விலைவாசி உயர்வு - வேலையின்மை
மோடி அரசின் நாசகர கொள்கைகளை
அம்பலப்படுத்தி செப்டம்பர் 1 - 7
சிபிஐ(எம்) பிரச்சார இயக்கம்
- சிறப்புக் கட்டுரை -
பெட்ரோல்- டீசல் மீதான வரிகளை குறைக்க வேண்டும்; பொது விநியோக முறையை பலப்படுத்த வேண்டும்; மாநிலங்களுக்கு மத்திய உணவுக் கிடங்குகளில் குவிந்து கிடக்கும் அரிசி, கோதுமையை மலிவு விலையில் வழங்க வேண்டும்; ஒன்றிய பட்ஜெட்டில் உணவு, உரம் போன்றவற்றிற்கான மானியம் அதிகரிக்கப்பட வேண்டும்; விவசாயம், சிறு,குறு தொழில்களை பாதுகாக்க சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்; உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய மருந்துகள் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செப் டம்பர் 7அன்று நடத்தப் போகும் மறியல் எதற்கு? இந்திய நாட்டு அரசியலின் மையப் புள்ளியாக மக்கள் பிரச்சனை மாற வேண்டும் என்பதற்காகத்தான். அரசியலை, பிழைப்புக்கான வழி எனப் பலரும் பார்க்கும் போது, சமத்துவ சமதர்ம சமூகம் அமைய வேண்டும் என அரசியலில் புரட்சிகர பாதையை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தேர்வு செய்திருக்கிறது. கொடி பிடித்தால் கோஷம் போட்டால் மாறிவிடுமா என்கிற கேள்வி வரத்தான் செய்கிறது. ஒவ்வொரு போராட்டமும் மாற்றத்திற்கான நகர்வுதான் என்பதை வரலாறு மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது.
கொள்கை சம்பந்தப்பட்டது
‘மோடி அரசே, வேலை கொடு; விலையை குறை!’ என்று கேட்பது மக்கள் நலனுக்கானதே. இது தானாக நடப்பது அல்லது தலைவிதி சம்பந்தப் பட்டது என்கிற கட்டுக்கதைகளை எல்லாம் புறந்தள்ளி, அன்றாட விலைவாசி உயர்வு உள்ளிட்ட ஒவ்வொரு மக்கள் பிரச்சனையும் உருவாவதும் கொள்கை சம்பந்தப் பட்டது, தீர்வதும் கொள்கை சம்பந்தப்பட்டது என்பதை உணர்த்துவதற்கான போராட்டம் இது. முதல் தேதி என்கிற ஒரு பழைய திரைப்படத்தில் ‘ஒண்ணுல இருந்து 20 வரைக்கும் கொண்டாட்டம்; 21இல் இருந்து 30 வரைக்கும் திண்டாட்டம்’ எனப் பாடல் ஒன்று வரும். மாதச் சம்பளம் மாதம் முழுமைக் கும் போதவில்லை, 20 நாளைக்கு தான் கட்டுபடியா கிறது என்பது இதன் பொருள். ஆனால் இன்றைக்கு பெருவாரியான மக்கள் பெறுகிற ஊதியம் அல்லது கூலி ஒரு வாரம் கூட தாக்குப் பிடிப்பது கிடையாது. ‘கையில வாங்கினேன் பையில போடல, காசு போன இடம் தெரியல’ என்கிற நிலை தான் உள்ளது. பெட்ரோல்- டீசல் மீதான வரிகளை குறைக்க வேண்டும்; பொது விநியோக முறையை பலப்படுத்த வேண்டும்; மாநிலங்களுக்கு மத்திய உணவுக் கிடங்குகளில் குவிந்து கிடக்கும் அரிசி, கோது மையை மலிவு விலையில் வழங்க வேண்டும்; ஒன்றிய பட்ஜெட்டில் உணவு, உரம் போன்றவற்றிற்கான மானியம் அதிகரிக்கப்பட வேண்டும்; விவசாயம், சிறு,குறு தொழில்களை பாதுகாக்க சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்; உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய மருந்துகள் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என்பன போன்ற பல தீர்வுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்து வருகிறது.
வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், இருக்கிற வேலைகள் சமூகப் பாதுகாப்புடன் கூடிய வேலைக ளாக இருக்க வேண்டும் என்பதற்கும் கூட பல கோ ரிக்கைகள் உண்டு. தமிழகத்தில் 12 மாவட்டங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய கிராமப்புற ஆய்வில், ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் சராசரியாக 40-42 நாட்கள் தான் கடந்த ஆண்டில் வேலை கிடைத்தது வெளிவந்துள்ளது. தற்போது பட்ஜெட்டில் 33 சதவீதம் இத்திட்டத்திற்கு ஒதுக்கீடு வெட்டப்பட்டு இருப்பதால் இந்த ஆண்டு 25 நாள் கிடைத்தாலே ஆச்சரியம் தான். பெரும்பாலும் பெண்கள் பணியாற்றும் இத் திட்டம் வீணாய் போனால் கிராமப்புற பெண்கள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள். கொரோனா தடுப்பூசி திட்டம் வெற்றியடைந்ததற்கு மோடி வெட்கமில்லாமல் ஆஷா அங்கன்வாடி திட்ட பணியாளர்களுக்கு நன்றி சொல்கிறார். ஆனால் அவர்களுக்கு சொற்ப சம்பளம் தான் கிடைக்கிறது என்பது பற்றி மூச்சுவிடவில்லை. 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உடை அணியும் மோடிக்கும், மக்களை திசை திருப்ப நடை பயணம் செல்லும் அண்ணாமலைக்கும் இத்தகைய பிரச்சனை கள் நினைவுக்கு வராது. அதானியும், அம்பானியும் வாழ்ந்தாலே போதும், இவர்களுக்கு வரம் கிடைத்தாற் போல ஆகிவிடும்.
தகர்க்கப்படும் பிம்பம்
பிரதமர், தான் ஏதோ நெருப்பு போலவும் ஊழல் தன்னை நெருங்காது என்பது போலவும் ஒரு பிம்பத்தை தொடர்ந்து கட்டமைத்து வந்தார். நானும் ஊழல் செய்ய மாட்டேன், பிறரையும் செய்ய விட மாட்டேன் என பெருமை பேசினார். ஆனால் தற்போது வந்துள்ள சி ஏ ஜி அறிக்கை அந்த பிம்பத்தை தூள் தூளாக்கிவிட்டது. ஒன்றிய அரசின் பல்வேறு துறைக ளில் 7.5 லட்சம் கோடி ரூபாய் ஊழலாம். அதானியின் பங்குச் சந்தை மோசடியை அம்பலப்படுத்தும் இரண்டாவது அறிக்கையும் (OCCRP) வெளிவந்து விட்டது. இம்மோசடி குறித்த விவரங்கள் 2014ஆம் ஆண்டிலேயே வந்தும் கூட செபி (பங்குச்சந்தை ஒழுங்காற்று அமைப்பு) கண்டு கொள்ளவில்லையாம். மத்திய முகமைகள் எல்லாம் மோடியின் நண்பர்கள் மீது என்றைக்குமே பாய்வது கிடையாது. அது மட்டு மல்ல, அன்று செபியின் தலைமைப் பொறுப்பில் இருந்த உபேந்திர குமார் சின்ஹா, தற்போது அதானி வாங்கிய என்டிடிவியில் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார். ஆனால் முறையான விசாரணைக்கு மோடி அரசாங்கம் முன் வர மறுக்கிறது. இது போதா தென்று கிரீஸ் நாட்டிற்குச் சென்று அங்குள்ள துறை முகங்களில் இந்தியா முதலீடு செய்ய விரும்புகிறது என அதானியின் குரலாக மோடி பேசிவிட்டு வந்தி ருக்கிறார். அதேபோல் வேதாந்தா நிறுவனர் அனில் அகர்வால், கொரோனா பெருந்தொற்று காலத்தை தனது தொழில் விரிவாக்க வாய்ப்பாக மாற்றுவதற்கு எடுத்த முயற்சியையும் OCCRP ஆய்வு நிறுவனம் அம்பலப்படுத்தி உள்ளது. எண்ணெய் மற்றும் சுரங்கத் தொழிலில், இருக்கும் நிலையிலிருந்து மேலும் 50 சதவீதம் வரை விரிவாக்கம் செய்ய அனு மதி பெற வேண்டிய அவசியம் இல்லை என விதிக ளில் மாற்றம் கோரி சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு அனில் அகர்வால் கடிதம் எழுதியது தற்போது வெளி வந்துள்ளது. அவர் கேட்டது 2022ல் கிடைத்தும் விட்டது. இதற்கெல்லாம் பிரதமர் என்ன பதில் சொல்லப் போகிறார்?
வெறுப்பு அரசியலின் விலை
சிறுபான்மை மக்களுக்கு எதிராக குறிப்பாக இஸ்லாமியர்கள் மீது திட்டமிட்ட தாக்குதல் மோடி யின் ஆட்சியில் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக இத்தகைய தாக்குதல் கல்வி நிலையங்களில் வெவ்வேறு வடிவங்களில் நடத்தப்படுகிறது. உத்த ரப்பிரதேசம் முசாபர் நகர் மாவட்ட பப்ளிக் ஸ்கூலில் இஸ்லாமிய சிறுவன் அல்டமாஷுக்கு நடந்த கொடுமை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மறுபக்கம் இஸ்லா மியர்கள் நடத்தும் சிறு வியாபாரம் தாக்கப்பட்டு வாழ்வாதாரம் இழக்கும் நிலை ஏற்படுத்தப்படுகிறது. சங்பரிவார ரவுடிகள் ஒரு பக்கமும், அவர்கள் கோடு போட்டவுடன் ஒட்டுமொத்த நிர்வாகம், காவல்துறை அதில் ரோடு போடும் விதத்தில் அதிகார துஷ்பிரயோ கம் செய்வதையும் அண்மைக் காலத்தில் அடிக்கடி பார்க்கிறோம். ரயில்வே பாதுகாப்பு படை காவலர் ஓடும் ரயிலில் மூன்று இஸ்லாமியர்களை துப்பாக்கி யால் சுட்டுத் தள்ளியதும் இந்தக் காலத்தில் தான். இந்துத்துவ ராஷ்டிரத்தில் சிறுபான்மை மக்கள் இரண்டாம் தர குடிமக்கள் தான் என்பதை நோக்கிய நகர்வுகள் இவை என்பதை கவனிக்க வேண்டும்.
ஒட்டு மொத்தமாக எதிர்ப்போம்
ஆர்எஸ்எஸ் பாஜகவின் மனுவாதக் கொள்கை, பட்டியல் இன மக்கள், பழங்குடியின மக்கள், பெண்கள், உழைப்பாளி மக்களை ஓரம் கட்டுகிற வேலையைத் தான் செய்கிறது. இதுதான் மோடி அடிக்கடி சொல்லும் புதிய இந்தியா. இந்தத் தீவிர வலதுசாரி சக்திகளை பின்னுக்குத் தள்ளுவதற்கு அரசியல், பொருளா தாரம், சமூகம், பண்பாடு என்று பல தளங்களில் செயல்பட வேண்டும். கார்ப்பரேட் ஆதரவு கொள்கை மற்றும் மனுவாதக் கோட்பாடுகள் இரண்டையும் எதிர்த்த போராட்டமாக உருவெடுக்க வேண்டும். இப்போராட்டத்தின் ஒரு முக்கியப் புள்ளியாக செப்டம்பர் 7 மறியல் நடைபெறுகிறது. இது வெற்றி பெறுவது ஒன்றிய ஆட்சியாளர்களுக்கும் மதவெறி யர்களுக்கும் ஓர் எச்சரிக்கையாக அமையும்.