“இன்னிக்கு பேப்பர்ல என்ன முக்கியமான செய்தி”
“உலகக் கோப்பை சார்”
“கிரிக்கெட்லாம் சூதாட்டம்.. அதெல்லாம் பாக்காதனு எங்க அப்பா சொல்றாரு”
“அந்த விளையாட்டு சூதாட்டம் இல்ல. அத வெச்சு சூதாடுறாங்க.. அது தப்பு... கிரிக்கெட்டுனு இல்ல.. எந்த விளையாட்டு அதிகமா விளையாடப்படுதோ அத வெச்சு சூதாடுவாங்க”
“சார்.. இஸ்ரேல்-பாலஸ்தீன சண்டைதான் அதிகமா முதப்பக்கத்துல செய்தியா வருது”
“பல இடங்கள்ல பக்கத்து, பக்கத்து நாடுகள்லாம் சண்டை போட்டுட்டே இருக்காங்களே, ஏன் சார்..?”
“நீ கேக்குறது நல்ல சந்தேகம்தான்... ஆனா இங்க ஒரு வித்தியாசம் இருக்கு”
“சண்டை நடக்குதுல்ல சார்”
“ஆமா நடக்குது... ஆனா, ரெண்டு நாடுன்னு சொல்ல முடியல.”
“பெரிய நாடெல்லாம் இஸ்ரேலுக்கு ஆதரவுனு சொல்றதப் பாக்குறீங்களா”
“இல்ல... இஸ்ரேல்னு ஒரு நாடு இருக்கு... பாலஸ்தீனம்னு நாடு இல்ல”
“அப்புடியா சார்...?”
“ஆமா... இந்தப் பகுதிலாம் நாம இருந்த மாதிரி ஆங்கிலேயர் ஆதிக்கத்துல இருந்துச்சு.. 1948ல இஸ்ரேல் உருவாச்சு.. ஆனா பாலஸ்தீனம்னு உருவாகல. நாடுங்குற அந்தஸ்து வேணும்னு போராடிட்டு இருக்காங்க”
“இஸ்ரேல்லயே பாலஸ்தீனத்துக்கு ஆதரவு இருக்குனு எங்கப்பா சொன்னாரு, உண்மையா சார்”
“ஆமா.. உண்மைதான். அதோட ஜியோனிசம்னு சொல்ற கொள்கையயும் ஒரு பகுதி மக்கள் எதுக்குறாங்க”
“ஜியோனிசம்னா என்ன சார்..?”
“ஜியோன்குறது ஒரு மலை.. அந்த மலைய அடையாளமா வெச்சு, அந்தப்பகுதியெல்லாம் யூதர்களோட நிலம், அதுல யூதர்களுக்குனு தனி நாடு உருவாகணும்னு கேட்டவங்க தங்களை “ஜியோனின் காதலர்கள்”னு சொல்லிக்கிட்டாங்க”
“காதலர்களா.. காந்தி மாதிரி அகிம்சைய கடைப்பிடிச்சாங்களோ சார்”
“அதான் இல்ல... அதுவும் இப்போ இருக்குற ஜியோனிசவாதிகள் படு பயங்கரமானவங்க.”
“பயங்கர தீவிரமா இருப்பாங்களா... தீவிர பயங்கரமா இருப்பாங்களா சார்”
“சார்.. சார்... இவன் வடிவேறு காமெடியக் காப்பி அடிக்குறான்”
“புராணக்கதைகள்லாம் உண்மைனு சொல்லி அரசியல் பண்ணுவாங்க”
“நம்ம ஊர்லயும் உண்டுதான சார்”
“ஆமா, உண்டு. அதனால எல்லாமே ஒண்ணா இருக்கணும்னு திணிக்க முயற்சிக்குறாங்க”
“இவங்களுக்கு ஒரு நாள் கழிச்சுதான் தீபாவளியாம்.. பக்கத்தில் இருந்த வட இந்திய மாணவியைக் காட்டினார”
“ஆமா... தீபாவளிக்கான காரணமும் வேற”
“அப்புடியா சார்”
“ராமனும், சீதையும் நாட்டுக்கு திரும்புற நாள்னு வட இந்தியாவுல கொண்டாடுறாங்க... நரகாசுரன, கிருஷ்ணர் கொன்ன நாளுன்னு தென் இந்தியாவுல சொல்றாங்க”
“கிருஷ்ணர் தென் இந்தியாக்காரரா சார்..?”
“இல்ல.. அது மட்டுமில்ல... இது ஒரு புத்தப் பண்டிகைன்னு ஆய்வாளர்கள் சொல்றாங்க.. அதோட, சமண மதத்தோட கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் பாவாபுரி நகரத்துலு இரவு முழுக்க சொற்பொழிவு ஆற்றுனாராம். உக்காந்திருந்த அந்த இருக்கைலயே அவர் இறந்துவிட்டாராம். அந்த நாள்தான் விளக்குகள ஏத்தி தீபாவளினு சமணர்களால கொண்டாடப்படுது”
“அதான் தீபாவளி, தீவாளி, தீப ஒளினு பல மாதிரி சொல்றோமா”
“இதுமாதிரி யூதர்கள் கிட்டயும் வேறுபாடுகள் இருக்கா சார்”
“இருக்கு... ஆனா, ஒண்ணுதான் இருக்கணும்னு ஜியோனிசவாதிகள்லாம் சொல்றாங்க”
“புராணக்கதைலாம் உண்மைனு சொல்றதுல என்ன பிரச்சனை சார்..?”
“அறிவியல் பின்னுக்குப் போகும்ல சார்.” ஒரு மாணவி.
“இஸ்ரேலுக்கு எங்கருந்து சார், இவ்வளவு தைரியம்... ரொம்ப பலமான நாடா அது..?”
“நம்ம ஸ்கூலுக்குப் பக்கத்துல காவலர்களாம் நிக்குறாங்கள்ல, பாத்துருக்கீங்களா”
“பாத்துருக்கோம் சார்... புறக்காவல் நிலையம்னு போட்டுருக்கும்”
“சரியாச் சொன்னப்பா... அதாவது, வேற ஒரு ஸ்டேஷனுக்கு துணை நிலையம் இது.”
“ஆமா சார்... எங்க டீக்கடைக்குக்கூட அங்க போய்தான் பில் குடுதது பணம் வாங்கிக்கணும்”
“இஸ்ரேலும் புறக்காவல் நிலையம் மாதிரிதான்”
“காவல்துறைனா அவசியம்தான சார்”
“அவசியம்தான்... யார் மேல, எதுக்காக பாயுறாங்கங்குறதும் முக்கியம்..”
“ஓ... அப்போ மெயின் ஸ்டேஷன் எங்க சார்”
“அது அமெரிக்கா”
“அதுவாத்தான் இருக்குனு நாங்க நெனச்சோம் சார். அப்போ நல்லதுக்கு பாய மாட்டாங்க” என்று சொல்லிக் கொண்டே புத்தகப் பைகளை தோள்களில் மாட்டத் தொடங்கினார்கள்.