“வெறுப்புப் பேச்சு, ஒரு குழுவில் இருப் பவரை ஓரங்கட்டுவதற் கான முயற்சி. ஒரு குழு வை சில வெளிப்பாடுக ளின் மூலம் பெரும்பான் மை சமூகத்தின் முன்பு முறையற்றவர்களாக சித்தரிக்க வெறுப்புப் பேச்சு முனைகிறது. அதன் மூலம் சமூகத்தில் அவர்களின் ஏற்பை யும், நிலைபாட்டினையும் சிறுமைப்படுத்து கிறது. எனவே வெறுப்புப் பேச்சு தனிநபர் களுக்கு துயரம் ஏற்படுத்துவதையும் கடந்து, சமூகத்தில் தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்து கிறது. வெறுப்புப் பேச்சு அதற்கு ஆளான சமூகத்தின்மீது பரந்து பட்ட தாக்குதல்களுக்கு காரணமாகிறது. ஒதுக்கி வைத்தல், பாகுபாடு காட்டுதல், தனித்து விடுதல், விரட்டியடித்தல், வன்முறை ஆகியவற்றிற்கு காரணமாகிறது. வெறுப்புப் பேச்சின் விளைவு தீவிரமாகும் போது இன ஒழிப்புக்கு இட்டுச் செல்கிறது. வெறுப்புப் பேச்சுக்கு இலக்கானவர்களை ஜன நாயகச் செயல்பாட்டில் முழுமையாக ஈடுபடு வதிலிருந்து தடுப்பதற்கு காரணமாகிவிடுகிறது.” இது 2014ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் பகுதி. அரசமைப்புச் சட்டத்தின் 51A பிரிவு அடிப்படை கடமைகளை ஒவ்வொரு குடிமக னுக்கும் வரையறுத்து இருக்கிறது. 51A(e), “மதம், மொழி, பிராந்தியம் அல்லது பல்வேறு வேறுபாடுகளை கடந்து இந்திய குடிமக்கள் அனைவரும் நல்லிணக்கத்தையும், சகோ தரத்துவத்தையும் ஊக்குவிக்க வேண்டும்” என்று வலியுறுத்துகிறது.
51 A(f) “நமது பன்மைத்துவ, கலாச்சார த்தின் வளமான பாரம்பரியத்தை மதிப்பதோடு அதை பாதுகாக்க வேண்டும்” என்கிறது. 06.02.2023 அன்று விக்டோரியாகௌரி நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு எதிரான மனுவை விசாரிக்க வேண்டுமென்று கோரி தொடுக்கப்பட்ட வழக்கை ஏற்றுக்கொள் ளும் போது இந்திய தலைமை நீதிபதி மாண்புமிகு டி.ஒய்.சந்திரசூட் “கௌரி அவர்களின் ட்வீட்களில் தெரிவித்துள்ள கருத்துக்கள் அவரது மனநிலை அரசமைப்புச் சட்டத்திற்கு உகந்ததாக இல்லை” என்று தெரிவித்திருந்தார். 06.02.2023 அன்று உச்சநீதிமன்றம், “நீங்கள் வெறுப்புக் குற்றங்களை புறக்கணித்தீர்கள் என்றால் ஒரு நாள் அது உங்களை தாக்கக் கூடும். ஒரு மதச்சார்பற்ற நாட்டில் மதத்தின் அடிப்படையில் குற்றச் செயலில் ஈடுபடு வதற்கான இடமில்லை. இனம், மதம் கடந்து ஒரு மனிதனை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசுக்கு உண்டு” என்று இதை சொல்வதற்கு முன்பாக மாண்பு மிகு நீதியரசர் கே.எம்.ஜோசப் ஜெர்மன் லுத்தரன் பாதிரியார் மார்டின் நீல் மோர் அவர்களின் கீழ்க்கண்ட கவிதையை மேற்கோள் காட்டியிருக்கிறார்.
“முதலில் அவர்கள் சோசலிஸ்டுகளைத் தேடி வந்தனர் நான் பேசவில்லை. ஏனென்றால் நான் சோசலிஸ்ட் அல்ல. பின்னர் அவர்கள் தொழிற்சங்கவாதிகளைத் தேடி வந்தனர். நான் பேசவில்லை. ஏனென்றால் நான் தொழிற்சங்கவாதி அல்ல. பின்னர் அவர்கள் யூதர்களை தேடி வந்தனர். நான் பேசவில்லை. ஏனென்றால் நான் யூதன் இல்லை. பின்னர் அவர்கள் எனக்காக வந்தார்கள். எனக்காகப் பேச யாரும் இல்லை.”
இத்தனையும் அரசமைப்புச் சட்டத்தில் இருந்தும் உச்சநீதிமன்ற தீர்ப்பிலிருந்தும், உச்சநீதிமன்றம் வெறுப்புப் பேச்சுக்கு எதிராக மிக உறுதியாகப் பேசி இருந்தும், விக்டோரியா கௌரி எப்படி உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதி யாக நியமிக்கப்பட்டார் என்ற கேள்வி எந்த ஒரு சாதாரண மனிதனுக்கும் ஏற்படுவது இயல்பு. ஆனால் உச்சநீதிமன்றத்தின் முன்னால் இந்த கேள்வி எழுப்பப்பட்டபோது அதை உச்சநீதிமன்றம் பரிசீலிக்கத் தயார் இல்லை. 27.02.2018-இல் விக்டோரியா கௌரி “தேசிய பாதுகாப்புக்கும், அமைதிக்கும் எது பெரிய அச்சுறுத்தல், ஜிஹாத்தா அல்லது கிறிஸ்தவ மிஷனரிகளா” என்று பேசியிருக் கிறார். அதில் “இஸ்லாம் பச்சை பயங்கர வாதம் என்பதை போல கிறிஸ்தவம் வெள்ளை பயங்கரவாதம்” என்று பேசியிருக்கிறார். “கிறிஸ்தவக் குழுக்கள் இஸ்லாமியக் குழுக்களை விட மிகவும் ஆபத்தானவர்கள்” என்று பேசியிருக்கிறார். “கிறிஸ்தவக் குழுக்கள் செய்யும் மதமாற்றத்தோடு ஒப்பிட்டால் குண்டு வீச்சு அப்படி ஒன்றும் ஆபத்தானதில்லை” என்று பேசியிருக்கிறார். 05.06.2018-இல் “பாரதத்தில் கிறிஸ்தவ மிஷனரிகளின் கலாச்சாரப் படுகொலைகள்” என்ற தலைப்பில் பேசியிருக்கிறார். அதில் “கிறிஸ்தவ பாடல்களுக்கு பரதநாட்டியம் ஆடக் கூடாது” என்று உபதேசம் செய்திருக்கிறார். 01.10.2015-இல் ஆர்.எஸ்.எஸ் பத்திரிகை யான ஆர்கனைசரில் “மதமாற்றம் சமூக நல்லி ணக்கத்தை அழித்துக் கொண்டிருக்கிறது” என்று எழுதியிருக்கிறார்.
இதைவிட வெறுப்புப் பேச்சு ஒன்று இருக்க முடியுமா? ஆனால் உச்சநீதிமன்ற நீதிபதிகள், கௌரி அவர்களுக்கு “தகுதியிருக் கிறதா என்று பார்ப்பதுதான் எங்கள் வேலையே தவிர, நீதிபதியாக இருப்பதற்கு பொருத்த மானவரா என்று பார்ப்பதற்குள் நாங்கள் செல்ல முடியாது” என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள். இது குறித்தான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் போதே அந்தத் தீர்ப்புக்காகக் காத்திருக்காமல் தீர்ப்புக்கு முன்னதாகவே பொறுப்பு தலைமை நீதிபதி, அவருக்கு பதவி பிரமாணம்செய்துவைக்கிறார். நீதித்துறை தன் கடமையிலிருந்து முற்றிலு மாகத் தவறி இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இப்படி, நேற்று வரையிலும் வெறுப்புப் பிரச்சாரத்தை மேற்கொண்ட ஒருவர் நாளை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் படியோ, உச்சநீதிமன்ற வழிகாட்டு தலின் படியோ செயல்படுவார் என்பதற்கு என்ன உத்தரவாதம்? சிறுபான்மை சமூகங்களை சார்ந்த மக்கள் தாங்கள் பாதிக்கப்பட்டால் அந்த வழக்கு இவரிடம் வந்தால் மக்களுக்கு நம்பிக்கை இருக்குமா? நீதி வழங்கினால் மட்டும் போதாது, நீதி வழங்கப்பட்டிருக்கிறது என்ற தோற்றம் வேண்டும் என்று நீதிமன்றங்கள் சொல்லிவிட்டு அப்பட்டமாக வெறுப்புப் பேச்சை அத னடிப்படையில் மத மோதல்களை தூண்டுகிற ஒருவரை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி யேற்கச் செய்திருப்பது நீதிமன்றத்தின் மீது சாதாரண மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை யைத் தகர்ப்பதாகும். சாதாரண மக்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றங்கள் என்கிற கருத்தின் மீதான ஈவு இரக்கமற்ற தாக்குதல் இந்த நியமனம்.
எனவே நீதிமன்றம் இந்த பிரச்சனையில் தனது தீர்ப்புக்கு எதிராகவும் மக்களின் பாதுகாப்பை பற்றிக் கவலைப்படாமலும் இந்த தீர்ப்பை வழங்கி இருக்கிறது என்று கருத இடம் உண்டு. ஒருபக்கம் ஒன்றிய அரசு, நீதித்துறைக்குள் அத்துமீறி தலையிடுவதை எதிர்த்துப் போராடி கொண்டிருப்பதை நிச்சயமாகப் பாராட்டலாம். ஆனால் சக நீதிபதிகள் பாதிக்கப்படும் போது கூட நீதிமன்றம் வாய்மூடி மௌனியாக இருப்பது பலமுறை நடந்திருக்கிறது. 2018-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நீதிபதி கே.எம்.ஜோசப், கொலீஜியத்தால் உச்சநீதி மன்ற நீதிபதி பொறுப்பிற்கு பரிந்துரைக்கப் பட்டார். பத்திரிகைச் செய்திகளின் படி இது ஒரு ஏகமனதான பரிந்துரை. ஆனால் ஒன்றிய அரசாங்கம் இதை ஏற்க மறுத்து அந்த பரிந்து ரையை திருப்பி அனுப்பியது. மீண்டும் கொலீஜியம் அவரது பெயரை பரிந்துரைத்த போது ஒன்றிய அரசு அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் அவருடைய சீனியாரிட்டியை கணக்கில் கொள்ளாமல் கீழிறக்கி நியமனம் செய்தது. அவருடைய இயல்பான சீனியாரிட்டி அடிப்படையில் நிய மிக்கப்பட்டிருந்தால் அவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இரண்டு ஆண்டுகள் 8 மாதங்கள் பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கும். ஒன்றிய அரசு அதை நிராகரித்தபோது கொலீஜியம் அப்படியே ஏற்றுக் கொண்டது. இதேபோன்று நீதிபதி எஸ்.முரளீதரன் தில்லியில் இஸ்லாமியர்கள் மீது தொடுக்கப் பட்ட வன்முறைகளை, சில அதிகாரிகள் தாக்கு தல் நடந்தபோது அதை தடுக்க முற்படாததை யும், காயம்பட்டவர்களை மருத்துவ மனைக்கு அனுப்புவதை தடுப்பவர்களையும் கடுமையாகக் கண்டித்தார். உடனடியாக இரு வாரங்களுக்குள்ளேயே அவர் சண்டிகர் நீதிமன்றத்திற்கும், பின்னர் புவனேஸ்வருக் கும் மாற்றப்பட்டார். கொலீஜியம் அவரை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி யாக பரிந்துரைத்த பிறகும் ஒன்றிய அரசு ஏற்க மறுத்துவிட்டது. இரண்டு முறை அதை வலி யுறுத்திய கொலீஜியம் தற்போது ஒன்றிய அரசுக்கு பணிந்து மூன்றாவது பட்டியலில் அதை கைவிட்டுவிட்டது.
இதேபோன்று பில்கிஸ்பானு பாலியல் வன்கொடுமை மற்றும் 14 பேர் கொல்லப்பட்ட வழக்கில் பாலியல் குற்றவாளிகளுக்கும், கொலையாளிகளுக்கும் துணைபோன காவல்துறையினர் மற்றும் மருத்துவருக்கு தண்டனை விதித்த மகாராஷ்டிரா நீதிமன்ற நீதிபதி தஹில்ரமானி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பழைய கணக்கை தீர்ப்பதற்காக அவர் வட கிழக்கு மாநிலங்களுக்கு மாற்றப்பட்டார். உள்நோக்கத்தோடு அவர்மீது சில குற்றச் சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன. இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்று இப்போது சிபிஐ கூறியிருக்கிறது. ஒருபக்கம் ஆள்பவருக்கு எதிராக நியாய மாக தீர்ப்பு வழங்குபவரை பாதுகாக்க முடியாத நிலையில் உச்சநீதிமன்றம் இருக் கிறது. இன்னொரு பக்கம் வெறுப்புப் பேச்சு, அதன் காரணமாக கடுமையான வன்முறை கள், சமூகப் பதற்றம், கொலைகள், குற்றச் செயல்கள் போன்றவை நடந்து கொண்டி ருக்கும் போது அந்த வெறுப்புப் பேச்சுகளுக்கு கொஞ்சமும் குறையாத தீவிரத்தோடு பேசிய ஒருவர் உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டிருப்பது நீதித்துறையின் நம்பகத் தன்மையை பாதித்திருக்கிறது. கண்ணகி கூட மன்னனிடம் தேராமன்னா என்று ஒற்றைச் சிலம்புடன் கேள்வி கேட்ட போது “யானோ அரசன், யானே கள்வன்” என்று நீதிமறுத்ததற்காக தன்னை மாய்த்துக் கொண்ட மன்னனை பெற்றிருந்தாள். ஆனால் இந்திய குடிமக்கள் வெறுப்புப் பேச்சை அதன்மூலம் உச்சநீதிமன்றம் சொல்லி யிருக்கும் குற்றச்செயலுக்கு காரணமாக வாய்ப்பிருக்கும், பேச்சுக்களை பேசிய விக்டோரியா கௌரியை நீதிபதியாக நியமித்த தன் மூலம் கண்ணகிக்கிருந்த வாய்ப்புக்கூட அற்றவர்களாக்கப்பட்டிருக்கிறார்கள். ஆம். நீங்கள் தவறிழைத்து விட்டீர்கள், மி லார்ட்.