articles

img

ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் 111 மரங்கள் - சிதம்பரம் இரவிச்சந்திரன்

மனிதன் உட்படவுள்ள சகலஜீவிகளுக்கும் ஆதாரம் இயற்கையே. இதை உணர்ந்த பின்னரும் அலட்சியப்படுத்தும் சில மனிதர்களின் பேராசை பூமியை அரித்துத் தின்றுகொண்டிருக்கிறது. என்றாலும் இயற்கையைப் பாதுகாக்கும் சில மனிதர்கள், அமைப்புகள் உள்ளன. இவ்வகையைச் சேர்ந்தவர்களே தெற்கு ராஜஸ்தானில் ராஜ்சமத் மாவட்டத்தில் பிபிலாந்திரி கிராம மக்கள்.

மரங்களுக்கு ஒரு திருவிழா
மரங்களை நேசிக்கும் இக்கிராம வாசிகளின் வருடாந்திர சடங்குகளில் ஒன்று இத்திருவிழா. இம்முறை இத் திருவிழாவில் இந்தியா முழுவதிலும் இருந்து 14 மாநிலங்களின் பிரதிநிதி கள் பங்கேற்றனர். இதில் கேரளாவைச் சேர்ந்த சூழல் செயல்பாட்டாளரும் மரங்களுக்கு சிகிச்சை அளிப்பவரு மான கே பினு கலந்துகொண்டார். 2021ல் பத்மஸ்ரீ விருது வழங்கி  கௌரவிக்கப்பட்ட சமூக சீர்திருத்த வாதி மற்றும் சூழல் செயல்பாட்டாளர் ஷியாம் சுந்தர் பாலிவால் என்பவரே  இங்கு இத்திருவிழாவை தொடங்கி னார். இதன் மூலமே இந்த கிராமம் இன்று உலகப் புகழ்பெற்றுள்ளது. பெண் பிறந்தால் கொண்டாட்டம் இங்கு ஒரு பென் குழந்தை பிறந்தால் அது கிராமவாசிகளுக்கு கொண்டாட்டம். இந்தியாவில் பல  இடங்களில் பெண் குழந்தை பிறப்பதே  இப்போதும் ஒரு துயரமாகக் கருதப்படு கிறது. இந்த கிராமம் பெண் பிறந்தால்  அதை ஒரு விழாவாக கொண்டாடு கிறது. இந்த கிராமத்தில் 8 வார்டு களில் பெண் குழந்தைகள் பிறந்தால் 111 மரக்கன்றுகள் நடவேண்டும்.

கதை சொல்லும் காற்று

நட்டால் மட்டும் போதாது. குழந்தை  வளர்வதை அனுசரித்து பெற்றோர் கன்றுகளை பாதுகாத்து பராமரித்து வளர்க்கவேண்டும். கடந்த 15 ஆண்டு களாக இந்த விழா முடங்காமல் நடக்கி றது. இதுவரை 2.50,000க்கும் அதிக மான மரங்கள் கிராமம் முழுவதும் வளர்ந்து இப்போது தலை நிமிர்ந்து நிற்கின்றன. 2006ல் துவக்கம் இங்கு வீசும் ஒவ்வொரு காற்றும் ஒவ்வொரு பெண் குழந்தையின் பிறப்பின் கதையை சொல்கிறது. 2006ல் ஷியாம் சுந்தர் பாலிவாலின் பத்து வயது மகள் இறந்தபிறகு அவர் கிராமத்தில் இந்த விழாவை நடைமுறைப்படுத்தத் தொடங்கினார். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் இந்த விழா  நடக்கிறது.

பாசக் கயிறு

அன்று கிராமத்தில் பெண் குழந்தை கள் எல்லோரும் மர பூசைக்காக ஒன்று கூடுகின்றனர். தாங்கள் பிறந்தபோது தாய் தந்தை நட்ட மரங்களில் சகோத ரத்துவத்தின் அடையாளமாக ராக்கி  கயிற்றைக் கட்டுகின்றனர். அவர்கள்  இந்த மரங்களை தங்கள் சகோதரர் களாகவே காண்கின்றனர். இதனால்  ரக்ஷா பந்தன் ஒவ்வொரு ஆண்டும்  மிகப் புனிதமாக இங்கு நடைபெறு கிறது. 2022ல் 2022ல் எட்டு வார்டுகளில் 20 பெண்  குழந்தைகள் பிறந்தனர். பெண் குழந்தைகளுடன் தாய் தந்தையர் விழாவிற்கு வருகின்றனர். தாய்மார்  பெண் குழந்தைகளை கூடையில் வைத்து தலையில் சுமந்து கொண்ட வுடன் சடங்குகள் நிறைவுபெறு கின்றன. மரணம் வரை மரங்களைக் காப்பாற்றுவோம் என்ற சபதத்துடன் இவர்கள் விழாவில் இருந்து வீடு திரும்புகின்றனர். ஆரவல்லிக் குன்றுகளால் சுற்றப்பட்ட கிராமம் ஊர் முழுவதும் திருவிழாவிற்காக மரங்கள் அலங்கரிக்கப்படுகின்றன இந்த கிராமம் 250 கோடி ஆண்டுகள் பழமையான ஆரவல்லிக் குன்றுகளால் சூழப்பட்டுள்ளது. ஆடு வளர்ப்பே கிராம மக்களின் முக்கியத்தொழில். இப்பகுதியிலேயே இந்தியாவில் மிக அதிகமாக வெண்நிற பளிங்குக் கற்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன.

மலையாகக் குவிந்த கழிவுகள்

கட்டுப்பாடு இல்லாத இத்தொழில் மூலம் ஆரவல்லிக் குன்றுகள் நாச மாகிக்கொண்டிருக்கின்றன. கற்கள் வெட்டியெடுக்கப்படும்போது உண்டான கழிவுகள் குவிக்கப்பட்ட தற்கு எதிராக கிராமவாசிகள் போராட் டம் நடத்தினர். ஆனால் இதை அடக்க  குத்தகை முதலாளிகளுக்கு அதிக காலம் பிடிக்கவில்லை. பாழ்நிலம் பசுமை வனமாக மாறிய கதை போராட்டம் அடக்கி ஒடுக்கப்பட்டா லும் கழிவுகள் குவிந்து மலை போல் கிடப்பது அகற்றப்படவேண்டும் என்று  மக்கள் கோரினர். அதுவும் நடக்கா மல் போனபோது கிராமவாசிகள் மேற்கொண்ட செயல்களே இன்று  அவர்களை புகழ்பெறச் செய்துள்ளது.  முதலில் மக்கள் குன்று போல குவிந்து கிடந்த குப்பைகளை நீக்கினர். பெண் வனம் இங்கு குழிகள் தோண்டி மரக்கன்று கள் நடப்பட்டன. ஒவ்வொரு பெண்  குழந்தை பிறக்கும் போதும் ஒவ்வொரு வரும் 111 மரக்கன்றுகளை நட அவர்கள் இந்த இடத்தைப் பயன் படுத்தினர். இவ்வாறு ஆண்டுதோறும் மரங்கள் நட்டு வளர்க்கப்பட்டதால் இந்த இடம் முழுவதும் இப்போது வனமாக மாறியுள்ளது.

சூழலிற்கு நட்புடைய  கல் வெட்டும் குவாரி

14 சதுர கிலோமீட்டர் பரப்பில் அமைந்துள்ள இந்த இடம் இப்போது  பெண் வனமாக படர்ந்து பந்தலிட்டு நிற்கிறது. சூழலிற்கு நட்புடைய கல்  வெட்டி எடுக்கப்படும் இடம் என்று இப்போது அதிகாரிகள் இந்த வனத்தைப் பாராட்டுகின்றனர். ஆனால் இந்த சூழல் செயல்களுக்குப் பின்னால் குத்தகை குவாரி கம்பெனி கள் இல்லை. ஏழை கிராமவாசிகளெ உள்ளனர். உலகிற்கே உன்னத எடுத்துக்காட்டு சூழல் பாதுகாப்பிற்காக செயல்  படும் இந்த பெண் ஒற்றுமை உல கிற்கே ஒரு உன்னத எடுத்துக்காட்டு. பெண் குழந்தைகள் போலவே இந்த  மரங்களும் வளரட்டும். வாழ்த்துவோம்.