articles

img

அறிவைப் பெருக்கு - K. Shanmugachidambaram

அறிவைப் பெருக்கு!

நல்ல உள்ளம் கொண்டே நாமும்     நன்மை செய்ய வேண்டும்! - என்றும் அல்லல் இன்றி வாழ்வ தற்கே     அறிவைப் பெருக்க வேண்டும்!  இனிமை யாக வாழ்க்கை வாழ     இயற்கை காக்க வேண்டும் -உயர்ந்த மனித நேயும் கொண்டே நாமும்     மகிழ்ச்சி காண வேண்டும்!  இலக்கை நோக்கிப் பயணம் செய்ய     இன்றே முயல வேண்டும்! - நாம் கலக்கம் இன்றிக் கால மெல்லாம்     கல்வி கற்க வேண்டும்!  ஒளியாய் எங்கும் விளங்கு தற்கே    உண்மை உரைக்க வேண்டும் -எதையும் தெளிவாய் அறிந்துப் புரிந்து கொள்ளத்     தீர ஆய்தல் வேண்டும்!  மாசும் இல்லா மனமும் கொண்டு     மகிழ்ந்து பேச வேண்டும்! - பிறர் ஏசும் படியாய் நடந்தி டாமல்     எதையும் செய்தல் வேண்டும்!