articles

img

சாதி ஒழிப்புக்கான பாதை எது? - கே.சாமுவேல்ராஜ்

சாதியற்ற சமத்துவ சமூகம் படைத்திடுவோம். இது வெறும் வார்த்தையல்ல. லட்சக்கணக்கான இடது சாரி இயக்க ஊழியர்கள் இதற்காகவே தங்களை அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்றி வருகின்றனர். மனித வாழ்வில் திணிக்கப்பட்டுள்ள ஏற்றத்தாழ்வுகள் எல்லா வற்றையும் ஒரு சேர ஒழிப்பதற்காகவே கம்யூனிஸ்டுகள் உழைத்து வருகிறார்கள். நீ உனது மகிழ்ச்சிக்காக, உனது பிள்ளைகளின் மகிழ்ச்சிக் காக எப்போது வாழப்போகிறாய் என்பது பேராசான் மார்க்ஸ் முதல் கம்யூனிஸ்டுகள் காலம்தோறும் எதிர்கொண்டு வரும் வினாக்கள். நாங்கள் மகிழ்ச்சிகரமானதொரு வாழ்வை மக்களுடன் பகிர்ந்து கொள்ளவே விரும்புகிறோம். அதற்குத் தடையாக இருக்கிற யாதொன்றின் மீதும் போர் தொடுப்பதே கம்யூனிஸ்ட்டுகளுக்கு மகிழ்ச்சியைத் தரும் விடயங்களாகும்.

புனிதமும், தீட்டும்

சாதி தன்னகத்தே அசைக்கமுடியாத கோட்பாடுகளைக் கொண்டுள் ளது. சாதி அடுக்கில் மேலே செல்லச்செல்ல புனிதமும், கீழே இறங்கி வரவர தீட்டும் உள்ளவர்களாக மனிதர்களைப் பிரிக்கிறது. இந்தப் பிரி வினைக்கு கடவுளின் பெயரால் மத அடிப்படையிலான தத்துவார்த்த பின்புலத்தையும் கொடுக்கிறது. இன்றைய நவீன சமூகத்திலும் மிக அருகில் நின்று கடவுளர்க ளைத் தொட்டுத் தீண்டி, மக்களின் பாடுகளைக் கடவுளர்களுக்கு கவனப்படுத்திக் கொண்டிருக்கிற ஒரு குறிப்பிட்ட சாதியின் புனிதம் பிறப்பில் இருந்து துவங்குகிறது. 32,87,263 சதுர கிலோமீட்டர் பிரம்மாண்டமான பரப்பளவு கொண்ட ஒரு தேசத்தில் எவ்வித குற்ற மனப்பாங்கும் இன்றி இது தொடர்கிறது என்றால் பிறப்பின் புனிதத்தை ஏற்கிறோம் என்று தானே பொருள். கேரளத்தில் தோழர் பினராயி விஜயன் அரசு பட்டியலினத்தவர் உள்பட பலரை அர்ச்சகர்களாக நியமித்ததோடு அர்ச்சகர் நியமனத்தில் இட ஒதுக்கீடு என்றும் அறிவித்து அர்ச்சகர் பணியை ஜனநாயகப்படுத்தி யுள்ளது. தமிழ்நாட்டிலும் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்கிற சட்டமும் அதன் அடிப்படையிலான நியமனங்களும் நடந்துள்ளன என்பவை மட்டும் தான் நாட்டின் விதிவிலக்குகள். இங்கேயும் கூட கோவில்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டால் இன்னும் கடக்க வேண்டிய தூரம் பெரிதாகவே உள்ளது.

ஏன் இந்த இழிவு?

மேலிருந்து கீழ் வரிசையில் பிறப்பின் அடிப்படையில் ஏன் இழிவு படுத்தப்பட்டார்கள். இரண்டு பிரதான காரணங்கள் இதற்கு உண்டு. ஒன்று அவர்களை பொது வெளியில் இருந்து அந்நியப்படுத்துவது. அவ்வாறு பொது வெளியில் இருந்து அகற்றுவதன் மூலமாக உழைப்பை மட்டுமே நம்பி வாழக்கூடிய உடமை ஏதுமற்றவராக்குவது. இரண்டாவது ஏதுமற்றவர்களின் மீது மேலாதிக்கம் செலுத்தி அவர்களின் உழைப்பை இரக்கமின்றிச் சுரண்டுவது. பட்டியலினத்தவர் மட்டுமல்ல, வர்ணாசிரமம் சூத்திரர்கள் என வகைப்படுத்தி வைத்துள்ள பிற்படுத்தப்பட்டவர்களும் கொடூரமாகச் சுரண்டப்பட்டனர். இன்றும் சுரண்டப்படுகின்றனர்.இழிவு சுமத்தப்படு வது பண்பாட்டு காரணங்களுக்காக மட்டுமல்ல; பிரதானமாக உழைப்புச் சுரண்டலுக்காகவே.

சட்டப்படியான சுரண்டல்

சாதியின் சுரண்டல் அதிகாரம் எல்லையற்றது. நிலமும் அதைச் சார்ந்த வேளாண்மையும் மட்டுமே பிரதானமாக இருந்த காலத்தில் “காத்திருப்பு படை” போல் மழைபெய்தவுடன் வயலில் இறங்க நிலவுட மையாளர்களுக்கு வேலையாட்களைச் சாதி ஒழுங்கமைத்து வழங்கி யது. இவர்களுக்கு ஆண்டைகளின் நிலத்தில் வேலை செய்வதைவிட வேறு சிந்தனையே இருக்க முடியாது. தலைமுறை தலைமுறையாக, குடும்பம் குடும்பமாக இந்தக் கொடுமை தொடர்ந்தது. இந்திய சமூக அமைப்பில் நீண்ட நெடுங்காலம் நீடித்த “சுயதேவை பூர்த்தி கிராமங்கள்” என்கிற சமூக கட்டுமானத்தில் உடமையும்,உழைப்பும் எவ்வாறு இருந்தன என்பதை ஆய்வுக்கு உட்படுத்தினால், இக்கிராமங்கள் எத்தகைய இரக்கமற்ற திறந்த வெளிச் சிறைகள் என்பதை உணரமுடியும்.

பாசன வசதியுள்ள நிலங்கள் அனைத்தும் உயர்சாதியினரிடமும், வறண்ட அல்லது மானாவாரி நிலங்கள் பிற்படுத்தப்பட்டவர்களில் உயர டுக்கில் இருந்த சமூகங்களிடமும் இருந்தன. மேற்சொன்ன சமூகங்களுக்குத் தேவையான உழைப்பை வழங்குவது இன்றைய பிற்படுத்தப்பட்ட, பட்டியலினத்தவரின் கடமை யாக்கப்பட்டிருந்தது. இதற்குள் சாதி மிக நுணுக்கமான வேறுபாடு களையும் வைத்திருந்து சுரண்டப்படும் சாதிகளையே மேல், கீழ் என  வரிசைப்படுத்தி அவர்கள் ஒன்றிணைவதைத் தடுத்தும் வைத்திருந்தது. கட்டாய உழைப்பு, இலவச உழைப்பு, குடி ஊழியம் என்கிற பெயர்க ளால் உழைப்பு மானாவாரியாகச் சுரண்டப்பட்டது. இவை எல்லாம் சட்டப்பூர்வமானது. 1843 ஏப்ரல் 7-ஆம் தேதி கிழக்கிந்திய கம்பெனி அரசு அடிமை ஒழிப்புச் சட்டத்தை இயற்றும் வரை சந்தைச் சரக்கா கவே மனிதர்கள் விற்கப்பட்டனர்,வாங்கப்பட்டனர். இந்த நிலவுடமை யின் மிச்சங்கள் இன்று வரை நீடிப்பதைப் பார்க்கிறோம். பட்டியலின மக்களுக்குச் சொந்தமாக நிலமில்லாத மாநிலங்களில் தமிழ்நாடும் விதிவிலக்கில்லை. தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் ஏறக்குறைய 92 சதவீத தலித் மக்களிடம் நிலமில்லை.

ஏற்றத்தாழ்வுகள்

இன்றும் வாழ்வின் அனைத்து விழுமியங்களிலும் பாரதூரமான ஏற்றத்தாழ்வுகள் நீடிக்கின்றன. பழங்குடியினத்தவருக்கும், பட்டியலி னத்தவருக்கும் இடையிலும், பட்டியலினத்தவருக்கும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் இடையிலும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் இடையிலும், பிற்படுத்தப் பட்டவர்களுக்கும், முற்படுத்தப்பட்டவர்களுக்கும் இடையிலும் சாதிப்படி நிலைக்கு ஏற்ப பொருளியல் படிநிலையும் உள்ளன. நாட்டின் உயர் பதவிகளான ஒன்றிய அரசு செயலர்களில் ஓரிருவர்களைத் தவிர அனைவரும் உயர் சமூகத்தினர்களே. அதே போல் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களின் நீதிபதிக ளிலும் இது நான் நிலைமை. நாட்டில் செயல்படுகிற ஐஐடி மற்றும்  ஐஐஎம்-களில் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின,பழங்குடியின மாணவர்க ளுக்கு இட ஒதுக்கீட்டின்படி கிடைக்கவேண்டிய இடங்களில் ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ ஆயிரம் இடங்கள் பறிக்கப்படுகின்றன. இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள்தொகைப் பங்கில் உயர் சாதியினர் 14% மட்டுமே உள்ள போதிலும், அவர்கள் இந்தியாவில் 94% நிறுவன பதவிகளை ஆக்கிரமித்துள்ளனர். ஓபிசிக்கள் (பகுஜன்கள்) 2%க்கும் குறைவாகவும், எஸ்சி/எஸ்டிகள் (தலித்கள் மற்றும் ஆதிவாசி கள்) வெறும் 0.01% ஆகவும் உள்ளனர் என்று 2019 ஆம் ஆண்டு அலாஸ்கா பல்கலைக்கழகத்தில் அலாஸ்கா, ஆங்கரேஜில் உள்ள அஜித் தயானந்த், ஹான் டோங்கர் மற்றும் ஜான் நோஃப்சிங்கரின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கில தொலைக்காட்சி செய்தி சேனல்களில் தலைமைப் பதவி களில் 89 சதவீதம் பேர் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும், முன்னணி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளர்களில் 76 சதவீதம் பேர் அதே  பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும் அறிக்கை கூறுகிறது. இந்த சேனல்களில் விவாதங்களில் பங்கேற்ற குழு உறுப்பினர்க ளிடையே மேலே குறிப்பிட்ட சாதி ஆதிக்கம் அப்படியே இருந்தது. விவாதத்தில் பங்கேற்றவர்களில் 5.6 சதவீதம் பேர் பட்டியல் சாதியி னரைச் சேர்ந்தவர்கள். இந்த எண்ணிக்கையில் பட்டியல் பழங்குடி யினர் 1 சதவீதத்தை கூட தாண்டவில்லை. ஆயிரம் இந்திய தனியார் நிறுவனங்களில் நடத்தப்பட்ட ஆய்வு, கார்ப்பரேட் போர்டு உறுப்பினர்களில் சுமார் 92.6 சதவீதம் பேர் இரண்டு வர்ணக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்பதைக் காட்டுகிறது; பிராம ணர்கள் (44.6%) மற்றும் வைசியர்கள் (46.0%). ஆனால் அவர்களின் மக்கள் தொகை பொது மக்கள் தொகையில் சுமார் 15 சதவீதம் ஆகும். மறு புறத்தில் 2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, பட்டியலின மக்களின் சராசரி தனிநபர் வருமானம் ரூ 47,124 ஆக இருந்தது, இது தேசிய சராசரியான ரூ 74,000 ஐ விட குறைவு.

சாதி ஒழிப்பிற்கான பாதை

சாதியின் இருப்பு பண்பாட்டுக் காரணிகளில் மட்டும் இருக்க வில்லை. மதத்தின் பின்புலத்தில் மட்டுமல்ல. அதற்கு மிக ஆழமான பொருளியல் காரணங்கள் இருக்கின்றன என்பதையே மேற்சொன்ன ஏற்றத்தாழ்வுகள் உணர்த்துகின்றன. ஏற்றத்தாழ்வுகள் என்றால் சுரண்டல். இந்தச் சுரண்டல் ஆளும் வர்க்கத்திற்கு உவப்பானது என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. அதாவது சாதி இந்திய மண்ணில் உருவான காலத்தில் இருந்து அது ஆளும் வர்க்கத்தின் சுரண்டல் ஆயுதமாகவே இருந்து வரு கிறது.

எனவே சாதி என்கிற பிற்போக்கு கருத்தியல் ஆளும் வர்க்கத்திற்கு  உதவுகிற சித்தாந்தம்.முற்போக்கு கருத்தியலுக்கு முரணானது. இதனை உணர்ந்து கொண்டு கருத்தியல் தளத்திலும், களத்திலும் சாதி  ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதே நேரத்தில்  பொருளாதாரத்தில் பதிந்திருக்கிற அதன் அடித்தளத்தை ஒழிக்காமல் முற்றிலுமாக சாதியத்தை ஒழித்திட முடியாது. இது தான் இடதுசாரிகளின் சாதி ஒழிப்புப் பாதை. தஞ்சைத் தரணி யில் “விடிந்தபின் ஏர்கட்டு, முழங்காலுக்கு மேலே, துணியை ஏற்றிக்கட்டு,  அடித்தால் திருப்பி அடி”என முழங்கிய செங்கொடியின் பாதை.

கட்டுரையாளர் :பொதுச் செயலாளர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி