இயற்கையைப் பாரீர் - பொன்னையன்
கல்வி கற்றிடும் கண்ணே வாராய் -இயற்கைக் காட்டி வியந்திடும் அழகினைப் பாராய்! உள்ளம் கவர்ந்திடும் கதிரவன் தோற்றம் -வானில் ஒளியினை வேறெது பாரெனக் காட்டும்? வானில் விரிந்திடும் கருமுகில் கூட்டம் -அது மனத்தில் பதிந்திடும் ஓவியம் காட்டும்! புரண்டே அலைந்திடும். கடலின் காட்சி -கண்ணில் புகுந்தே நெஞ்சில் நிறைந்திடும் மாட்சி மிரண்டே நண்டுகள் ஓடிடும் கூடி -கரு விழிகள் கண்டவை வாழ்த்திடும் பாடி!
