புதிய நாடாளுமன்றம் மே 28ஆம் தேதி திறப்பு விழா என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்ட டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டதிலிருந்து திறப்பு விழா வரை பல விவாதங்கள் உருவாகியுள்ளன. இப்பொழுது திறப்பு விழாவுக்கு ஜனாதிபதி அழைக்கப்படாதது பெரும் விவாதங்களை கிளப்பி யுள்ளது. இதன் மூலம் பிரதமர் மோடி எதை சாதிக்க முனைகிறார்? இந்திய அரசியலில் தான் மட்டுமே அளவில்லாத அதிகாரம் படைத்தவன்; ஜனாதிபதி உட்பட மற்றவர்கள் எல்லாம் எனக்கு கீழேதான் என நிலை நாட்ட முயல்கிறாரா? தான் எவருக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை என எண்ணுகிறாரா? இது போன்ற கேள்விகள் முன்னுக்கு வந்துள்ளன. பாஜகவிலும் சரி; தனி மனித வழிபாட்டை நிராகரிக்கி றோம் என தம்பட்டம் அடித்து கொள்ளும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் சரி. மோடியின் இந்த செயலை கேள்விக் குள்ளாக்காமல் இருப்பது விந்தையாக உள்ளது.
புதிய கட்டடம் தேவையா?
புதிய நாடாளுமன்றம் கட்டடம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்ட பொழுதே இந்த கட்டடம் தேவையா எனும் கேள்வி எழுந்தது. ஏனெனில் ஏற்கெனவே உள்ள கட்டடம் எவ்வித பழுதும் ஏற்படாமல் வலுவாக இருக்கும் பொழுது ஏன் புதிய கட்டடம்? அதுவும் பெரும் செலவில்? இதற்கு பாஜக பொருத்தமான பதிலை சொல்ல முடியவில்லை. நமது நாடாளு மன்றம் கட்டடம் 1927-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அதற்கு பின்னர் தேவையான மாற்றங்களும் புதுப்பித்தலும் மேற்கொள்ளப்பட்டன. எனினும் கட்டடம் அடிப்படை யில் வலுவாக உள்ளது என்பதை எவரும் மறுக்க வில்லை. பல தேசங்களின் நாடாளுமன்ற கட்டடங்கள் கூடுதலாக பழமையானவை. ஆனால் இன்னும் பயன் படுத்தப்பட்டு வருகின்றன.
தேசம் கட்டிய ஆண்டு
எகிப்து 1923
தென்னாப்பிரிக்கா 1884
அர்ஜெண்டினா 1906
கனடா 1859
அமெரிக்கா 1800
ஜப்பான் 1936
பிரான்சு 1615/1728 (இருசபைகள்)
ஜெர்மனி 1904
இத்தாலி 1505/1697 (இருசபைகள்)
ரஷ்யா 1935
ஸ்பெயின் 1814
இங்கிலாந்து 1870
சில தேசங்கள் புதியதாக கட்டியுள்ளன. எனினும் அவை புதிதாக விடுதலை பெற்ற நாடுகள்; அல்லது பழைய கட்டடங்களில் குறைகள் இருந்தால் புதிய கட்ட டங்கள் கட்டப்பட்டுள்ளன. அமெரிக்கா/இங்கிலாந்து/பிரான்சு போன்ற இந்தியாவைவிட பணக்கார நாடுகள் பழைய கட்டடங்களை புதுப்பித்து வருகின்றனரே தவிர புதிய நாடாளுமன்ற கட்டடங்களை உருவாக்க வில்லை என்பது கவனிக்கத்தக்கது. புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்ட ஆகும் செலவு ரூ.1000 கோடி. எனினும் ஒட்டு மொத்த “சென்ட்ரல் விஸ்டா” எனப்படும் இந்த வளாகத்தை கட்ட ரூ.20,000 முதல் 25,000 கோடி செலவாகும் என ஒன்றிய அரசு கூறியுள்ளது. இந்தியா போன்ற வளரும் தேசத்துக்கு இந்த செலவு தேவைதானா எனும் கேள்வி முன் வைக்கப்பட்டது. இதற்கான திருப்திகரமான பதில் அரசிடமிருந்து அல்லது பாஜகவிடமிருந்து இல்லை. இந்த ரூ.20,000 கோடியில்15,000 முன்மாதிரி பள்ளி களை கட்ட இயலும். மிகச்சிறந்த 500 மருத்துவமனை களை கட்ட முடியும். ஆனால் இவ்வளவு பெரிய தொகையை தேவையில்லாமல் அரசு வீணாக்குகி றது. வீண் செலவை குறைக்க எண்ணும் எந்த அரசும் இத்தகைய கட்டடத்தை கட்ட முன்வராது. ஆனால் பாஜக அரசிடமிருந்து அத்தகைய அணுகுமுறையை நாம் எப்படி எதிர்பார்க்க இயலும்?
திறப்பு நாள் சூட்சுமம்
புதிய நாடாளுமன்றம் மே மாதம் 28ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே நாள்தான் இந்துத்துவாவின் பிதாமகர்களில் ஒருவ ரான சாவர்க்கர் பிறந்தார். தற்செயலாக இல்லாமல் திட்டமிட்டே இந்த தேதி தேர்வு செய்யப்பட்டது என்று தான் எண்ண வேண்டியுள்ளது. இந்தியாவில் இந்து- முஸ்லீம் ஒற்றுமையை சீர்குலைத்ததில் சாவர்க்க ருக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. இந்தியா ஒரே தேச மாக இருக்க இயலாது; இந்துக்களும், முஸ்லிம்களும் மற்றும் கிறிஸ்தவர்களும் சேர்ந்து வாழ முடியாது எனும் கருத்தை தீவிரமாக முன்வைத்தார் சாவர்க்கர். 1937ஆம் ஆண்டு அகமதாபாத் இந்துமகாசபை கூட்டத்தில் உரையாற்றிய சாவர்க்கர் கீழ் கண்டவாறு தெளிவாக கூறினார்: “இந்தியாவில் இரண்டு முரண்பட்ட தேசங்கள் அருகருகே வாழ்ந்து கொண்டிருக்கின்றன. (இந்த இரண்டு தேசங்களும்)ஒன்றாக கூடி வாழ்கின்ற நாடாக இந்தியா உள்ளது என்றோ அல்லது இரண்டு தேசங்க ளையும் ஒன்றுபடுத்திவிட முடியும் என்றோ சில சிறு பிள்ளைத்தனமான அரசியல்வாதிகள் எண்ணுகின்ற னர். அது மிகப்பெரிய தவறு ஆகும்”
அவர் மேலும் கூறுகிறார்:
“இந்தியா ஒரே தேசமாக அல்லது ஒற்றைத் தன்மை கொண்ட தேசமாக உள்ளது என்று கருத முடியாது. மாறாக இரண்டு தேசங்கள் இந்தியாவில் உள்ளன. ஒன்று முஸ்லீம்கள் தேசம்; மற்றொன்று இந்துக்கள் தேசம்” இதே போன்ற கருத்தைத்தான் ஜின்னா தலைமை யிலான முஸ்லீம் லீக் முன்வைத்தது. முஸ்லீம் மத வாதமும் இந்து மதவாதமும் முன்வைத்த பிரிவினைக் கருத்துகளின் விளைவாகவே தேசப்பிரிவினை எனும் கொடும் துயரம் நிகழ்ந்தது. கோடிக்கணக்கானவர்கள் இடம் பெயர்ந்தனர். லட்சக்கணக்கானவர்கள் கொல் லப்பட்டனர். இந்த கருத்தாக்கத்தை முன்வைத்த சாவர்க்கரின் பிறந்த நாளன்று புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்படுவது தேச ஒற்றுமைக்காகவும் விடு தலைக்காகவும் உயிர் நீத்த தியாகிகளுக்கு செய்யப் படும் பெரும் அவமானம் ஆகும். ஹிரோஷிமாவில் காந்தி சிலையை திறந்த பிரதமர் அவரை கொல்வதற்கு திட்டம் தீட்டியதாக குற்றம்சாட்டப்பட்ட சாவர்க்கரின் பிறந்த நாளன்று புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைப்பது பாஜகவுக்கு முரண்பாடாக இல் லையா என சிலர் வெகுளித்தனமாகக் கேட்கின்றனர். வெளிநாடுகளில் காந்தி சிலையை திறந்து வைப்பதும் காந்திஜியை புகழ்வதும் நிர்ப்பந்தம் காரணமாக! உண்மையான பக்தி சாவர்க்கரிடம்தான் என்பதே உண்மை!
புறக்கணிக்கப்படும் ஜனாதிபதி
திறப்பு தேதி சர்ச்சைகள் போதாதென்று திறப்பு விழாவுக்கு ஜனாதிபதியை அழைக்காமல் புறக்க ணிப்பதன் மூலம் மேலும் முரண்பாடுகளை ஒன்றிய அரசாங்கம் தூண்டிவிட்டுள்ளது. அடிக்கல் நாட்டு நிகழ்வின் பொழுது அன்றைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைக்கப்படவில்லை. இப்பொழுது முர்மு அழைக்கப்படவில்லை. இதனை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் கடு மையாக விமர்சித்துள்ளன. எனினும் பாஜக அமைச் சர்கள் இதனை நியாயப்படுத்துகின்றனர். அமைச்சர் ஹர்தீப் சிங் பேடி, ஜனாதிபதி நாடாளுமன்ற உறுப்பி னராக இல்லாததால் அவரை அழைக்காமல் இருப்பது தவறு இல்லை என்று கூறியுள்ளார். இதைவிட சிறு பிள்ளைத்தனமான வாதம் எதாவது இருக்க இயலுமா? நாடாளுமன்றம் என்பது என்ன? நமது அரசியல் சட்டத்தின் 74(1) மற்றும் 79ஆவது பிரிவுகள் மிக தெளி வாக குறிப்பிடுகின்றன:
- ஜனாதிபதி
- இரு அவைகள்
ஆகிய இரண்டும் இணைந்ததுதான் நாடாளு மன்றம் என்பதாகும். ஜனாதிபதி இல்லையேல் நாடாளு மன்றம் என்பது தலையில்லாத உடலாகவே இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் முதல் கூட்டம் ஜனாதிபதி உரை யுடன்தான் தொடங்க முடியும். முப்படைகளின் உயர் தளபதியும் ஜனாதிபதிதான் என்பது குறிப்பிடத் தக்கது. இத்தகைய சூழலில் அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாததால் அழைப்பு இல்லை என பாஜக அமைச்சர் கூறுவது அபத்தமானது. சில சங்கிகள் சமூக ஊடகங்களில் ஜனாதிபதி உரையை புறக்கணிப்பவர்களுக்கு இப்பொழுது என்ன ஜனாதிபதி மீது அக்கறை என கேட்கின்றனர். சமூக ஊடக சங்கிகள் எப்பொழுதும் உண்மை பேசுவது இல்லை. பிரச்சனையை திசை திருப்புவதில் அவர்க ளுக்கு இணையாக யாரும் இல்லை. ஜனாதிபதி உரை என்பது அவரது சொந்த உரை அல்ல. அது பிரதமரின் தலைமையிலான அரசாங்கத்தின் உரை. அதனை புறக்கணிப்பது என்பது ஜனாதிபதியை புறக்க ணிப்பது அல்ல; மாறாக பிரதமரின் தலைமையிலான அரசாங்கத்தை - அதன் கொள்கைகளை புறக்க ணிப்பது என பொருள்படும். இது சமூக ஊடக சங்கிக ளுக்கும் தெரியும். எனினும் பிரச்சனையை திசை திருப்ப முனைகின்றனர்.
ஏன் புறக்கணிப்பு?
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கீழ்கண்டவாறு தனது கருத்தை பதிவு செய்துள்ளார்: “மோடி அரசாங்கம் பட்டியலின மக்களின் பிரிவு களிலிருந்து ஜனாதிபதியை உத்தரவாதப்படுத்துவது தேர்தல் காரணங்களுக்காக மட்டுமே என தெரி கிறது” இந்த குற்றச்சாட்டு உண்மையாக இருக்குமானால் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 1978ஆம் ஆண்டு திரு.ஜெகஜீவன்ராம் ராணுவ அமைச்சராக இருந்த பொழுது சம்பூரணானந்த் சிலையை வாரணாசியில் திறந்துவைத்தார். அவர் போன பிறகு அந்த சிலை புனித நீரால் சுத்தகரிக்கப்பட்டது என்ற காரணத்தால் மிகப்பெரும் கண்டனங்கள் எழுந்தன. பூரி ஜெகநாத் கோவிலில் ஜெகஜீவன்ராமின் குடும்பத்துக்கு நீண்ட நாட்களாக அனுமதி மறுக்கப்பட்டது. 2018ஆம் ஆண்டு அன்றைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கும் பூரி ஜெகநாத் கோவிலில் கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டன என பத்திரிகைகள் கண்டனம் தீட்டின. நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவுக்கு ஜனாதிபதி ஏன் அழைக்கப்படவில்லை என்பதை பாஜக அர சாங்கம் தெளிவுபடுத்த வேண்டும். இல்லையேல் இந்த விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க வேண்டும் என முன்வைக்கப்படும் கோரிக்கைகள் நியாயமாகவே இருக்கும்.
மோடியின் செயல்கள் பாஜகவில் எவ்வித கேள்வி க்கும் உட்படுத்தப்படுவது இல்லை எனும் கருத்து நீண்ட நாட்களாகவே உள்ளது. பாஜகவில் உட்கட்சி ஜனநாயகம் சிறிதளவு கூட இல்லை; அல்லது பிரதமரு டன் ஜனாதிபதிக்கு மரியாதை எனும் பிரச்சனையில் கூட முரண்பட எவருக்கும் தைரியம் இல்லை என்ப தையே இந்த நிகழ்வு மூலம் வெளிப்படுகிறது. மறு புறத்தில் தனிமனித வழிபாடு இருக்கக் கூடாது என கூரை ஏறி கூப்பாடு போடும் ஆர்எஸ்எஸ் மவுனம் காப்பது வினோதமானது. ஆனால் இந்த வினோ தத்தின் பின்னால், ஆர்எஸ்எஸ்க்கு மோடி அரசாங்க மும் ஆர்எஸ்எஸ்-சின் வலைப்பின்னல் அமைப்புகள் மோடியின் தலைமையிலான பாஜகவுக்கும் தேவை எனும் ஆழ்ந்த சூட்சுமம் மறைந்துள்ளது. இந்த சூட்சு மத்தின் நோக்கம் இந்து ராஷ்ட்ரா அமைப்பது ஆகும். கர்நாடகா தேர்தல் முடிவுகள் முறையாக முன்னெடுக் கப்படுமானால் சங் பரிவாரத்தின் இந்த நோக்கம் வெற்றி பெறாது என்பது நிச்சயம்!