விடுதலைப் போராட் டத்தை சோஷலிசக் கருத்துக்களின் பால் ஆகர்ஷிக்கப்பட்ட இளைஞர்கள் புரட்சிகரமானதாக மாற்றி அமைத்தனர். தேசம் முழுவதும் உருவான புரட்சிகர அலை மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்கி யது. அத்தகைய போரில் மாபெ ரும் தியாகம் செய்த பகத்சிங்கும் அவரது தோழர்களும் தூக்கு மேடைக்குச் செல்லும் போது இந்த பாடலை பாடிக் கொண்டே சென்றனர்.
“அன்பு மறையாதே
அன்பு மறையாதே தாய்நாட்டின் மீது கொண்ட அன்பு மறையாதே
எங்களை கைது செய்தாலும் சிறையில் அடைத்தாலும் தூக்கிலிட்டாலும்
அன்பு மறையாதே...
எங்களைத் தூக்கிலிட்டு
சிதையில் வைத்து எரித்தாலும்
எங்கள் எலும்புகள்
இன்குலாப் என்று வெடிக்கும்...”
தேச விடுதலைப் போராட்டத் தில் பங்கு பெற்ற பகத்சிங்கும் அவ ரது தோழர்களும் தூக்கிலிடப் பட்ட செய்தி நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை உருவாக்கியது. பகத்சிங் தூக்கிலிடப்பட்ட தைக் கண்டித்து மதுரையில் இளை ஞர்கள் மாபெரும் போராட்டத்தை - பேரணியை மேலமாசி வீதி வடக்கு மாசி வீதியில் நடத்தினர் இதில் தியாகி ஐ.மாயாண்டி பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தேச விடுதலைப் போராட்டத் தின் களமாக மதுரை மாறியி ருந்தது.
காசியில் சைமன் கமிஷனே, திரும்பிப் போ என பகத்சிங்கின் நவ ஜவான் பாரத் சபாவில் உறுப் பினராக இருந்த பி.ராமமூர்த்தி தலைமையில் மிகப் பெரிய கருப் புக் கொடியோடு படகில்சென்று எதிர்ப்பைத் தெரிவித்தனர். மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர் தலைவராக இருந்த சங்கரய்யாவின் தலைமையில் மாபெரும் மாணவர் எழுச்சி தீவிர மாக நடைபெற்ற காலமாக மாறி யது. மாபெரும் தேசபக்தர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மதுரை வருகை இப்போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தியது. விஸ்வநாததாசுடன் மேடையே றிப் பாடி தோழர்.ஜானகி அம்மாள் சுதந்திர போராட்டத்தை இன்னும் கொழுந்து விட்டு எரியச் செய்து கொண்டிருந்தார். மதுரையில் உருவாகியிருந்த ஆலைத் தொழிலாளி வர்க்க மும், விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் ஒன்றிணை ந்து தேச விடுதலைக்கு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ண முமாக போராட்டத் தீயை வளர்த் தெடுத்தனர்.
அன்றைய தினம் 27 தொழிற் சங்கங்களுக்கு தலைவராக இருந்த காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் தலைவரான முத்துராம லிங்க தேவர் விடுதலைப் போ ராட்டத்திலும் ஆலய நுழைவு போன்ற சமூக விடுதலைப் போராட்டத்திற்கான களத்திலும் கம்யூனிஸ்ட்களுடன் இணைந்து நின்றார். விடுதலைப் போராட்டத்தில் மணவாளன், பிரச்சாரங்கள் நிதி வசூல் - சொற்பொழிவுகள் - பாட்டுக்களை இயற்றுவது - பாடு வது என அனைத்திலும் முன்ன ணியில் நின்றார். கம்யூனிஸ்ட் கட்சி வேலைகளில் தீவிரமாக ஈடு பட்டிருந்தார் மாரி, சமத்துவ வாலி பர் சங்கத்தில் பறந்துகொண்டி ருந்த செங்கொடியை அறுத் தெரிய சதிகாரர்கள் வந்தபோது புலி போல் பாய்ந்து விரட்டினார்.
இத்தகைய மகத்தான கம்யூனிஸ்டுகளின் தியாகத்தால் பெற்ற விடுதலைக்கு முன்னும் பின்னும் கம்யூனிஸ்டுகள் ஆளும் வர்க்க ஆட்சியாளர்களால் வேட் டையாடப்பட்டனர். விடுதலைக் குப் பிறகு பாலு மீது போடப்பட்ட பொய் வழக்கில் தூக்கு தண்டனை தரப்பட்டது.
தூக்கு ஏற நடந்து போகும் போது தியாகி மணவாளன் எழுதிய,
‘விடுதலைப் போரில் வீழ்ந்த மலரே தோழா தோழா
வீரர் உமக்கே
வணக்கம் வணக்கம்
காரிருள் சூழ்ந்த
காரிய வானத்தில்
தாரகை போல
ஜொலித்து நிற்கின்றீர் போரிடும் எமக்கு
புத்துயிர் தாரீர் தோழா’
-என சக தோழர்கள் பாடினார்கள்.
இத்தகைய வீரப் பாரம்பரி யத்தின் தொடர்ச்சியாக எத்தனை யோ தியாகிகளை மாமதுரை ஈந்துள்ளது. பொதும்பு பொன்னையா, ஐ.வி.சுப்பையா, பூந்தோட்டம் சுப்பையா, ரயில்வே ராமசாமி வீராங்கனை லீலாவதி,வீராயி, பா ப்பாத்தி, சோமசுந்தரம், செம்பு லிங்கம், குட்டி ஜெயபிரகாஷ், மாடக்குளம் கருப்பு என தியாகப் பாரம்பரியம் தொடர்கிறது. தியாகிகள் சிந்திய ரத்தத்தால் வளர்ந்த செங்கொடி இயக்கத்தின் 23 வது மாநில மாநாடு மதுரை யில் நடைபெற உள்ளது. மகத்தான போராட்ட வரலா றும்,தியாகப் பாரம்பரியமும் அடித் தளமாகக் கொண்ட மதுரையிலி ருந்து எத்தனை கடும் நெருக்கடி யிலும் இன்னும் வீரியமாக உயரப் பறக்கப் போவது செங்கொடிதான்.