்ள முடியாது. கலப்பு திரும ணத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கி றார்கள். ஏன் சடலத்தை கூட ஒரே இடத்தில் புதைக்க முடியவில்லை. இந்த மதத்திற்கு ஒரு சுடுகாடு, அந்த மதத்திற்கு ஒரு சுடுகாடு இருக்கி றது. இந்த சாதிக்கு இந்த சுடுகாடு, அந்த சாதிக்கு அந்த சுடுகாடு என பிரித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த சாதிய அமைப்பு முறை கல்வி ரீதியா கவும் சமூக ரீதியாகவும் பொருளா தார ரீதியாகவும் கலாச்சார ரீதி யாகவும் மனிதனை சமமாக பார்க்காமல் ‘நீ வேறு நான் வேறு’ என பிரித்து வைத்துள்ளது. இந்திய சமூக கட்டமைப்பில் உயர்சாதிக்காரர்கள் உயர் வேலை வாய்ப்புகளில் அமர்ந்துள்ளனர். அதிக எழுத்தறிவற்ற ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்தவர்கள் அடிமட்ட வேலைகளில் உள்ளனர். அதிக மாக வேலையில்லாதவர்கள், சுகா தார வசதி கிடைக்காதோர் என அதிக மாக இருப்பது ஒடுக்கப்பட்ட சாதி யில்தான். எனவே, இந்திய சூழலில் சாதி என்பது வர்க்கம். எனவே இதை நாம் அறிந்து கொள்ளாமல் அரசியல் சாசனத்தில் உள்ள சமூக நீதியை அறிந்து கொள்ள முடியாது.
நமது நாட்டில் அரசியல் சாசனம் செயல்பாட்டுக்கு வந்து 73 ஆண்டு கள் ஆகிவிட்டது. இந்த காலகட்டத்தில் நாம் சிலவற்றை அடைந்துள்ளோம். சுதந்திரப் போராட்டத்தின் போது நாட்டு மக்களிடையே பல்வேறு கேள்விகள் எழுந்தன. நாடு விடுதலை அடைந்த பின்னர் மகாத்மா காந்தியை சக்கர வர்த்தியாக ஆக்க வேண்டுமா? நேருவை ராஜாவாக ஆக்க வேண்டுமா? என்பன போன்ற கேள்விகள் நாட்டு மக்கள் முன்பு விவாதிக்கப்பட்டன. அதற்கு மக்கள் “எங்களுக்கு மகாராஜாக்கள் வேண்டாம், சக்கரவர்த்திகள் வேண் டாம், நிலவுடமை ஒழிக்கப்பட வேண்டும், அரசியல் அதிகாரம் மக்கள் கைகளுக்கு மாற்றப்பட வேண்டும்’’ என்று பதில் அளித்தனர். அதுதான் மக்கள் ஜனநாயகம். மற்றொரு கேள்வி இந்தியாவில் உள்ள மக்களில் 80 விழுக்காட்டினர் இந்துக்கள். மற்ற 20 விழுக்காட்டினர் இஸ்லாமியர்கள், பௌத்தர்கள் சமணர்கள். சீக்கியர்கள், பார்சிக்கள் என இருந்தனர். இந்து மதத்தை சேர்ந்த சிலர் இந்தியா விடுதலை அடைந்த பின்னர் இந்து அரசு ஏற் படுத்தப்பட வேண்டும் என்று கூறி னார்கள். இதற்கும் மக்கள் பதில் அளி த்தனர். நாம் பல்வேறு நாடுகளில் இருந்து வந்துள்ளோம். பல்வேறு இனங்களில் இருந்து வந்துள்ளோம். பல்வேறு மொழிகளை பேசுகி றோம். ஆனால் அனைவரும் ஒன்றாக இந்த நாட்டில் வாழ்ந்து கொண்டி ருக்கிறோம். இந்த நாட்டின் நாடி நரம்புகளில் இணைந்துள்ளோம். எனவே, இந்து ராஷ்டிரம் இந்தி யாவுக்கு தேவையில்லை என்று சொன்னார்கள். எங்களுக்கு முஸ்லீம் அரசோ அல்லது சீக்கிய அரசோ அல்லது பௌத்த அரசோ தேவை யில்லை. மதச்சார்பற்ற அரசுதான் தேவை என்று சொன்னார்கள்.
3வது கேள்வி இந்தியாவை எப்படி கட்டியெழுப்ப வேண்டும். தகுதி யின் அடிப்படையிலா, அதிகார பலத்தின் அடிப்படையிலா, அல்லது பண பலத்தாலா என்று மக்கள் விவா தித்தனர். இந்தியா பல நூற்றாண்டு களாக சாதிய அடிப்படையில் சமத்துவமின்மை நீடிக்கும் ஒரு நாடு. பல சாதிகளுக்கு அடிப்படை உரிமை கள் மறுக்கப்பட்டுள்ள நாடு. சில ருக்கு கல்வி உரிமை மறுக்கப்ப ட்டுள்ள நாடு. சிலருக்கு நிர்வா கத்தில் பங்கேற்கும் உரிமை மறுக் கப்பட்டுள்ள நாடு. நீதி வழங்கும் துறையில் பங்கேற்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள நாடு. ஒரு சிலரை ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். இப்படி சுதந்தி ரத்திற்கு முன்பு பெரும்பாலான மக்க ளுக்கு பல்வேறு வகைகளில் உரிமை கள் மறுக்கப்பட்டிருந்தன. எனவே, எங்களுக்கு தகுதியின் அடிப்படை யிலான ஆட்சி முறையோ? அதிகார பலம் பொருந்திய ஆட்சி முறையோ? அல்லது பணபலம் பொருந்திய ஆட்சி முறையோ? தேவையில்லை. சமூக நீதியுடன் கூடிய ஆட்சிதான் வேண்டும் என்று மக்கள் சொன்னா ர்கள். தில்லியில் இருந்து கொண்டு இந்தியா முழுவதும் ஆட்சி செலுத்த முடியுமா? என்பது நான்காவது கேள்வி. இதற்கு பதில் ஆட்சி செலுத்த முடியாது. நாட்டின் ஒவ்வொரு பகுதி யிலும் ஒவ்வொரு மொழி பேசப்படு கிறது. அந்தந்த மொழிக்கென்று ஒரு கலாச்சாரம் உள்ளது. பல்வேறு பழக்க வழக்கங்கள் உள்ளன. ஒவ்வொரு மொழி பேசும் மக்க ளுக்கான முன்னுரிமைகள் வேறு, கோரிக்கைகள் வேறு, சவால்களும் வேறுவேறு. எனவேதான் இந்த சூழ லில் தில்லியில் இருந்து இந்தியா முழுவதும் ஆட்சி செய்ய முடியாது என மக்கள் சொன்னார்கள். எனவே, தமிழ் பேசும் மக்கள் வசிக்கும் பகு தியை இந்தியா என்றோ தெலுங்கு மொழி பேசும் பகுதியை இந்தியா என்றோ சொல்ல முடியுமா? என்றால் முடியாது. அப்படி ஒரு நிலை வந்தால் இந்தியா என்ற நாடே இருக்காது. எனவேதான் அன்று நமது முன்னோர்கள் எங்களுக்கு மத்தி யிலும் மாநிலத்திலும் ஆட்சி தேவை என்று சொன்னார்கள். இப்படித்தான் கூட்டாட்சி முறை நமது நாட்டில் உரு வானது. இதனால்தான் நமது அர சியல் சாசனத்தில் கூட்டாட்சி, மதச்சார்பின்மை, ஜனநாயகம், சோசலிசம், சமூக நீதி உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. இதுதான் கடந்த 73 ஆண்டுகளில் அமலாகி யுள்ளது.
அரசியல் சாசனத்தால் என்ன பயன்? அது சாதித்தது என்ன என்பதை நாம் அறிந்து கொள்ளாதவரை அரசியல் சாசனத்தைபாதுகாக்கவேண்டிய அவசியத்தை அறிந்துகொள்ள முடியாது. சுதந்திரத்திற்கு முன்பு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரு ஆட்சியின் கீழ் இருக்கவில்லை. அதை ஒரு ஆட்சியின் கீழ் இந்த அரசியல்சாசனம்தான் கொண்டு வந்தது. தேசிய கொடி, தேசிய சின்னம், தேசிய கீதம் எல்லாம் வந்தது. நாடாளுமன்றம் உரு வாக்கப்பட்டது. நாட்டு மக்கள் அனை வருக்கும் தேவையான சட்டங்கள் இயற்றப்பட்டன. நிலவுடமையை ஒழித்தோம். அங்கு ஜனநாயக முறை அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. நிர்வாகத்துறையில் மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகங்கள், தாலுகா நிர்வாகங்கள், பஞ்சாயத்துக்கள் உருவாக்கப்பட்டன. நீதித்துறை யில் உச்சநீதிமன்றம், உயர்நீதி மன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டன. இந்த ஜனநாயக அமைப்புகள் அனைத்தும் அரசி யல் சாசனத்தால்தான் உருவாக் கப்பட்டன. நாடு சுதந்திரம் அடைந்தபோது நாட்டின் எழுத்தறிவு 18 விழுக்காடு தான். ஆனால் இன்றோ 80 விழுக்காடு. 70 விழுக்காட்டிற்கும் அதி கமான மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருந்தனர். ஆனால் இன்று அது 20விழுக்காடாக குறைக்கப் பட்டுள்ளது. வேளாண் உற்பத்தி யும் பல மடங்கு அதிகரித்து வெளி நாடுகளுக்கு உணவுத்தானி யங்களை ஏற்றுமதி செய்கிறோம். அரசியல் சாசனத்தால் தான் இத்த கைய சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. சாலைகள், மருத்துவமனைகள், மின்சாரம் உள்ளிட்டவை கிடைத் துள்ளது. இருப்பினும் மக்க ளின் வாழ்க்கைத்தரம் உயர்த்தப் படவேண்டும். சுதந்திரத்திற்கு முன்பு தலித்துகள்,பெண்கள்,சிறுபான்மை மக்கள் இரண்டாம் குடிமகன்களாக நடத்தப்பட்டனர். ஆனால் சுதந்தி ரத்திற்கு பின்னர் பழங்குடியினர் ஒருவர் குடியரசுத்தலைவராக அமர முடிகிறது. ஒரு இஸ்லாமியர்குடியரசு துணைத்தலைவராக ஆக முடிகிறது. இது அனைத்தும் அரசியல் சாச னத்தால் விளைந்தவை. அனைத்து மதத்திற்கும் புனித நூல் இருந்தா லும் அவை அனைத்தையும் பாது காக்கும் புனிதநூல் அரசியல் சாசனம் என்பதை மறந்து விடக்கூடாது.
ஆனால் இந்த அரசியல் சாச னத்தை சீர்குலைக்கும் வேலைகள் தற்போது வேகமாக நடைபெற்று வருவது கவலையளிக்கிறது. அரசி யல் சாசனத்தை பாதுகாக்க வேண்டிய நீதிபதிகள் அடுத்த பத வியை எதிர்பார்த்து வேடிக்கை பார்க்கின்றனர். இன்று நாடு முழு வதும் மத அடிப்படை வாதம் தலைதூக்கியுள்ளது. தீவிர வாதம், அடிப்படைவாதம், ஊழல், அரசியலில் கிரிமினல் என பல்வேறு சவால்கள் எழுந்துள்ளன. இதற்கு நாம் கடிவாளம் இடா விட்டால் அரசியல் சாசனத்தை யும் நாட்டையும் பாதுகாக்க முடியாது. இந்த சவால்களை நாம் அனுமதித்தால் அவை ஜனநாய கத்திற்கு முடிவு கட்டிவிடும். முடி யாட்சி முறை மீண்டும் வந்துவிடும். எனவே அரசியல் சாசனத்தை பாது காக்க வேண்டியது எவ்வளவு அவ சியம் என்பதை நாட்டில் தற்போ துள்ள நிலைமைகள் உணர்த்து கின்றன.
தமிழில். அ.விஜயகுமார்